Skip to main content

10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைய நடிகர் கார்த்தி உதவி!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020
karthi

 

 

நடிகர் கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாயியாக நடித்த பிறகு விவசாயிகளுக்கு உதவு விதமாக உழவன் பவுண்டேஷன் என்கிற அமைப்பை உருவாக்கி உதவி வருகிறார்.

 

கடந்த இரண்டு வருடங்களாக விவசாயிகளுக்கு தேவையான பல உதவிகளை செய்து வரும் இந்த அமைப்பு தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் என்ற பகுதியில் சூரவள்ளி கால்வாயை சுத்தப்படுத்தி வருகிறது.

 

கிட்டத்தட்ட பதிமூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த கால்வாய் முழுவதும் செடிகொடிகளாகவும் புதர்களாகவும் இருக்கும் நிலையில் இந்த கால்வாயை சுத்தப்படுத்த ரூபாய் 4 லட்சம் உழவன் பவுண்டேஷன் செலவு செய்து உள்ளது.

 

கடந்த 21 நாட்களாக இந்த கால்வாயை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்த பணி முடிந்து விட்டால் ராதாபுரம் பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் என்பது மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள 10 கிராமத்தில் உள்ள பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் கார்த்தியின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்