Skip to main content

''அந்தப் படத்தை இழந்த தருணத்தில் அதிகம் வருத்தப்பட்டேன்'' - நடிகை ஆத்மிகா வேதனை!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

htdeh

 

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' படம் மூலம் அறிமுகமான நடிகை ஆத்மிகாவிற்குச் சமீபத்தில் 'ராஞ்சனா' படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தனுஷை வைத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்த நிலையில் அவருக்கு ஹிந்தி தெரியாததால் அந்த வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில் இதுகுறித்து ஆத்மிகா பேசும்போது...

 

''ஹிந்தி படத்தை இழந்த தருணத்தில் அதிகம் வருத்தப்பட்டேன். நான் பாலிவுட் படங்களின் ரசிகை. அதனால் இப்போது ஊரடங்கில் ஹிந்தி கற்று வருகிறேன். என் மொழி அறிவு இப்போது வளர்ந்துள்ளது. என்னால் புரிந்து பதிலளிக்க முடியும். மீண்டும் ஒரு நல்ல வாய்ப்புகளுக்காக நான் மகிழ்ச்சியுடன் காத்திருப்பேன். ஒரு வெற்றி கொடுத்துவிட்டு வரிசையாக நான்கு தோல்விப் படங்களைத் தருவது மோசமானது. அதனால் படங்கள் நடிக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நான் இந்தத் துறையில் நீண்ட நாட்கள் இருக்கப் போகிறேன்" எனக் கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

”இலங்கையில் எங்களுக்கு நடந்ததை மறக்க முடியாது” - அனுபவம் பகிர்ந்த நடிகை ஆத்மிகா

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

Aathmika

 

'யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களின் இயக்குநரான டீகே இயக்கத்தில் வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், பொன்னம்பலம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி'.  ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் படம் ரிலீஸ் செய்யப்படாமலேயே இருந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி காட்டேரி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

 

நிகழ்வில் நடிகை ஆத்மிகா பேசுகையில், “திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடியோ கிரீன் பேனரில் நடிப்பது என்பது எல்லா நடிகர்களின் ஆசையாக இருக்கும். பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்க பயமேன்’ படத்தை திரையரங்குகளில் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அவரது இயக்கத்தில், அதிலும் பேய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். பேயை வைத்து பயமுறுத்தாமல் சிரிக்க வைத்தவர் இயக்குநர் டீகே. அதனால் அவரது இயக்கத்தில் ‘காட்டேரி’ படத்தில் நடித்ததை சந்தோசமாக நினைக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது என்னை பற்றி இயக்குநர் பெருமிதமாக பேட்டி அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். சினிமா மீது இயக்குநர் டீகேவுக்கு இருக்கும் காதல் அலாதியானது. இலங்கையில் படப்பிடிப்பு நடந்தபோது ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி எதுவும் நடைபெறாது. ஏனெனில் பருவநிலை அப்படி. அதனால் அங்கு நடைபெற்ற படப்பிடிப்பு அனுபவம் மறக்க இயலாது'' எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

மீண்டும் ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படம்! 

Published on 15/01/2022 | Edited on 15/01/2022
jgfugug

 

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் என பலரும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளராக நடித்துவருவதாக கூறப்படுகிறது. 

 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில், 'மாறன்' படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் விரைவில் ஹாட் ஸடார் ஓடிடி தளத்தில் வெளியாகிவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷின் ஜகமே தந்திரம் மற்றும் அத்ரங்கி ரே (கலாட்டா கல்யாணம்) ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.