Skip to main content

பாலகோட் தாக்குதல் சம்பவம் படமாகிறது... அபிநந்தனாக யார்? தயாரிக்கும் விவேகம் பட வில்லன்!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

கடந்த ஃபிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தீவிரவாத தக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக நாடுகள் பல, இந்த தாக்குதலை கண்டித்தன. ஜெய்ஷ்-இ- முகமது என்ற பிரிவினைவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டது.
 

ajith vivek

 

 

இதற்கு தக்க பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சி முகாமை தாக்கியது. இதில் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவங்களை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் புதிய படம் தயாராகிறது. இந்த படத்தை விவேக் ஓபராய் தயாரிக்கிறாராம். விமானப்படை வீரர் அபிநந்தன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார் என்னும் தேர்வு நடைபெற்று வருகிறது.
 

இந்த படம் குறித்து விவேக் ஓபராய் கூறும்போது, “நமது படையினரின் வீரத்தை போற்றவேண்டியது ஒரு இந்தியன் என்ற முறையில் எனது கடமை. அபிநந்தன் உள்ளிட்ட நமது வீரர்களின் சாகசங்கள் இந்த படத்தின் மூலம் வெளிப்படும். பாலகோட் தாக்குதலை இந்திய விமானப்படை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியது. அபிநந்தன் இந்தியர்களுக்கு பெருமை தேடி கொடுத்துள்ளார். இந்த படத்தை எடுக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது” என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘விடாமுயற்சி’யில் இறங்கும் அஜித்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

Ajith embarks on 'vidamuyarchi'; Official notification released

 

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவான அஜித்குமார் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அவர்களை குஷிப்படுத்தும் விதமாக கடைசியாக 'துணிவு' என்ற வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார். இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் சில காரணங்களால் அவர் விலகிவிட்டார். 

 

விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் அஜித்தின் 52வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

 

மே 1 அன்று (01.05.2023) மாலை டைட்டிலுடன் 'ஏகே 62' பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கடந்த சில தினங்கள் முன் தகவல் வெளியானது. இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என அஜித் இந்த அறிவிப்பை வெளியிட படக்குழுவிடம் சொன்னதாக திரைவட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னதாகவே வெளியாகியுள்ளது. 

 

அஜித்தின் 62ஆவது படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் பெயர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் என்பது குறித்தான தகவல்கள் மட்டுமே போஸ்டரில் இடம் பெற்றுள்ளன. பைக் சுற்றுப்பயணம் முடித்து வந்து அஜித்குமார் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

 

 

 

Next Story

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Actor Ajith's father passed away

 

துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க இசையமைப்பாளராக அனிருத்தும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா உள்ளிட்டோர் பணியாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

அண்மையில் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு  அஜித் குமார் துவங்க இருக்கும் 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது” எனக்கூறி இருந்தார். 

 

கடந்த டிசம்பர் மாதம் உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் சுற்றை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்து முடித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த சுற்றுப் பயணம் 7 கண்டங்கள், 60 நாடுகள் என மொத்தம் 18 மாதங்கள் ஆகும் எனவும் இது அஜித்தின் நீண்ட நாள் கனவு எனவும் தகவல்கள் வெளியானது நினைவுகூறத்தக்கது. 

 

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் காலமானார். அவருக்கு வயது 84. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். சென்னை பெசண்ட் நகர் மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.