இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
இந்த நிலையில், கரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை எடுத்துவந்த பிரபல நடிகர் ஜோக்கர் துளசி சிகிச்சை பலனின்றி காலமானார். ‘மருதுபாண்டி’, ‘உடன்பிறப்பு’, ‘தமிழச்சி’, ‘இளைஞரணி’, ‘அவதார புருஷன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், ‘கோலங்கள்’, ‘வாணி ராணி’ போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இதனையடுத்து, ஜோக்கர் துளசி மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.