இயக்குநர்செல்வராகவன்தன் ஆரம்பக்காலங்களில் இயக்கிய படங்கள் காலத்தைத்தாண்டி பேசப்படுவதாகஇருக்கின்றன. 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்களைஇதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மேலும், ரசிகர்களின்வேண்டுகோளுக்கு இணங்கஇந்த இரண்டு படங்களும் ரீ-ரிலீஸும்செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படங்களின்இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோலவே 'ஆயிரத்தில் ஒருவன் 2' உருவாவதாகவும், அதில் தனுஷ் நடிப்பதாகவும் கடந்த 2021 ஆம் புத்தாண்டு செய்தியாகசெல்வராகவன்தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,செல்வராகவனின்'7ஜிரெயின்போகாலனி' படத்தின்இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகஅப்படத்தின்தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாகசெல்வராகவனிடம்பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவேஇதில்ஹீரோவாகநடிக்கவுள்ளதாகவும்கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு2023 ஆம் ஆண்டு புத்தாண்டு செய்தியாகஅமைந்துள்ளது.
செல்வராகவன்இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் கடந்த 2004 ஆம்ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் '7ஜிரெயின்போகாலனி'. ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்குயுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருந்தார். இவர்இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன. தமிழைத்தொடர்ந்து தெலுங்கிலும்வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம்செல்வராகவன்வாழ்ந்த ஒரு குடியிருப்பில் நடந்த உண்மைச் சம்பவம் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக தனுஷ் நடித்த 'நானே வருவேன்' படத்தை இயக்கியசெல்வராகவன், அடுத்த படத்திற்கான கதை எழுதும் பணியில்இருப்பதாகசமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் எந்தப் படம் என்பதைப்பற்றிகுறிப்பிடவில்லை.