Skip to main content

படம் பார்த்தால் டிக்கெட் விலையில் 50% தள்ளுபடி...

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

கடந்த ஜூலை 4ஆம் தேதி ஜோதிகா அரசுப்பள்ளி ஆசிரியையாக நடித்து வெளியான படம் ராட்சசி. இந்த படத்தை புதுமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்க, எஸ்.ஆர். பிரபு தயாரித்தார். கடந்த வாரம் வெளியான இப்படம் அரசுப்பள்ளிகளில் நடக்கும் தவறுகளையும், அரசு ஆசிரியர்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறது படம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
 

theatre

 

இந்நிலையில் அரசு ஆசிரியர்கள் இந்த படம் பள்ளிகளை தனியார்மயமாவதை ஊக்குவிப்பதாகவும், இந்த படத்திற்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 

இந்நிலையில் படக்குழு, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இப்படம் போய்சேர வேண்டும் என்ற நோக்கத்தில் டிக்கெட் விலையிலிருந்து 50% தள்ளுபடி செய்ய ஏற்பாடு செய்துள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராட்சசி பட டீச்சரல்ல… நிஜ ராட்சசி டீச்சர்!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

திருவண்ணாமலை அடுத்த துர்கை நம்மியந்தல் கிராமத்தில் அரசின் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயில்கிறான் 8 வயதான ஜெயப்பிரகாஷ். இவனது அப்பா மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வருகிறார். தாயார் பரிமளா. கடந்த ஜீலை 16ந்தேதி பள்ளிக்கு சென்ற ஜெயப்பிரகாஷ்சிடம், ஆசிரியர் உஷா, கூட்டல் கணக்கு சரியாகபோடவில்லையென வகுப்பில் ஜெயப்பிரகாஷ்சை அடி பிச்சி எடுத்துள்ளார்.
 

 Not a ratchashi film teacher, but a real ratchashi teacher!


பிரம்பால் அடித்ததில் அந்த 8 வயது மாணவனின் உடலெல்லலம் ரத்தம் கட்டிக்கொண்டு வீங்கிப்போய்வுள்ளது. உடனே பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் இருந்து ஐஸ்கட்டி வாங்கி வந்து ஒத்தடம் தந்து வகுப்பறையில் படுக்கவைத்தவர், மாலை பள்ளி முடிந்தபோது, இதைப்போய் வீட்டில் சொன்ன நாளைக்கும் அடிப்பன் எனச்சொல்லி அனுப்பியுள்ளார். அடிவாங்கிய அந்த பையன் வீட்டில் எதுவும் சொல்லாமல், விளையாட செல்லாமல் வந்து படுத்துக்கொண்டுள்ளான்.


அதன்பின் நடந்தவற்றை ஜெயப்பிரகாஷ்சின் அம்மா பரிமளா நம்மிடம் கூறும்போது, அந்த ஸ்கூல்ல படிக்கற இன்னொரு பையன் எங்கிட்ட வந்து சொன்னான். வீட்ல வந்து பார்த்தப்ப படுத்துக்கிட்டுயிருந்தான், அவன் சட்டையை கழட்டி பார்த்தப்ப ரத்தம் கட்டிக்கிட்டு அடிச்சி வடுயிருந்தது எனச்சொல்லி கண் கலங்கியவர், உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிம்போய் காட்டனன், ஊசிப்போட்டு மருந்து தந்தவங்க, பெட்ல சேர்க்கச்சொன்னாங்க. அதுக்குள்ள ஊர் தலைவர் ( முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ) கிருஷ்ணராஜ் உட்பட இன்னும் சிலர் வந்து பேசிக்கலாம்ன்னு சொல்லி அழைச்சிக்கிட்டு வந்துட்டாங்க. இரண்டு நாளா அழைச்சிட்டு போய் ஊசி போட்டுக்கிட்டு வந்தன். 

Not a ratchashi film teacher, but a real ratchashi teacher!


