Advertisment

"'தல... தல'ன்னு அவருக்கு பில்டப் கொடுத்து வச்சிருந்தோம், ஆனா..." - நடிகர் அர்ஜுன்

அஜித் குமார் நடிப்பில் வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி நேர்கொண்ட பார்வை படம் வெளியாகிறது. இதில் ஷ்ரத்தா ஸ்ரீனிவாசன், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், ரஙகராஜ் பாண்டே, அர்ஜூன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். நடிகர் அஜித் அன்பாக பழகும் முறையை பற்றி பலரும் சொல்லுவார்கள். அந்த வரிசையில் இப்படத்தில் நடித்துள்ள அர்ஜூன் எப்படி அஜித் குமார் தன்னை கவர்ந்தார் என்பதை தெரிவிக்கிறார்.

Advertisment

arjun

“தல தல என்று அவருக்கு ஒரு பில்ட்டப் கொடுத்து வச்சிருப்போம். அதை 12 மணிநேரத்திற்குள் சுத்தமாக அடித்து உடைத்துவிடுவார். அதன் பின் அவர் உங்களுடைய நண்பராகிவிடுவார். என்னதான் நாம் ஒரு நட்சத்திரம் கூட பணி புரிந்தாலும், அதெல்லாம் நான் இல்லை என்பதுபோல் உடைத்துவிடுவார். நாங்கெல்லாம் ஒரு கேங் ஆஃப் பாய்ஸ். அந்தக் குழுவில் அஜித் சாரும் ஒருவர். நாங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல செட்டில் சுற்றிக்கொண்டிருப்போம். வினோத் சார், ரெங்கராஜ் பாண்டேவிடம் அடிக்கடி சொல்வார், 'இந்த பசங்கக்கூட சேராதீங்க, உங்களையும் கெடுத்துடுவாங்க' என்று. அதனால் ரங்கராஜ் சாரும் எங்க பக்கமே வரமாட்டார். நான் கிட்டார் வாசிப்பேன் என்று அஜித் சாரிடம் சொன்னதே இல்லை. ஆனால், ஒரு நாள் 'அர்ஜூன் நீங்கள் நல்ல கிட்டார் வாசிப்பீங்களாமே?' என்று கேட்டார். இப்படி அவர் எங்களை ரொம்ப கம்ஃபோர்ட்டாக வைத்திருப்பார்” என்று நடிகர் அர்ஜூன் தெரிவித்தார்.

nerkonda parvai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe