Skip to main content

"பிக்பாஸ் பற்றி நான் எதுவும் சொல்லல... என்னை விட்ருங்க..." - கஞ்சா கருப்பு

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

கஞ்சா கருப்பு... பெயராலும் தனது வெகுளித்தனத்தாலும் முதல் படத்திலிருந்தே கவனிக்கப்பட்டவர். 'பிதாமகன்' படத்திலேயே சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் முக்கிய நகைச்சுவை நடிகராக 'ராம்' படத்தில்தான் முதலில் நடித்தார். ராமில் 'வாழவந்தான்', பருத்திவீரன் 'டக்ளஸ்', சுப்ரமணியபுரம் 'காசி', நாடோடிகள் 'மாரியப்பன்', களவாணி 'பஞ்சாயத்து' என இன்னும் நினைவு வைத்து சொல்லக்கூடிய பல பாத்திரங்களில் சிறப்பாக நடித்தவர். இடையே பட தயாரிப்பில் ஈடுபட்டு சூடுபட்டு சிறிய இடைவெளி ஏற்பட்டு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது மீண்டும் பிஸியாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். வெண்ணிலா கபடிக்குழு 2 படத்தின் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த அவரிடம் ஒரு சின்ன சாட் செய்தோம்...

 

vennila kabadi kuzhu



வெண்ணிலா கபடிக்குழு 2 ல எப்படி நீங்க இணைந்தீங்க?

வெண்ணிலா கபடிக்குழு முதல் பாகத்துல நான் கிடையாது. ஆனா, ரெண்டுல நான் இருக்கணும்னு கேட்டாங்க. படத்துல ஹீரோவை மதுரைக்கு பஸ் ஏத்தி விடுறதே நான்தான். அவரு மெட்ராஸுக்குப் போறாருன்னு எல்லோரும் நினைப்பாங்க. ஆனா, கபடி களத்துக்காக மதுரைக்குப் போவாரு. அண்ணன் பசுபதி என்னை கேப்பாரு, "டேய், அவன் மெட்ராசுக்கு போகலையாம்டா, எங்க ஏத்தி விட்ட?"னு. அப்படி ஒரு நல்ல குணச்சித்திரம் கலந்த கேரக்டர் எனக்கு. விக்ராந்த் தம்பி நல்லா ஓடுற குதிரை. அதுல நிறைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஏறி பயணம் செய்யணும். அவருக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்னு வேண்டிக்கிறேன்.


தற்போது வேறு என்னென்ன படங்கள் நடிக்கிறீங்க?

களவாணி2 இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு. இன்னும் பேர் கொண்ட பெரியவர்களே, எம்.சி.ஆர்.பாண்டினு சில படங்கள் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அடுத்தடுத்து நிறைய படங்கள் நடிக்கப் போகிறேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக பட வாய்ப்புகள் வந்திருக்கா?

அப்படியில்ல.. நல்ல நடிகனுக்கு எந்த வேடம் கொடுத்தாலும் இவன் தாங்குவான் என்ற நம்பிக்கையை கொடுக்கணும். களவாணி இப்போ நல்லா ஓடுது, அதுனால எனக்கு நூறு படம் வரும். வெண்ணிலா கபடிக்குழு மூலமா இருபது படம் வரும். படத்துல நாம இருக்குறத பார்த்துதான் படம் கிடைக்குமே தவிர பிக்பாஸ்ல இருந்ததைப் பார்த்து மட்டுமெல்லாம் படம் வராது. அப்படி எதுவும் வரல.

தற்போது நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பாக்குறீங்களா, அது எப்படி போகுது?

இப்போ நடக்குற பிக்பாஸ் பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்ல விரும்பல. நான் கருத்து கந்தசாமி கிடையாது. என்னை விட்ருங்க... 

 


       

சார்ந்த செய்திகள்

Next Story

"எடப்பாடி ஆட்சி அமைக்க தீச்சட்டி எடுக்க போறேன்" - கஞ்சா கருப்பு அதிரடி

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

ganja karuppu about edapaadi k palaniswamy

 

நடிகர் கஞ்சா கருப்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் ஊரணி அருகே கீழகொம்புக்காரனேந்தலில் உள்ள கந்தசாமி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் திருவிழா மற்றும் பால்குட விழாவில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமிக்காக தீச்சட்டி எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

 

அவர் பேசுகையில், "இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது. அப்போதே வர வேண்டியது. படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை. அதனால் இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டுள்ளேன். இதைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுக்க போகிறேன். எதுக்காகனா, எடப்பாடி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதுக்கும் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கும் தான். 

 

இது மட்டுமில்லை. கூடிய விரைவில் நல்ல ஆட்சி அமையும். உங்களுக்கு நேர்மையான ஆட்சி வரப்போகுது. முக்கியமாக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். தப்பாக நினைத்து கொள்ளாதீர்கள். எடப்பாடி ஆட்சி அமைத்தார் என்றால் இன்று கரெண்ட் பில் எல்லாம் ஏறி இருக்காது. இன்றைக்கு அது பயங்கரமா ஏறிடுச்சு. வீட்டு வரி எல்லாம் அதிகரிச்சுடுச்சு. அதனால் நிச்சயம் எடப்பாடி ஆட்சி புரிவார்" என்றார். 

 

பின்பு ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, "எல்லாருமே சீக்கிரம் ஒன்றாக சேர போறாங்க. அனைவரும் நம்ம கட்சி ஆளுங்க தான். பங்காளிக்குள்ள சண்டை இருக்கும். அடிச்சிக்குவோம் பிடிச்சிக்குவோம். நாளைக்கு ஒன்றாக சேர்ந்துடுவோம்" என பதிலளித்தார்.  

 

 

Next Story

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாகுபலி நடிகர்!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021
bnfxhshsh

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமாகி வருகிறது. இதில் தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினர். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

 

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கடந்த இரண்டு வருடங்களாகத் தொகுத்து வழங்கிய நடிகர் நாகர்ஜுனா, படங்களின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த வருடம் பிக்பாஸ் நிகஸ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்குப் பதிலாக 'பாகுபலி' புகழ் நடிகர் ராணா இதனை தொகுத்து வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.