Skip to main content

சுயசரிதை எழுதும் ‘நவரச நாயகன்’!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020

 

actor karthik

 

பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நவரச நாயகன் கார்த்திக். பழம் பெரும் நடிகர் ஆர். முத்துராமனின் மகன் ஆவார்.  

 

80 களில் நடிக்க தொடங்கி படிப்படியாக முன்னணி நடிகராக வலம் வந்த கார்த்திக் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இதனால் சில காலங்கள் படங்களில் கவனம் செலுத்துவதைக் குறைத்துக்கொண்டு அரசியலிலும் ஈடுபட்டார் கார்த்திக். 

 

ஊரடங்கிற்கு முன்பாக நடிகர் கார்த்திக் இயக்கப்போகும் படத்திற்கான கதையை எழுதி வந்தார் என்று தகவல் வெளியானது. இதன்பின் கரோனா ஊரடங்கில் வீட்டிலேயே இருக்கும் கார்த்திக், தனது சுயசரிதையை எழுதி வருகிறாராம். இதில் அவர் திரையுலகிற்கு வந்த விதம், பிரபலங்களுடனான நட்பு, சந்தித்த மனிதர்கள் உள்ளிட்டவற்றை மட்டும் எழுதி வருகிறார். இது புத்தமாக வெளியாகுமா என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆக்சிஜன் சிலிண்டருடன் படம் பார்க்க வந்தார்கள்” - ஜெயம் ரவி 

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

Jayam ravi Spoke about Ponniyin selvan movie experience

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசைவெளியீடு பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் நாவலை வாசித்த வாசகர்களைப் பற்றி சுவாரசியமான ஒரு தகவலைச் சொன்னார்.

 

நடிகர் ஜெயம் ரவி பேசியபோது “ரசிகர்களை நான் பிரித்துப் பார்த்து பேசவில்லை. ஆனாலும் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி. ஒரு கதையை இரண்டு படமாக எடுத்து வைத்துவிட்டு முதலில் இதை பாருங்கள் பின்பு இதை காட்டுகிறேன் என்று சொன்னவர் தான் மணிரத்னம். கார்த்தி இல்லையென்றால் இந்த இரண்டு பாகத்தில் என்னால் முழுமையாக நடித்திருக்க முடியாது. தூரமாக இருந்து வாழ்த்தும் ரஜினி அவர்களுக்கு நன்றி, சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி. 

 

பொன்னியின் செல்வன் படம் பார்க்க தியேட்டருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உடன் வந்தவர்களை எல்லாம் நான் பார்த்தேன். அந்த அளவுக்கு நாவலை வாசித்த வயதானவர்கள் எல்லாம் திரையரங்கம் வந்தார்கள்” என்று பெருமை பொங்க பேசினார்.


 

Next Story

அப்ப காதல் கடிதம்; இப்ப இன்ஸ்டாகிராம் - ஜாலியான கார்த்தி

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

 Karthi Spoke about Ponniyin selvan movie experience

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்திக், பொன்னியின் செல்வன் நடித்த பிறகு அவருக்கு கிடைத்து வருகிற அங்கிகாரம் குறித்து கலகலப்பாக பேசினார்.

 

நடிகர் கார்த்தி பேசியபோது “வெறும் ஆசையோடு வந்த என்னை எந்த கேள்வியும் கேட்காமல் சேர்த்துக் கொண்டார் மணிரத்னம் சார். இதுவரை தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகாத ஊர்களின் தியேட்டர்களில் எல்லாம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

 

நான் கைதி படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாயா என்றார். நான் சிவாஜி கணேசன் வசனங்கள் எல்லாம் பேசி நடித்துக் காட்டினேன். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சார், கமல் சார் பேசினார்கள். அது இப்போதுதான் புரிகிறது மணிரத்னம் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். பையா திரைப்படத்திற்கு எனக்கு நிறைய காதல் கடிதங்கள் வந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் எனக்கு நிறைய மெசேஜ் வருகிறது” என்றார்.