Advertisment

"ஹீரோயினுடன் பேச வைத்தால் ஜாலியாக இருக்கும் " - இணையத்தில் வைரலாகும் பிரபுவின் பேச்சு !

actor prabhu finished dubbing kaathu vaakula rendu kadhal movie

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="036ef311-dbee-4ed3-b75a-5e4941ed316f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_36.jpg" />

Advertisment

சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது. அந்த வகையில்,நடிகை நயன்தாரா ‘காத்துவாக்குலரெண்டு காதல்’ படத்தின் டப்பிங் பணியை நேற்று (02.12.2021) தொடங்கிய நிலையில், தற்போது நடிகர் பிரபுவும்தனது டப்பிங் பணியைத் தொடங்கியுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட வீடியோ கட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், காஃபி குடித்துக்கொண்டு, “என்னப்பா தனியா டப்பிங் பேச வைக்கிறீங்க, ஹீரோயினுடன் டப்பிங் பேச வைத்ததால்தான் ஜாலியாக இருக்கும்” என்று நடிகர் பிரபு விளையாட்டாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Kaathuvaakula Rendu Kaadhal prabhu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe