Skip to main content

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் நட்டி!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

natty

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே நிலவிவரும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்துமாறு அறிவுறுத்திவருகின்றனர். 

 

அந்த வகையில், பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ், தன்னுடைய முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இத்தகவலை, அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்