Skip to main content

அஜித்திற்கு முக்கியமான அந்த ஆறு படங்கள்!

Published on 01/05/2018 | Edited on 02/05/2018

25 ஆண்டுகள், 57 படங்கள், நடிகர், பைக் ரேசர், கார் ரேசர், போட்டோகிராஃபர் என்று பன்முகங்களைக் கொண்டவர் நடிகர் அஜித்குமார். தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் கோலோச்சிய காலத்தில் தனக்கான பாதையை தானே உருவாக்கியவர் அஜித். மெக்கானிக், ஒரு சின்ன பிசினஸ், மாடலிங் என்று தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவாகியுள்ளார். இன்று அஜித் எட்டியிருக்கும் நிலைக்கு வித்திட்டவை அவரது வெகு சில படங்களே.... வெற்றிக்கு இணையாக தோல்விப் படங்களும் கொடுத்துள்ள அவரது படவரிசையில் பின்வரும் படங்கள் கொடுத்த மைலேஜ் அதிகம்.

 
காதல் கோட்டை  
 kadhal kotai

 

 

அஜித், 'அமராவதி'யில் அறிமுகம் ஆகியிருந்தாலும், 'வான்மதி', 'ஆசை' என ஓரிரு வெற்றிகள் அமைந்திருந்தாலும், மிகப் பெரிய வெற்றி பெற்று மூலை முடுக்கெல்லாம் அவரைக் கொண்டு சென்றது அகத்தியன் இயக்கத்தில் வெளியான 'காதல் கோட்டை' திரைப்படம்தான். இன்று முகம் தெரியாமல் ஃபேஸ்புக்கின் மூலம் காதல் மலர்கிறது. ஆனால் 1996லேயே 'காதல் கோட்டை' படத்தில் கடிதம் மூலம் அஜித்தும், தேவயானியும் காதலிப்பார்கள்.  இறுதிக்காட்சியில் தேவயானி அனுப்பிய ஸ்வட்டரை அஜித் அணிந்திருப்பார், அதைப் பார்த்தவுடன்தான் தேவயானி ஓடிச்சென்று கட்டியணைப்பார். அப்பொழுது ரசிகர்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இத்திரைப்படம் 175 நாட்களுக்கும் மேல் ஓடி அஜித்திற்கு மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்தது. இதன் மூலம் அவருக்குப் பெண் ரசிகர்கள் அதிகரித்தனர்.

 

வாலி  

vali

 

 
இன்று அஜித்  இரட்டை  வேடத்தில் நடித்தாலே அந்தத் திரைப்படம் வெற்றிதான். ஆனால்  அதற்கு ஆரம்பமாக இருந்தது  வாலி. ஆசை படத்தில் உதவி இயக்குனராக எஸ்.ஜே. சூர்யா பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக வந்த தகவலை அடுத்து, எஸ்.ஜே.சூர்யா அஜித்திற்காகவே ஒரு கதையை தயார் செய்து அஜித்திடம் கூறியுள்ளார். கதை பிடித்துப் போக  அஜித்தும் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தத் திரைப்படத்தில் இரண்டு அஜித் கதாபாத்திரம் வரும். இதில் இருவருக்கும் உள்ள வித்தியாசம் உடல் மொழி மட்டுமே. வசனங்கள் பேசினால் மட்டும்தான் வில்லத்தனத்தை காண்பிக்க முடியும் என்பதை உடைத்து தன் கண் அசைவினாலே வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பார். இரட்டை வேடத்தில் அஜித்தின் முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்று சிறந்த நடிப்பிற்கான முதல் பிலிம்பேர் விருதையும் பெற்றார். மேலும் இந்தப் படம் முடிந்த பின் தனது இயக்குனர் பைக்கில் செல்லக் கூடாது என்று கார் வாங்கிக் கொடுத்தார் அஜித். 
 
அமர்க்களம் 
 
amarkalam

 

காதல்  மன்னன்  வெற்றிக்கு  பிறகு அஜித்-சரண் கூட்டணியில் 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அமர்க்களம். அமர்க்களம், அஜித்தின் வெற்றிப்படம் என்பதைத் தாண்டி அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் முக்கிய பங்காற்றியது. இந்த் திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான் அஜித்துக்கும், ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 

 

தீனா  

deena

அஜித்தை ஒரு மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் இதில் பார்த்தனர். இத்திரைப்படம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படமாகும். இந்தத் திரைப்படத்தில் ஒரு பிரபல தாதாவின் தம்பியாக அஜித் நடித்திருப்பார். தீனாவில் மகாநதி சங்கர் அஜித்தை 'தல' என்று செல்லமாக அழைப்பார். இந்த 'தல' பட்டம் ரசிகர்களுக்கு பிடித்துப்போக இன்றளவும் அஜித்தை அவரது ரசிகர்கள் அன்பாக 'தல' என்றுதான் அழைக்கிறார்கள். இந்த 'தல' பட்டம் அஜித்திற்கு பிறகு தோனிக்கு வைத்து தமிழ்நாட்டு ரசிகர்கள் அழைக்கின்றனர். 'தல' என்ற வார்த்தை இந்தியா முழுவதும் பிரபலமானது. வெத... முருகதாஸ் போட்டது. 

