இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்களுக்குக் கரோனா தொற்று ஏற்படுகிறது.
அந்தவகையில்நடிகர் அருண் விஜய்க்கு கரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், மருத்துவரின் ஆலோசனைப்படி தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.நடிகர் அருண் விஜய் தற்போதுஇயக்குநர் ஹரி இயக்கும் 'யானை' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.