Advertisment

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் புதிய மாவட்டத்திற்கு துணை ஆட்சியராக நியமனம்

actor chinni jayanth son sruthan jai jayanth appointment as sub collector for Tiruppur district

பிரபல திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த யூ.பி.எஸ்.சி(UPSC) தேர்வில், அகில இந்திய அளவில் 75வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றார். இந்த தேர்வு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்களுக்கு முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்பு வெளிமாநிலங்களில் களப்பணி பயிற்சி பெற்று வந்தனர்.

Advertisment

அவர்களில், மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த ஸ்ருதன் ஜெய் ஜெயந்த் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக இருந்தார். இந்நிலையில் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த் தற்போது திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சின்னி ஜெயந்த் மற்றும் அவரது மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

sub collector Tiruppur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe