Advertisment

கரோனா தொற்று... ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பக்ரு!

Pakru

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கிய கரோனா பரவல், ஓராண்டைக் கடந்தும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கைகள், கரோனா இரண்டாம் அலை குறித்த அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த காமெடி நடிகர் பக்ரு, முழுமையாகக் குணமடைந்துள்ளார்.

Advertisment

மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டகாணொளியைத் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள பக்ரு, அப்பதிவின் வாயிலாக ரசிகர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார். அதில், "இறுதியில் எனக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட சிகிச்சைக்குப் பிறகு, முழுமையாக குணமடைந்துவிட்டேன். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். விரைவில் வேலைகளில் கவனம் செலுத்துவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe