Skip to main content

"என் தம்பியா, சேரன் பிக்பாஸ்ல கலந்துக்கிட்டது பிடிக்கல" - இ.ராமதாஸ் 

Published on 03/08/2019 | Edited on 03/08/2019

சமீப கால தமிழ் சினிமாக்களின் ஃபேவரிட் போலீஸ் நடிகர் இ.ராமதாஸ். யுத்தம் செய், காக்கிச்சட்டை, விக்ரம் வேதா உள்பட பல படங்களில் சின்சியர் போலீசாக நடித்திருப்பவர். பிற வேடங்களிலும் இயல்பான நடிப்பின் மூலம் கவனமீர்த்தவர். இவர் ஒரு இயக்குனர் என்பது பலருக்கு புதிய செய்தியாகத்தான் இருக்கும். மோகன் - சீதா நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும், மன்சூர் அலிகான் நடித்த ராவணன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய இவர், பல இயக்குனர்களின் கதை, திரைக்கதைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். இயக்குனர் சேரனுக்கு நெருக்கமான ராமதாஸ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் கலந்துகொண்டது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சின் ஒரு பகுதி...

 

e.ramadoss



"தனிப்பட்ட முறையில் ராமதாஸ் - சேரன் என்ற அண்ணன் தம்பியா, சேரன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது எனக்குப் பிடிக்கல. ஆனால், இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது அவரது உரிமை, முடிவு. கமல்ஹாசன் என்ற பெரிய லெஜெண்டே சொல்றார், 'பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்களை சென்றடைவேன் என்கிறார். அப்படி இருக்கும்போது சேரன் சென்றதிலும் நியாயம் இருக்கிறது. சில வருடங்களாகப் படம் எடுக்கவில்லை, சமீபத்தில் எடுத்த 'திருமணம்' படமும் சரியாகப் போகல. அவருக்கு தேவைகள் இருக்கும், பசி இருக்கும். அதற்கு நாம எதுவும் உதவ முடியாது. அப்படி இருக்கையில் அவர் சென்றது சரிதான்.

பாரதி கண்ணம்மா, பொற்காலம் போன்ற நல்ல படங்கள் எடுத்த ஒரு இயக்குனரா, என் தம்பியா, என் அப்பாவோட பேரை பொற்காலம் படத்துல ஒரு பாத்திரத்துக்கு வச்சவரா... இப்படிப்பட்ட சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது பிடிக்கல. ஆனால், தேவை இருந்தால் போய்தானே ஆகணும். கவின் சொன்னார் 'ஆறு வாரம் இங்க இருந்தாதான் கடன் அடைக்கமுடியும்'னு கவின் சொல்றார். அது மாதிரி சேரனுக்கு பத்து வாரம் இருக்கவேண்டிய தேவை இருக்கலாம்.


 

 

cheran



சில இடங்களில் சேரன் அதீதமாக ரியாக்ட் செய்வது போல இருக்கலாம். நாங்க எல்லாம் சிவாஜியின் வெறியர்கள். அந்த எச்சம் அவருக்குள்ள இருக்கலாம். எனக்குத் தெரிஞ்ச சேரன், அவ்வளவு சீக்கிரம் உடையும் ஆள் இல்லை. மீரா சொன்ன குற்றச்சாட்டு மிகப்பெரியது. தனது கேரக்டர் பற்றி இப்படி தவறாகப் பேசும்போது சேரனின் ரியாக்ஷன் சரிதான். சேரன் வெளியே வந்தால் நான் "ஏன்டா தம்பி?"னுதான் கேப்பேன். வேற ஒன்னும் கேட்க மாட்டேன். எனக்கு அவனை அவ்வளவு பிடிக்கும்."  

 

                 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார்.