Skip to main content

“ஒரே ஃபோன் கால்தான்... என் பிரச்சனையை முடித்து வைத்தார்...” ; விஜயகாந்த் எனும் நடிகர்களின் பாதுகாவலர்

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

Actor Shyam Shared memory about Vijayakanth

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக ஷ்யாம் அவர்களைச் சந்தித்தோம். பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் பற்றி அவர் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான தகவல் பின்வருமாறு...

 

விஜயகாந்த் பெரிய மாஸ் ஹீரோ; பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். நடிகர் சங்கத்து தலைவர். ஆனாலும் நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட எவ்வித கலை நிகழ்ச்சிகள் நடந்தாலும் எந்த விதமாகவும் அலட்டிக்கொள்ளாமல் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் வந்தால் பவுன்சரைப்போல முன் வந்து நின்று பாதுகாத்து அரவணைத்து விழா மேடைகளுக்கு அழைத்துச் செல்வார். அதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேண்டும். அதனால்தான் அவரைச் செல்லமாக கேப்டன் என்கிறோம். சின்ன நடிகர் பெரிய நடிகர் என்ற எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி அனைவரையும் சரிசமமாகப் பார்க்கக்கூடியவர்.

 

எனக்கும் ஒரு பிரச்சனை வந்தது. என்னை மிரட்டுவதற்கு என் வீட்டிற்கு ஆட்கள் எல்லாம் வந்தார்கள். தயாரிப்பாளர்களிடம் முழுப்பணத்தைக் கொடுத்தால் தான் நடித்துக் கொடுப்பேன் என்றும் டப்பிங்க்கு ஒத்துழைப்பு தரமாட்டேன் என்றெல்லாம் நான் சொன்னதாக குற்றச்சாட்டு வைத்து என்னை மிரட்டினார்கள். அப்போது விஜயகாந்த் அவர்களுக்கு ஃபோன் போட்டேன். “நீ ஃபோன் ஆஃப் பண்ணி வச்சுட்டு தூங்கு”ன்னு சொல்லிவிட்டு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு கால் பண்ணி “இனிமேல் அது ஷ்யாம் பிரச்சனையில்லை, என்னோட பிரச்சனை” என்று சொல்லியிருந்தார். 

 

எங்கு பார்த்தாலும் மதுரை வட்டார வழக்கு மொழியில் “ஏய் தம்பி ஷ்யாம் எங்க மதுரைக்கார பய” என்று எல்லோரிடமும் சொல்வார். ஓடோடிப் போய் கட்டிப்பிடித்துக் கொள்வேன். அவரின் அன்பு என்பது என்றென்றும் அளவு கடந்தது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.