Skip to main content

சுஷாந்த் சிங் பிறந்தநாளில் அவர் கனவை நிறைவேற்றிய இயக்குனர்..!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

abhishek kapoor and his wife planed to plant 1,000 trees on Sushant Singh's birthday

 

பாலிவுட் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த தோனி படநாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தையே பரபரப்பாக்கியது. இதன் பின்னணியில் போதைபொருள் மாஃபியாக்களுக்கும் சில பாலிவுட் நடிகர்களுக்கும் தொடர்புள்ளதாக விசாரணைகளும் நடந்துவருகின்றது. மேலும் அவரது ரசிகர்களும் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.

 

சுஷாந்த் சிங், தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கனவுகள் என்று 50 விஷயங்களை ஒரு லிஸ்ட்டாக வெளியிட்டிருந்தார். அதில், தான் படித்த டெல்லி கல்லூரி விடுதியில் மாலை தங்க வேண்டும். நூறு குழந்தைகளை நாசா ஆய்வகத்திற்கும், இஸ்ரோ ஆய்வகத்திற்கும் அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல கனவு அசைகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். 

 

அதில், அவரது 11வது ஆசையாக 1,000 மரங்களை நட வேண்டும் என்பது இருந்தது. இந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் பாலிவுட் இயக்குனர் அபிஷேக் கபூர் மற்றும் அவரது மனைவியான படத் தாயாரிப்பாளர் பிரக்கியா இருவரும் சுஷாந்த் சிங் பிறந்தாளான நேற்று (21.01.2021) ஆயிரம் மரகன்றுகளை நடும் நிகழ்வினை தொடங்கியுள்ளனர். இந்நிகழ்வில் பேசிய பிரக்கியா, “சுஷாந்த் சிங், சாதிக்க வேண்டும் என பல கனவுகளைக் கொண்டிருந்தார். அவை அனைத்தையும் நம்மால் செய்ய முடியாது. ஆனால், 1,000 மரங்களை நட வேண்டும் எனும் அவரின் இந்த ஆசையை நம்மால் நிறைவேற்ற முடியும். அவர் பிறந்தநாளை இப்படி அவரின் கனவை நிறைவேற்றி கொண்டாடுவதே சரியான முறையாக இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம்” எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுஷாந்த் சிங் போதை பழக்கத்திற்கு காதலி ரியா உடந்தை - குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

Girlfriend Riya complicit in Sushant Singh's drug addiction - charge sheet filed by NCB by

 

இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இது தொடர்பான வழக்கில் ரியா சக்ரவர்த்தி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைதாகி பின்பு ஒரு மாதம் கழித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். பின்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தற்போது வரை விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட 35 பேர் மீது மொத்தம் 38 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மேலும் அந்த அறிக்கையில், "ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக்,சாமுவேல் மிராண்டா உள்ளிட்ட பலரிடம் பலமுறை கஞ்சா வாங்கி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிடம் வழங்கியுள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியுதவி செய்து அவரும் அதனை உட்கொண்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை  போதைப்பொருட்களை வாங்க, விற்க, விநியோகம் செய்துள்ளனர்." என குறிப்பிடப்பட்டுள்ளது . 

 

ரியா சக்ரவர்த்தி போதை பொருட்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுஷாந்தின் தீவிர போதைப் பழக்கத்திற்கு அவரின் காதலி ரியாவும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.     
 

 

  

Next Story

சுஷாந்த் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் கார் விபத்தில் பலி

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

Sushant Singh's family members killed in car accident

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், சென்ற ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்குக் காரணம், பாலிவுட்டில் நடக்கிற குடும்ப ஆதிக்கமே என்று சமூக ஊடகங்களில் பலரும் குற்றம்சாட்டினர். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இருப்பினும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற மர்மத்திற்கு இதுவரை அவர்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

 

ad

 

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கார் விபத்தில் பலியாகியுள்ளனர். ஹரியானா மாநிலத்தின் மூத்த காவல்துறை அதிகாரியாக இருக்கும்  ஓ.பி. சிங்கின் சகோதரி கீதா தேவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் அவர்கள் பாட்னாவில் உள்ள வீட்டிற்கு  திரும்பி கொண்டிருந்தனர்.  அப்போது பீகார் மாநிலத்தின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ட்ரக் மீது  மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுஷாந்த் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.