fwaefa

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இதையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி உடல்நலம் குணமாக வேண்டி நேற்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தார்.

Advertisment

இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வீடுகள், கோயில்கள் என அனைத்திலுமே எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்தார்கள். இந்நிலையில் எஸ்.பி.பி குணமாக வேண்டி நடிகர் சதிஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

"அன்பான எஸ்.பி.பி சார்,

Advertisment

பயணத்திலும் நடைப் பயிற்சியிலும் முயற்சியிலும், அயற்சியிலும், வெற்றியிலும், தோல்வியிலும் எங்களை இயக்குவது உங்கள் குரல் தான்... தாய்க்குப் பிறகு அதிகம் கேட்டதும் உங்கள் குரல் தான்..

குரலால் உலகையே வென்ற நீங்கள் கரோனாவையும் வெல்ல கடவுளைப் பிரார்த்திக்கிறோம் ??????" என கூறியுள்ளார்.

Dear SPB Sir...

பயணத்திலும் நடைப் பயிற்சியிலும் முயற்சியிலும் அயற்சியிலும்

வெற்றியிலும் தோல்விலும் எங்களை இயக்குவது உங்கள் குரல் தான்... தாய்க்குப் பிறகு அதிகம் கேட்டதும் உங்கள் குரல் தான்..

குரலால் உலகையே வென்ற நீங்கள் கொரோனாவையும் வெல்ல கடவுளைப் ப்ரார்த்திக்கிறோம் ??????

— Sathish (@actorsathish) August 20, 2020