Skip to main content

“உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள்...” -பிரகாஷ் ராஜுக்கு பிரபல நடிகர் கண்டனம்...

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

prakash raj

 

 

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து, சிறந்த நடிகராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். பாஜகவை எதிர்த்து, கடுமையாக விமர்சித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். அண்மையில் பாஜக ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் பவன் கல்யாணையும் விமர்சித்திருந்தார். தற்போது இதற்கு பவன் கல்யாணின் சகோதரர் நாக பாபு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

 

அதில், “அரசியலில் முடிவுகள் பல முறை மாறும். அதன் நோக்கமே பல நாட்களுக்கு மக்களுக்குச் சேவை செய்வதும், கட்சியின் நலன் காப்பதுமே ஆகும். ஜி.ஹெச்.எம்.சி. தேர்தலில் எங்கள் தலைவர் பவன் கல்யாண் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கும் என நம்புகிறேன். பிரகாஷ்ராஜின் அரசியல் அறிவை பாஜக எம்.பி. சுப்பிரமணிய சுவாமி புரிந்துகொண்டு விட்டார். அந்த விவாதத்தில் பிரகாஷ்ராஜின் நாக்கு கட்டுண்டதைப் போல இருந்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. உங்கள் பார்வையில் பாஜகவின் முடிவுகள் சரியில்லை என்றால் அதை விமர்சிப்பது சரியே.

 

ஆனால் நல்ல விஷயங்களைப் பாராட்டக்கூடாது என்கிற உங்கள் நோக்கத்தைப் பற்றி என்ன சொல்ல? ஜனசேனா கட்சியுடன் இந்த மாநிலத்தை வளர்ச்சி பெறச் செய்ய பாஜகவால் முடியும். உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள் எவ்வளவு பேர் முயன்றாலும் எங்கள் வெற்றியைத் தடுக்க முடியாது. பாஜக தலைவர்களை நீங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். ஜனநாயகத்துக்கு இந்த கட்சி என்ன மதிப்பு தருகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

 

நீங்கள் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு சித்திரவதை தந்திருக்கிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பணத்துக்காக அவர்களை அல்லல் பட வைத்து, தேதிகள் கொடுத்து அதை ரத்து செய்ததெல்லாம் அனைவருக்கும் தெரியும். முதலில் பவன் கல்யாணைப் பற்றிப் பேசுவதற்கு முன் நாம் இருவரும் பேசுவோம்" என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மாற்றத்திற்காக வாக்களித்தேன்” - பிரகாஷ் ராஜ்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
prakash raj voted his vote in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூருவில் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்களிப்பது ரொம்ப முக்கியமான விஷயம். நீங்க தேர்ந்தெடுக்க போறவங்க தான் உங்களுடைய எதிர்காலத்தை முடிவு பண்ண போறவங்க. உங்களுடைய குரல் அங்கு எழுப்பனும்னா ஓட்டு போடுங்க. நீங்க ஓட்டு போடலைன்னா, நீங்க கேள்வி கேட்கிற தகுதியும் அந்த உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும். குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள், அவர்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைக்கும்” என்றார். 

இதனிடையே அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ மூலம் பேசிய அவர், “மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்தேன். நான் நம்பும் மற்றும் என்னுடைய குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்யும் வேட்பாளருக்கு வாக்களித்தேன்” என்றார். 

Next Story

“மலிவான உரை” - பிரதமரின் பேச்சுக்கு பிரகாஷ் ராஜ் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Prakash Raj condemns pm modi spech

18ஆவது நாடாளுமன்ற தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என பேசினார். இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடியின் இந்த பேச்சு ‘மத வெறுப்பு பேச்சு’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டித் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “அவமானம்... இந்த மலிவான உரையை வரலாறு ஆவணப்படுத்தும்; பிரதமர் மோடி வெறும் அதிகாரத்திற்கு ஆசைப்படுபவராக இருக்கிறார்; முதற்கட்ட வாக்குப்பதிவு அவரை உலுக்கியுள்ளது; காத்திருங்கள், மக்கள் அவருக்கு பாடம் கற்பிப்பார்கள்” என பதிவிட்டுள்ளார்.