Skip to main content

உலகக்கோப்பை வென்று 37 வருடங்கள்... கொண்டாடிய ‘83’ படக்குழு!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020
ranveer singh

 

பத்மாவத், சிம்பா, கல்லி பாய் என தொடர் வெற்றிகளை பெற்ற நடிகர் ரன்வீர் சிங். தற்போது  ‘83’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இது 1983ஆம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை பற்றி உருவாகும் படம் ஆகும்.
 

 

அப்போது இந்திய அணியின் கேப்டனாக திறம்பட செயல்பட்ட கபில்தேவின் கதாபாத்திரத்தை ரன்வீர் சிங் ஏற்று  இதில் நடிக்கிறார். மற்ற வீரர்களின் கதாபாத்திரத்தை ஏற்று பல நடிகர்கள் இதில் நடிக்கின்றனர். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தை தமிழக நடிகர் ஜீவா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

கபில் தேவின் மனைவி ரோமி பாடியா கதாபாத்திரத்தை ரன்வீர் சிங்கின் மனைவியான தீபிகா படுகோன் தான் நடிக்கிறார். பஜ்ரங்கி பைஜான் என்கிற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய கபீர் கான் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் இங்கிலாந்தில் நடைபெற்றது.

 

 

இப்படம் முதலில் ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாவதாக இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

 

இந்நிலையில், நேற்றுடன் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்று 37 வருடங்கள் ஆகியுள்ளதை கொண்டாடும் வகையில் படக்குழு சிறு அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கும் முன்னணி பாலிவுட் நடிகர்

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
ranveer sing in thalaivar 171

ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

இப்படத்தை தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் அவரிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து  ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.  

Next Story

'வேள்பாரி'க்காக ஷங்கருடன் இணையும் ரன்வீர் சிங் - குழப்பத்தில் ரசிகர்கள்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

Ranveer Singh to join hands with Shankar for velpaari novel project

 

இயக்குநர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தையும் ராம்சரண் நடிக்கும் 'ஆர்சி 15' படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்புகள் மாறி மாறி ஓரே சமயத்தில் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலை ஷங்கர் திரைப்படமாக எடுக்கவுள்ளார் எனச் சொல்லப்படுகிறது. 

 

ஏற்கனவே, சூர்யா விருமன் பட இசை வெளியீட்டு விழாவில், எம்.பி. சு.வெங்கடேசனுடன் இணைந்து ஒரு புராஜெக்ட் தொடங்கி இருப்பதாகவும் இது குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனப் பேசியிருந்தார். அதனால் சூர்யா ஹீரோவாகவும் அதனை ஷங்கர் இயக்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டது. பின்பு சில முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் சொல்லப்பட்டது.

 

இந்நிலையில், ஷங்கருடன் இந்தி நடிகர் ரன்வீர் சிங் தற்போது இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை மூன்று பாகங்களாக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ரன்வீர் சிங் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

 

முன்னதாக ஷங்கரும் ரன்வீர் சிங்கும் 'அந்நியன் 2' படத்திற்காக இணைந்தனர். ஆனால் அப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் இவர்கள் கைகோர்த்துள்ளதாக வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் இந்த கூட்டணி தொடருமா?, படத்தில் ரன்வீர் சிங் எந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பார்? எனப் பல கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் விரைவில் ஷங்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.