Skip to main content

பந்தய நிகழ்ச்சியில் ப்ரொபோஸ்; ஓகே சொன்ன அமீர்கான் மகள்

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

aamir khan daughter ira khan accept his longtime boyfriend nupur propasal

 


பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான் கடந்த 1986ஆம் ஆண்டு ரீனா தத்தாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும் ஐரா என்கிற மகளும் உள்ளார்கள். பின்பு அமீர்கானும் ரீனா தத்தாவும் கடந்த 2002ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனையடுத்து 2005ல் தன்னுடைய 'லகான்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆசாத் ராவ் கான் என்கிற மகன் உள்ளார். பிறகு அமீர்கானும் கிரண் ராவும் கடந்த வருடம் பிரிவதாக அறிவித்தனர். 

 

இந்நிலையில் அமீர்கானின் மகள் ஐரா தனது சமூக வலைதளபக்கத்தில் தன் காதலர் நூபுரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். நூபுர் ஃபிட்னஸ் பயிற்சியாளராக பணியாற்றிவருகிறார். இவர் சைக்கிள் பந்தய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.  

 

அந்த வீடியோவில் நூபுர், ஐராவை நோக்கி நடந்து சென்று முழங்காலில் நின்று, மோதிரத்தை ஐராவுக்கு அணிவித்து ப்ரொபோஸ் செய்கிறார். அதற்கு ஐராவும் 'எஸ்' என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த காதல் ஜோடிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.