 
பில்லா
billa

  

 
1980ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற படம்தான் பில்லா. ரஜினியின் 'பில்லா'வையும் 'தீ' படத்தையும் ரீமேக் செய்து நடிக்க வேண்டுமென்பது அஜித்தின் ஆசையாக இருந்தது. முதல் கட்டமாக இந்தப் படத்தை எடுக்க ரஜினியிடமும், தயாரிப்பாளரிடமும் அஜித் ஒப்புதல் வாங்கி நடித்தார். இந்தப் படத்தில் அஜித் மிகவும் ஸ்டைலிஷாக இருப்பார். மாஸாகவும், கிளாஸாகவும் இன்று இருக்கும் அஜித்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு பில்லாவுடையது. இதில் யுவன் அஜித்திற்கு போட்ட தீம் இசை இன்றும் பெஸ்ட்டாக நீடிக்கிறது. அஜித்தை மட்டுமில்லை, இன்றிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை உருவாக்கியதும் பில்லாதான்.
 
மங்காத்தா  
makkal needhi maiam

 

 
தமிழ் சினிமாவில் ஒரு நடிகருக்கு 50வது, 100வது படங்கள் முக்கியமாக கவனிக்கப்படும். ஆனால், முக்கிய நடிகர்களான ரஜினியின் நூறாவது படம், கமலின் நூறாவது படம், விஜயின் ஐம்பதாவது படம் ஆகியவை சரியாக ஓடவில்லை. ஆனால் அஜித்தின் ஐம்பதாவது படமான மங்காத்தா அவருக்கு சரியாக அமைந்தது. இதில் அஜித்தின் சால்ட் அண்ட் பேப்பர் லுக் எதார்த்தமாக ஒரு ஹாலிவுட் ஹீரோ போல் காட்டியது. இதில் அஜித் ஹீரோவும் இல்லாமல் வில்லனும் இல்லாமல் ஒரு ஆன்டி ஹீரோவாக நடித்திருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் நூறு நாட்கள் ஓடி நல்ல வசூல் ஈட்ட படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு முக்கியமான இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். அஜித், தன் ரசிகர் மன்றங்களைக் கலைத்த பின் வெளியான முதல் படம் மங்காத்தா. 

சார்ந்த செய்திகள்

Next Story

'சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தனியார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்' - கிராம சபைக் கூட்டத்தில் முடிவு

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

 'Private industry affecting the environment should be closed permanently'-Village council meeting decided

 

மண்ணை மாசுபடுத்தி மக்களைப் பாதிக்கும் அளவிற்கு கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளை நிறுத்த வேண்டும் என ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம், கஸ்பாபேட்டை ஊராட்சி வாவி காட்டு வலசு கிராமத்தில் எஸ்.பி.எம். வீவிங் மில் என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.  இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் பஞ்சு துகள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு பொதுமக்கள் சுவாச கோளாறு, தோல் நோய் போன்ற பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

 

 'Private industry affecting the environment should be closed permanently'-Village council meeting decided

 

இந்த நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மே தினத்தை முன்னிட்டு கஸ்பாபேட்டை ஊராட்சியில் தலைவர் சித்ரா அர்ஜுனன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை நிறுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.

 

பொதுமக்களின் மனுவை ஏற்று நிலத்தடி நீரை குடிநீர் ஆதாரத்தை மாசடையச் செய்யும் எஸ்பிஎம் வீவிங் தொழிற்சாலையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  பொதுமக்களை பாதிக்கும் தொழிற்சாலையை நிறுத்துவது தொடர்பான தீர்மானம் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

 

Next Story

போராட்டங்கள் இல்லாமல் மனிதன் எதையும் அடைய முடியாது... மே தின வரலாறு!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

g


போராட்டங்கள் இல்லாமல் மனிதன் எதையும் அடைய முடிவதில்லை. பிறந்த குழந்தை கூட பசிக்காக அழும் போது தன் முதல் போராட்டத்தைத் தொடங்குகிறது அதனை அறியாமலேயே, பின் மூன்று மாதங்களில் குப்புற விழும்போதும், நடை பயிலும் போதும் சின்னச் சின்ன கீறல்களில் அதன் போராட்டத் தழும்புகளைக் காணலாம். நாம் பிறக்கும் போதே போராட்டக் குணம் நம்மில் ஒட்டிக்கொண்டதாலோ என்னவோ உணவிற்கும் உடைக்கும் இதோ இப்போது கரானோவின் அபாயாத்திற்கும் சேர்த்து நாம் போராட வேண்டியிருக்கிறது. இன்றைய போராட்டங்கள் மனிதனோடு இல்லை, கண்ணுக்குத் தெரியாத கரானோவோடு நம்மை நெருக்கும் மனிதர்களோடு, நம் கூடவே பிறந்த அடிவயிற்றுப் பசியென்னும் அரக்கனோடு, ஒருவேளை உணவிற்காக ஜகத்தை அழிக்க வேண்டும் என்று சொல்வதற்கு நாம் என்ன பாரதியாரா அவரையே இறந்த பிறகுதானே மதித்தோம் ஆனால் காற்றும் இயற்கையும் அவனின் கிறுக்கல்களை ஓவியமாய் நமக்கு முன்பே கொண்டாடியது. 


இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம், பிரான்ஸில் ஜனநாயம் அல்லது மரணம் என்ற கோஷப் போராட்டம் எல்லாமே தோல்வியில் முடிந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் வெற்றியும் பெற்று மைல்கல்லாக ஆனது. ரஷ்யா, அமெரிக்கா, சிகாக்கோவில் ஜூன் 1886- இல் 7 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு ஹேமார்க்கெட் படுகொலை இப்போதும் அங்கே நினைவுச்சின்னமாய் உழைப்பாளர்களின் போராட்டத்தை நமக்கு நினைவு படுத்திக் கொண்டு இருக்கிறது. அதேபோல் அமெரிக்காவில் தூக்கில் இடப்பட்ட தொழிலாளர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் வேலை நேரப் போராட்டமும், சிகாககோவின் தியாகமும் தான் இன்று உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் சென்னை மாநகரில்தான் முதன் முதலில் தொழிலாளர்தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான தோழர் ம. சிங்காலவேலர் 1923- இல் சென்னை அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்கள். அதன் நினைவுச் சின்னம்தான் மெரினாவின் உழைப்பாளர்கள் சிறை நாளை மீண்டும் ஒரு உதய நாளைக் கொண்டாடக் காத்திருக்கிறது. 

சென்னையில் எத்தனையோ சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் அவை எல்லாமே மத ரீதியாகவோ அல்லது ஒரு தனி மனிதம் மற்றும் அரசியல் அபிமானத்திற்காகவோ வைக்கப்பட்டு இருக்கும். சில இதில் விதிவிலக்கு. அவைகள் பராம்பரிய முறைமையை விளக்குவதற்கு இருக்கும். இறந்து போன விலங்குகளின் சிலைகள் கூட உண்டு. எல்லாச் சிலைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் சிறப்புகள் இருந்தாலும் நம் மெரினா உழைப்பாளர் சிலைக்குத் தனி சிறப்பு உள்ளது. இது ஒரு மதத்தையோ இனத்தையோ ஜாதியையோ குறிக்கவில்லை, ஒட்டுமொத்த உழைக்கும் சமுதாயத்தையே குறிக்கிறது. காலம் தொடங்கிய போதிலிருந்து முதலாளித்துவம் அதற்கு அடங்கியாளும் தொழிலாதித்துவமும் தொடங்கிவிட்டது. மே தினத்தின் வரலாறு என்னவோ 8 மணி நேர வேலையின் தொடக்கத்தை உண்டாக்குவதுதான் என்றாலும் சில நேரங்களில் அதிகமாக வேலை செய்வதற்காகப் பணத்தைக் கொடுத்து எதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினார்களோ அதையே மீண்டும் ஏற்றுக்கொள்ள வைத்தார்கள். அப்படித்தான் OT என்ற அதிகப்படியான வேலை அதேபோல் ஷிப்ட் முறையில் வேலையைச் செய்வது, நாம நம்மை அடக்குகிறார்கள் என்று எதிர்க்கிறோம் ஆனால் அதையே நாம் நம்மை அறியாமலேயே பணத்திற்கோ பிற பொருளுக்கோ அடங்கி ஏமாற்றப்பட்டு வருகிறோம் தினம் தினம். 

 

j


 

http://onelink.to/nknapp


மாதம் ஒரு நாளைய சந்தோஷம் மாதம் முழுமைக்கும் அவர்களுக்கு இருக்குமா என்பது தெரியாமலேயே இருந்தது ஆனால் திருப்தி என்னும் ஒற்றை வார்த்தைக்குள் உழன்று கொண்டு அவர்கள் வாழ்வாதாரத்தையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.  மே 1 தொழிலாளர்கள் வெற்றி நாளாய் உலகம் முழுக்க பரவ போராட்டம் தொடங்கி 33 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இந்த லாக்டவுன் மீண்டும் தொழிலாளர்களைத் தூண்டிவிட்டுத்தான் இருக்கிறது எதற்கு? நேரம் காலம் இல்லாமல் வேலை செய்யத் தங்களைத் தாங்களே அடிமைகளாக்கிக் கொள்ள வாழ்ந்தாக வேண்டுமே என்ற நிலையிலேயே நாளைய தொழிலாளர் தினமும் தொழிலாளிகளுக்கு வழக்கமான நாளாகவே நிறைந்திருக்கப் போகிறது.  உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்!