Skip to main content

நடிகராக இருந்தபோதே உளவுத்துறை வைத்திருந்த எம்.ஜி.ஆர்! 'யாரை நம்பி நான் பிறந்தேன்...' பாடல் பதிவின்போது நடந்த சுவாரசிய சம்பவம்!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

rajesh

 

நடிகர் ராஜேஷ், சினிமா, இலக்கியம், ஆன்மிகம், சினிமா பிரபலங்களுடனான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், 'யாரை நம்பி நான் பிறந்தேன்...' என்ற பாடல் பதிவின்போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான 'எங்க ஊரு ராஜா' என்ற படத்தில் 'யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க...' என ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். இப்பாடலுக்கு கவிஞர் கண்ணதாசன் வரிகள் எழுத, டி.எம். சௌந்தர்ராஜன் பாடியிருந்தார். இந்தப் படம் வெளியானதுபோது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. நான் அந்த நேரத்தில் டீச்சர் ட்ரைனிங் படித்துக்கொண்டிருந்தேன். உடன்படித்தவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்தப் படம் பார்த்த நினைவு இன்றும் இருக்கிறது. 'யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க...' என்ற பாடல் பதிவு நேரத்தில் நடந்த ஒரு சுவாரசியமான விஷயம் பற்றி உங்களுக்கு கூறுகிறேன்.

 

பொதுவாக சினிமா உலகத்திற்குள் என்ன நடந்தாலும் எம்.ஜி.ஆருக்கு தகவல் வந்துவிடும். அதற்காக அவர் நிறைய ஆட்கள் வைத்திருப்பார். அவர்கள் அவ்வப்போது வந்து எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவித்துவிட்டுச் செல்வார்கள். நாம் அடுத்த என்ன செய்யப்போகிறோம் என்பதைவிட, எதிராளியின் கூடாரத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அறிந்துவைத்திருப்பதுதான் வெற்றியை அடைவதற்கான வழி என்பார்கள். அதை எம்.ஜி.ஆரும் நன்றாக அறிந்துவைத்திருந்தார். 'யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்றபின்னே வாங்கடா வாங்க...' என சிவாஜி படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கிறது என்பது தெரியவந்ததும், எம்.ஜி.ஆரிடம் வந்து இந்தத் தகவலை அவரது ஆட்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை எம்.ஜி.ஆரிடம் வந்து தெரிவித்ததற்கும் ஒரு காரணம் இருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காங்கிரஸ்காரர்; திமுக ஆட்சிக்கு வந்த காரணத்தினால் 'யாரை நம்பி நான் பிறந்தேன்' என்ற வரிகளைப் பாடலில் வைத்திருப்பாரோ என்ற சந்தேகத்தினால் அதை எம்.ஜி.ஆரிடம் வந்து தெரிவித்தனர். அவர்களுக்கு வேறுசில சந்தேகங்களும் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், டி.எம்.எஸ் அவர்களைத் தவிர்த்து நிறைய புதிய பாடகர்களை அறிமுகம் செய்துகொண்டிருந்தார். அதனால் டி.எம்.எஸ்ஸிற்காக இப்படி வரிகளை கண்ணதாசன் எழுதியிருக்கிறாரோ என்று நினைத்தனர். மேலும், தமிழ்த்தேசிய கட்சி வைத்திருந்த ஈ.வி.கே. சம்பத்தின் ஆதரவாளரான கண்ணதாசன், திமுக ஆட்சிக்கு வந்ததையடுத்து, தன்னுடைய ஆதங்கத்தை பாட்டில் இவ்வாறு வெளிப்படுத்திக்கொள்கிறாரோ என்றும் நினைத்தனர். எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு அவருக்கென உளவுத்துறை இருந்தது. ஆனால், நடிகராக இருந்தபோதே ஓர் உளவுத்துறையை சினிமா வட்டாரத்திற்குள் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்கள், எதிர்க்கூடாரத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் எம்.ஜி.ஆர் கவனத்திற்கு கொண்டுவந்துவிடுவார்கள். சினிமா வட்டாரத்திலுள்ளவர்களெல்லாம் இவர்களை எம்.ஜி.ஆரின் உளவுத்துறை என்றுதான் கூறுவார்கள். பின்பு விசாரித்ததில் அது படத்தோடு ஒன்றியுள்ள பாடல் காட்சி எனத் தெரியவந்தது. 

