Skip to main content

பாதை மாறிய அஜித்! - அதிர்ந்துபோன சென்னை மாநகர் போலீஸ்!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

Actor Ajith visted chennai commissioner office


நடிகர் அஜித் பல ஆண்டு காலமாக நடிப்பு மட்டும் அல்லாமல், பைக், கார் ரேஸ், குதிரை ஏற்றம், விமானம் ஓட்டுதல் போன்ற பல ஹாபிகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த வரிசையில், பழைய கமிஷ்னர் அலுவலகத்தில், ரைஃபில் கிளப்பில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்துவருகிறார். படப்பிடிப்பு நேரம்போக இதுபோன்ற பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபட்டுவருகிறார்.


எப்போதும் அஜித் திடீரென்று பல சர்ப்ரைஸ்களை செய்வார். தனது வீட்டில் பல கார்கள் வைத்திருந்தாலும், இன்று காலை 8.30 மணியளவில், தனது திருவான்மியூர் வீட்டிலிருந்து சென்னை ரைஃபில் கிளப் இயங்கிவரும் பழைய கமிஷ்னர் அலுவலகத்திற்குச் சென்று வர தனியார் வாடகை டாக்ஸியை புக் செய்திருந்தார். அதன்படி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் செல்லும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். அதன்படி, தனியார் கால் டாக்ஸி டிரைவரும் தற்போது இயங்கிவரும் புதிய கமிஷ்னர் அலுவலகத்தின் மூன்றாம் எண் நுழைவு வாயிலில் சென்று வாகனத்தை நிறுத்தியுள்ளார். 


அஜித் துப்பாக்கிப் பயிற்சி எடுக்கும்போது உடுத்தும் டீ-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து காரைவிட்டு இறங்கி, தான் வைத்திருந்த ‘ஏர் கன்’ துப்பாக்கிப் பேக்கையும் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தார். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், முகக் கவசம் அணிந்திருந்த அஜித்தை தெரியாமல் “இங்கெல்லாம் ஷாட்ஸ் போட்டுக்கொண்டு வரக்கூடாது. இது கமிஷ்னர் அலுவலகம்” என்று கூறியுள்ளனர். 

 

Actor Ajith visted chennai commissioner office


அதற்கு அஜித், “இது கமிஷ்னர் அலுவலகம்தானே” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த காவலர், “ஆமாம், நீங்கள் யார்” எனக் கேட்டதற்கு, “நான்தான் நடிகர் அஜித்” என முகக்கவசத்தை கழட்டி முகத்தைக் காட்டியதும் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். என்ன செய்வது என்று புரியாத போலீஸார், அஜித்தை ‘மக்கள் தொடர்பு’ உதவி ஆணையர் பாஸ்கரன் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பாஸ்கரன் இல்லாததால், பணியிலிருந்த ஆய்வாளர் கண்ணன், மற்றும் இதர போலீஸார், யார் இது என்று கேட்டுள்ளனர். “நான்தான் அஜித்” என்று முகக் கவசத்தைக் கழட்டி முகத்தைக் காட்டியவுடன் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் செய்வதறியாமல் நின்றனர். 


அவர்கள் நிலையைக் கண்ட அஜித், “நான் சென்னை கமிஷ்னர் அலுவலகம்தானே வந்துள்ளேன்” என்று கேட்டார். அதற்கு போலீஸார், “ஆமாம் சார் நீங்கள் எங்கு செல்ல வேண்டும்; இங்கு ஏன் வந்தீர்கள்” எனக் கேட்டுள்ளனர். நான் கமிஷ்னர் அலுவகலத்திற்குள் இயங்கிவரும் ரைஃபில் கிளப்பில் துப்பாக்கிச் சூடும் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறேன். இது எந்த இடம் எனத் தெரியவில்லை என அஜித் சொல்ல, அங்கிருந்த போலீஸாரோ, சார் அது பழைய போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் எனச் சொல்ல, உடனடியாக அங்கிருந்து அஜித் வெளியே கிளம்பினார். 

 

Actor Ajith visted chennai commissioner office


அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அப்போது, நுழைவுவாயில் 3 அருகே உள்ள அறையில் இருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் வேறு செய்தி விஷயமாக வெளியே சென்றிருந்ததால் அஜித் வந்துசென்றது பத்திரிகையாளர்களுக்கே தெரியாமல் இருந்தது. 


இந்த நிலையில், பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார், அஜித் கமிஷ்னர் அலுவலகம் வந்துசென்ற புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பில் பரவவிட, அஜித் கமிஷ்னர் அலுவலகத்திற்குப் புகார்தான் கொடுக்க வந்துள்ளாரோ என எண்ணி பத்திரிகையாளர்கள் கமிஷ்னர் அலுவலகத்தில் குவிந்தனர். பின்னர், விசாரித்தபோதுதான், நடந்த விவரம் சுவாரசியமாக வெளிவந்தது. நாமும் இங்கே இருந்திருந்தால் அஜித்துடன் செல்ஃபி எடுத்திருக்கலாமே எனப் புலம்பியபடி பத்திரிகையாளர்கள் தங்கள் அறைக்குச் சென்றனர். இந்தச் சம்பவம் கமிஷ்னர் அலுவலகத்தைப் பரபரப்பாக்கியது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார் கவிழ்ப்பு - பதறவைக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோ

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajithkumar vidaamuyarchi shooting spot video

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு தான் நடத்தி வரும் பைக் கம்பெனியின் பணிகளை மேற்கொண்டார். மீண்டும் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காரில் அஜித்தும் ஆரவ்வும் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - புகைப்படங்கள் வைரல்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajith kumar in cricketer natarajan birthday party

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில்,  சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக “யார்க்கர் கிங்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணி வெற்றி பெற அவருடைய பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே தனது சொந்த ஊரில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பயோ-பிக் உருவாகுவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடராஜனாக நடிக்கவுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் அதுகுறித்து வெளியாகவில்லை. 

ajith kumar in cricketer natarajan birthday party

இந்த நிலையில், இன்று நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த விழா நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.