actor rajinikanth inquired about kamalhassan health

Advertisment

நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில நாட்களாக இருமல் சளி இருந்ததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டது. அதில் நடிகர் கமலுக்கு கரோனாதொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்துமருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகநடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது நண்பரான கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் விரைவில் குணமடைந்து தங்கள் பணியைத்தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.