 

'யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்றபின்னே வாங்கடா வாங்க...' என்ற பாடலில் பல அற்புதமான கருத்துகளை கண்ணதாசன் கூறியிருப்பார். 'குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே... பெட்டியிலே பணமில்லே பெத்தபுள்ளை சொந்தமில்லே...' பெட்டியிலே பணம் இல்லையென்றால் பெற்ற பிள்ளையும் சொந்தமில்லை என்பது எவ்வளவு அழகான வரி பாருங்கள். இன்றைய காலத்தில் தங்களது பெற்றோர்களை வெறும் ஏ.டி.எம் கார்டுபோலத்தான் குழந்தைகள் நினைக்கிறர்கள். இதுதான் உலக யதார்த்தம். 'தென்னையப் பெத்தா இளநீரு... பிள்ளையப் பெத்தா கண்ணீரு... பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா... பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா... சோதனையைப் பங்குவச்சா சொந்தமில்லே பந்தமில்லே...'. எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் பாருங்கள். முதல் பாதியில் இவ்வாறு விரக்தியை வெளிப்படுத்தியவர், அடுத்து தன்னம்பிக்கை கொடுக்கும் வரிகளை எழுதியிருப்பார்.  

 

'நெஞ்சமிருக்கு துணிவாக... நேரமிருக்கு தெளிவாக... நினைத்தால் முடிப்பேன் சரியாக... நீ யார் நான் யார் போடா போ... ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மலை வரும்... தேடிவரும் காலம் வந்தால் செல்வமெல்லாம் ஓடிவரும்...'. கடினமாக உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். நமக்கான உரிய நேரம் வரும்போது செல்வம் ஓடிவரும் எனப் பாடல் கேட்கும் அனைவருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும்படி எழுதியிருப்பார் கண்ணதாசன். இன்று 60 வயதைக் கடந்த நிலையில் உள்ள பலருக்கும் இந்தப் பாடல் மிகவும் மிகவும் பிடித்தமான பாடல்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

ஆர்.எம்.வீரப்பனுடனான அனுபவங்கள் - ரஜினி, கமல் உருக்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
rajini kamal about rm veerappan

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராகப் பணியாற்றியவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில், அதிமுக தனி அணி உருவாகக் காரணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்கரான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், நக்கீரன் ஆசிரியர், இளையராஜா, பாரதிராஜா, சிவக்குமார் உள்ளிட்டோர் வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் வீரப்பன் பற்றிய அனுபவங்களை பகிர்ந்தனர். 

ரஜினி பேசுகையில், “ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர்.  அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷியர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி, பேரும், புகழுடன் இன்றும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஆர்.எம் வீரப்பன் எப்போதும் பணத்திற்கு பின்னால் போனவர் இல்லை. அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் வீரப்பனுக்கும் இடையேயான நட்பு மிக ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. அவர் இப்போது இல்லை என்பது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்றார். 

கமல் பேசுகையில், “ஆர்.எம் வீரப்பனை சிறுவயதில் கலையுலகத்திலும் பின்பு அரசியல் உலகத்திற்கு அவர் சென்ற போதும், உயர்ந்த ஒரு உருவமாகத் தான் பார்த்து கொண்டிருந்தேன். பின்பு எம்.ஜி.ஆர் நடித்த அதே கம்பெனியில் நானும் வேலை செய்வேன் என நினைத்தது கிடையாது. அவருடைய பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவமும் ஞானமும் எனக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது மிகையாகாது. திரையுலகத்திலும், அரசியலிலும் அவர் மூதறிஞர். எம்.ஜி.ஆரின் வலது கையாக திகழ்ந்தவர். அந்த நிலை மாறாமல் என்றும் அவர் நினைவாக இருந்து வாழ்ந்து மறைந்தவர்” என்றார். ரஜினி, கமல் இருவரும் உருக்கமுடன் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.