Skip to main content

மக்கள் மனங்களை வென்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 வது சீசன்!

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
9th season of Super Singer Junior won the hearts of the people

தமிழக மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் 9 ஆவது சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நேரு உள் விளையாட்டரங்கில் கோலாகலமான கொண்டாட்டத்துடன் இந்நிகழ்ச்சியின் ஃபைன்ல்ஸ் நடைபெறவுள்ளது.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றிநடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலொச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெற்று வருகிறது. முன்னெப்போதையும் விட இந்த முறை நடந்த சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 வது சீசன், பாடகர்களுக்கான முன்கூட்டிய திரைப்பட வாய்ப்புகள், சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் எனக் களை கட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது. 

இந்த முறை நடந்த சீசனில் கலந்துகொண்ட திறமையாளர்கள் பலருக்கு நிகழ்ச்சி முடிவடையும் முன்னதாகவே திரைப்படத்தில் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி படத்தில் ஶ்ரீநிதா ஷிவாத்மிகா, ஹர்ஷினி, கோகுல் ஆகிய நால்வரும் இணைந்து ஒரு அட்டகாசமான பாடலைப் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடுவராகக் கலந்து கொண்ட இசையமைப்பாளர் தமன் மற்றும் இசையமைப்பாளர் இமான் மூலமும் பல குழந்தைகளுக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்த சீசனில் பல அற்புதமான நெகிழ்ச்சியான சம்பவங்களும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் எனும் பகுதி பலரின் மனதைத் தொட்டது. மிமிக்ரியில் கலக்கிய, எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஹர்ஷினி நேத்ரா, கானாவில் கலக்கிய கலர் வெடி கோகுல், தன் குரலால் கலக்கிய அக்‌ஷரா என பாடகர்கள் கலக்கிய தருணங்கள் இணையம் முழுக்க வைரலானது. 

இது தவிர திரைப்பிரபலங்கள் மாரி செல்வராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சி, ராதா அவர்கள் கலந்துகொண்ட போது நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் நடிகர் இயக்குநர் எஸ் ஜே சூர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது. பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களால் களைகட்டிய சூப்பர் சிங்கர் ஜீனியர் சீசன் 9 ஃபைனல்ஸ் இன்று நேரு உள் விளையாட்டரங்கத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. ஶ்ரீநிதா, ஹர்ஷினி, ரிச்சா, அக்‌ஷரா, அனன்யா, மேக்னா ஆகிய ஃபைன்லிஸ்ட்ஸ் கலந்துகொள்ளும் ஃபைனல்ஸ் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

12 வயது நவ்யா உமேஷ் பாடியுள்ள இறைவி பாடல்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
12 year old Navya Umesh sung iraivi album

சர்வதேச செஸ் ஒலிம்பியாட், குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட், கேலோ இந்தியா என குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமல்லாது மாவீரன், ஜெயிலர், ஜவான் மற்றும் லால் சலாம் படங்களின் ஆடியோ லான்ச், எனப் பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நிகழ்த்திய கலை இயக்குநரும் நிகழ்வு மேலாளருமான உமேஷ் ஜே குமார் மற்றும் நிகழ்வு மேலாளர் ராகிணி முரளிதரன் ஆகியோரின் மகள் நவ்யா உமேஷ்.

ஏழாம் வகுப்பு படித்து வரக்கூடிய இவர், பாடி நடித்த ‘இறைவி’ பாடல் மகளிர் தின கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. வெங்கடேசன் இயக்கியுள்ள இப்பாடலை நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார். சமூக தொழில் முனைவோர் தீப்தி வரிகளை எழுதியுள்ளார். ‘என்ஜாய் எஞ்சாமி’ மற்றும் ‘கட்சி சேரா’ போன்ற வைரல் வீடியோக்களுக்கு நடனம் அமைத்த ‘தி டான்சர்ஸ் கிளப்’ இந்தப் பாடலுக்கான நடனம் அமைத்துள்ளனர். சோனி மியூசிக்கில் மகளிர் தினத்தன்று வெளியாகியுள்ள இந்தப் பாடலை, இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.

Next Story

பிரபல பாடகர் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
prime minister narendra modi condolence to Ghazal singer Pankaj Udhas passed away

பிரபல கஸல் பாடகர் பங்கஜ் உத்வாஸ் பாலிவுட்டில் பல படங்களுக்குப் பாடியுள்ளார். திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது 2006 ஆம் ஆண்டு வழங்கியது. குஜராத்தை சேர்ந்த அவர் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (26.02.2024) பங்கஜ் உத்வாஸ் (72) இறந்துள்ளார். இவரது மறைவு இசைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி பதிவு பகிர்ந்து வருகின்றன. 

அந்த வகையில் பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில், “பங்கஜ் உத்வாஸின் இழப்பிற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். அவரது பாடல் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. அவரது கஸல்கள் ஆத்மாவுடன் நேரடியாக பேசுகின்றன. அவர் இந்திய இசையின் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தார். அவரின் மெல்லிசை பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டியது. பல ஆண்டுகள் அவருடனான எனது பல்வேறு உரையாடல்களை நினைவுகூர்ந்தேன். அவரது இடம் இசை உலகில் ஒருபோதும் நிரப்ப முடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.