"அது மிகவும் மதிப்புமிக்க விஷயம், நான் அதை என்றும் மறக்க மாட்டேன்" - நடிகை அமலா பேச்சு

actor amala talk about kanam movie mother song

அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி நடிகர் சர்வானாந்த்நடிக்கும் கணம்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ரீத்துவர்மா நடிக்க அமலா கதாநாயகனின்அம்மாவாக நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.தமிழில் 'கணம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்ற பெயரிலும்உருவாகியுள்ள இப்படத்தின்அம்மா பாடல் சமீபத்தில் வெளியானது. சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்பாடல் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இப்பாடல் குறித்து நடிகை அமலா கூறுகையில், "மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே அம்மா பாடல் உருவாக்கப்பட்டது.ஜாக்ஸ் பிஜாயும், பாடகர் சித் ஸ்ரீராமும் உண்மையிலேயே ஒரு மாயாஜாலத்தைச் செய்துள்ளனர். முதல் முறை அந்தப் பாடலைக் கேட்ட போது இதமாக, மென்மையாக இருந்தது. இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்க், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என ஒட்டுமொத்தப் படக் குழுவையும் என்னால் உணர முடிந்தது. அந்த உணர்வில் அனைவரும் பிணைந்தனர். பிறகு படப்பிடிப்பின் போது பாடலைத் துண்டு துண்டாகத்தான் கேட்டோம். தற்போது பாடல் வெளியான பிறகு, பாடலை முழுமையாகக் கேட்க முடிந்தது. அதை என் இதயத்தில் உணர முடிந்தது. டைரக்டர் ஸ்ரீ கார்த்திக்குக்கு தனது அம்மாவின் மீதிருக்கும் அன்பின் காரணமாகவே இந்தப் படம் உருவானது. இந்தப் பாடல் அந்த அன்பைப் பற்றியது. கண்டிப்பாக உங்களாலும் உணர முடியும் என்று நான் கூறுவேன்.

அதீத திறமை, நெறிகள், நம்பிக்கை, அன்பு என எல்லாம் சேர்ந்து வருவதற்கான புள்ளி இது என்பது மிகவும் அழகாகத் தெரிகிறது. ‘கணம்’ படத்தில் அந்த அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்தப் பெருமையாக உணர்கிறேன். நான் நிஜ வாழ்க்கையிலும் ஒரு தாய் தான். அந்த நிலையை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன். நான் படத்தை முடிக்கும் வரை, எல்லோருக்கும் அம்மாவாகவே இருந்தேன். அது மிகவும் மதிப்புமிக்க விஷயம். அதை நான் என்றும் மறக்க மாட்டேன். எஸ்.ஆர்.பிரபு மற்றும் ட்ரீம் வாரிய பிக்சர்ஸ் போன்ற அற்புதமான தயாரிப்பாளர் கிடைத்தது டைரக்டர் ஶ்ரீகார்த்திக்கின் அதிர்ஷ்டம். ஏனென்றால் அவர்கள் படத்தையும், ஶ்ரீகார்த்திக்கையும் முழுமையாக நம்புகிறார்கள். பட உருவாக்கத்தில் நாங்கள் ரசித்ததைப் போல படம் பார்க்கும் போது நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்” எனத்தெரிவித்துள்ளார்.

kanam movie
இதையும் படியுங்கள்
Subscribe