அனிருத் குரலில் பிரவின் மணி இசையில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘ஆவோ கில்லெல்'. பி ரெடி மியூசிக் இப்பாடலை வெளியிடுகிறது. ஆவோ கில்லெல் என்பது ஒரு இசை கலைடோஸ்கோப் என்றும் இது தொற்று தாளங்கள், ஆத்மார்த்தமான குரல்கள் மற்றும் விளையாட்டுத்தனமான கூறுகளை இணைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் பீட்டர்ஸின் ரித்மிக் ராப், வைஷாலி ஸ்ரீ பிரதாப்பின் டல்செட் டோன்கள், நவின் பியின் பாடல் வரிகள் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. அனைத்து முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடல் இருக்கிறது.
அனிருத் பாடிய ‘ஆவோ கில்லெல்’ பாடல்
சார்ந்த செய்திகள்
Next Story
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதி பட நடிகை
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், தற்காலிகமாக 'எஸ்.கே 21' என அழைக்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17 ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அதை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகத் தெரிகிறது.
இப்படத்தை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திற்காக கை கோர்த்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாகவும் அதற்கான டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் வில்லனாகத் துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜாம்வால் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளதாகப் பரவலாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. கன்னட படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர், தமிழில் விஜய் சேதுபதியின் 51வது படத்தில் நடிக்கிறார். இவரைத் தவிர்த்து இசையமைப்பாளராக அனிருத் சிவகார்த்திகேயன் படத்தில் பணியாற்றவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பட பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
அனிருத் இசையமைக்க முடியாது - அமுதகானம் ஆதவன் பேச்சு
சின்னத்திரையில் அமுதகானம் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஆதவன் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். நம்மிடையே பல்வேறு தகவல்களையும், தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
ஆதவன் பேசியதாவது “இன்று இசையமைக்க கூடியவர்கள் அனைவரும் பொற்கால கட்டத்து அமுதகானம் பாடல்களிலிருந்து தான் கொடுத்தாக வேண்டும். மெல்லிசை மாமன்னர்கள், கே.வி.மகாதேவன், வி.குமார் போன்ற இசை ஜாம்பவான்களை நினைக்காமல் அந்த கால கட்டப் பாடல்களை பாடல்களை நினைவூட்டாமல் யாருமே இசையமைக்க முடியாது. அது வித்யாசாகர், ஏ.ஆர்.ரகுமான், இசைஞானி இளையராஜா யாராக இருந்தாலும், இன்றிருக்கிற அனிருத் வரை அதான் நிலை. பழைய இசையை எடுத்து புதிய வெந்நீர் பானையில் வேண்டுமானால் போட்டு கொடுங்கள். ஆனால் இசை பழையது. எளிய மனிதரிலிருந்து பெரியவர்களான நாட்டை ஆள்பவர்கள் வரை அமுதகானத்திற்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை பேட்டியெடுக்க தனியார் தொலைக்காட்சியை அணுகிய போது அவரே சொன்னார் அமுதகானம் ஆதவனை என்னை பேட்டி எடுக்க வையுங்கள் என்று, பிறகு அவரைப் பார்க்க போன போது காலில் விழுந்தேன். என்னை தூக்கி நிறுத்தியவர் உங்களின் ரசிகன் நான் என்றார். என் வாழ்நாளில் அதை விட பெரிய விருது எனக்கு கிடைக்குமா என்ன? இவர்களை எல்லாம் நான் பார்ப்பேனா என்று இருந்த போது பல ஜாம்பவான்களை நான் பார்க்க காரணமாக இருந்தது இந்த அமுதகானம் நிகழ்ச்சி தான்.