ஜீலை 16ந்தேதி ஊர்க்காரங்க பத்துப்பேர் ஸ்கூல்க்கு என்னை அழைச்சிட்டு போனாங்க. அந்த டீச்சரம்மா, கணக்கு போடல அதனால் வேப்பமரத்தில் இருந்து பச்சை குச்சியை உடைச்சி எடுத்துவந்து அடிச்சன்னு சொன்னாங்க. பச்சை குச்சியால அடிச்சா எப்படியிருக்கும்ன்னு நீங்களே நினைச்சிப்பாருங்க என்றவர், அந்தம்மா, அடிச்சன் அதுக்கு என்ன பண்ண சொல்றிங்க, எனக்கு கலெக்டர் ஆபிஸ்ல, கட்சியில ஆளுங்கயிருக்காங்க. என்னை ஒன்னும் பண்ண முடியாதுன்னு அங்க சொன்னாங்க. ஒரு மன்னிப்பு கேளுங்க, அந்தம்மா புகார் தரமாட்டாங்கன்னு சொன்னாங்க. ரொம்ப நேரம் ஒரு மன்னிப்பு கேட்கலைங்க. அதுக்கப்பறம் ஸாரின்னு சொல்லிட்டு ஸ்கூல் உள்ள போய்ட்டாங்க.


பிறகு அந்த டீச்சர், 1000 ரூபாய் ஊசி போடன்னு ஆள் மூலமா குடுத்து அனுப்பனாங்க. நல்லா அடிச்சிடுவாங்க, பிறகு ஆஸ்பத்திரி செலவுக்குன்னு பணம் தந்தா வாங்கிக்கிட்டு கம்முனு போய்டனும்னு நினைச்சியிருக்காங்க. ஒன்னுக்கிட்ட ஒன்னாகியிருந்தாலும் இப்படித்தான் பணம் தந்து சரிப்பண்ணுவாங்களா என கோபமாக கேட்டவர். அந்தம்மா என்பையனை மட்டும் இப்படி அடிக்கல.
 

 

Not a ratchashi film teacher, but a real ratchashi teacher!


இதுக்கு முன்னாடி 5வது படிக்கற தீபம்நகர் பையனை அடிச்சி ஒரு வாரம் ஸ்கூல் போகல. போன வருஷம் 2 வது படிச்ச இதே ஊர் பையனை கை மேலயே அடிச்சி, ஒன்னரை மாசம் ஸ்கூல் போகல. அந்தம்மா 14 வருஷமா இங்கயே டீச்சரா வேலை பார்க்கறாங்க. பக்கத்தலயிருக்கற சீலப்பந்தல் ங்கற கிராமத்தை சேர்ந்தவங்க. அதனால் தலைவருங்க, கவுன்சிலருங்க ஒருத்தருக்கு ஒருத்தர் முகத்தை பார்த்துக்கனும்மேன்னு எத்தனை முறை அடிச்சி பிரச்சனையானாலும் சமாதானம் செய்து அனுப்பிடறாங்க என்றவர்.


இன்னைக்கு பையன் உடம்புல அடிச்சயிடத்தல ரத்தம் கட்டியது லேசாயிருக்கு. இருந்தும் பையனை கூப்ட்டும் போய் விட்டன். என்னை வேற எங்கயாவது சேர்த்துவிடு, இதே ஸ்கூல்ன்னா போகமாட்டன்னு அழுதான். நாங்கயென்ன பணக்காரங்களா உடனே வேற ஸ்கூல் மாத்த. நாம தான் படிக்கல, புள்ளைங்களாவது படிக்கட்டும்ன்னு தான் அவ கத்தி அழ, அழ மனச தேத்திக்கிட்டு ஸ்கூல்ல விட்டன், பின்னாடியே ஓடிவந்தான். ஹெட்மாஸ்டரம்மா தான், அந்த டீச்சர் வரல, வான்னு அழைச்சிம் போனாங்க என்றார்.

அந்த பையனின் பாட்டி மற்றும் உறவினர்கள், ஒரு குழந்தைங்களை இப்படி அடிக்கற டீச்சரை இதுவரை நாங்க எங்க வயசுக்கும் பார்த்ததில்லை என்றார்கள்.

நாம் அந்த பள்ளிக்கு சென்றபோது, தலைமைஆசிரியர் அறையில் யாரும்மில்லை. அந்த டீச்சர் வரல என்றார்கள். இதுப்பற்றி முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, அதுப்பற்றி தகவல் வந்தது, இதுப்பற்றி மாவட்ட கல்வி அலுவலரை விசாரிச்சி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கசொல்லியுள்ளது என்றார்.


பள்ளி எப்படியிருக்க வேண்டும், ஆசிரியர்கள் மாணவ – மாணவிகளிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என தலைமையாசிரியராக ஜோதிகா நடித்த ராட்சசி என்கிற படம் வெளிவந்து பலதரப்பின் பாரட்டை பெற்றுள்ளது. அதில் ஜோதிகா ஏற்றுள்ள கதாபாத்திரம் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரின் கதாபாத்திரம் தான். மாணவர்கள் மீது அக்கறையும், நலனும் கொண்டுள்ள பல ஆசிரியர்கள் உள்ள மாவட்டத்தில் குழந்தைகளிடம் வன்முறையை காட்டும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் வேதனைப்பட வேண்டும்.

 

Next Story

“அரசுப்பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தி அவதூறு... தடை செய்ய வேண்டும்”- ஜோதிகா படத்திற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

கடந்த ஜூலை 4ஆம் தேதி ஜோதிகா அரசுப்பள்ளி ஆசிரியையாக நடித்து வெளியான படம் ராட்சசி. இந்த படத்தை புதுமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்க, எஸ்.ஆர். பிரபு தயாரித்தார். கடந்த வாரம் வெளியான இப்படம் அரசுப்பள்ளிகளையும், அரசு ஆசிரியர்களையும் தவறாக சித்தரிப்பதுபோல உள்ளது என கூறி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 

jyothika

 

 

அதில், “ஜூலை 5ஆ ம் தேதி ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ராட்சசி திரைப்படம் அரசுப்பள்ளிகளை சீர்த்திருத்துவதாகக் கூறி சேற்றை வாரிப்பூசுகிறது. அரசுப்பள்ளியினை கேவலப்படுத்தும் நோக்கத்தோடும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தி அவதூறு பரப்பும் விதமாக உள்ளதால் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துக்கொள்வதோடு படத்தை தடைசெய்ய வேண்டும்.
 

முற்போக்குப் போர்வையில் போலியான விளம்பரம் மூலம் வியாபாரம் தேடும் முயற்சியே ராட்சசி. அரசுப் பள்ளி குப்பை அங்கு வேலைசெய்யும் ஆசிரியர்கள் எப்போது வருவார்கள் எப்போது போவார்கள் என்று தெரியாது. ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவார்கள்  பல்வேறு தொழிலில் ஈடுபடுகிறார்கள் உள்ளிட்ட தவறான வசனங்களை எழுதியுள்ளனர்.
 

இதன்மூலம் அரசுப்பள்ளியினையும், ஆசிரியர்களையும் இழிவுப்படுத்தி பெற்றோர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் தவறான கருத்துக்களைப் பதிவு செய்வதன் மூலம் அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு எப்படி முன் வருவார்கள்.
 

இது தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் முயற்சியே, ஆசிரியர்களின் உரிமை போராட்டங்களை ஒடுக்கி ஜனநாயகத்தின் குரல்வலையை அறுப்பதாக வசனங்களை இயக்குநர் கெளதம்ராஜ், பாரதிதம்பி  புனைந்திருக்கிறார்கள்.
 

கல்வியின் தரம் குறித்து அரசுக்கு ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள்  கோரிக்கை வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை அறியாமல் எதுவுமே தெரியாமல் போலி முற்போக்குக்கு ஏன் ஆசிரியர்களை அசிங்கப்படுத்துகிறீர்கள்?
 

கொஞ்சம் கொஞ்சமாக கல்வித்துறையை தனியார் மயமாக்குவதற்கு வக்காலத்து வாங்குவதாக உள்ளது இந்தப்படம். ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக ராட்சசி ஜோதிகாவும், சாட்டை சமுத்திரகனியும் முனைவது வரவேற்புக்குரியது.
 

அதே நேரத்தில் ஒரு ஆசிரியரை உயர்வாக காட்டி ஒட்டுமொத்த அரசுப்பள்ளிகளையும் ஆசிரியர்கள் மீது சேற்றை வாரி இரைப்பது எவ்விதத்தில் நியாயம்? எல்லா மனிதர்களையும் போலவே இந்த அமைப்பிற்குள் சில ஆசிரியர்களும் விதிவிலக்காக தங்கள் கடமையை சரிவர செய்யாமல் இருக்கலாம் அதை கண்டிக்க வேண்டியது மறுப்பதற்கில்லை ஆனால் இந்த அமைப்பின் சீரழிவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்பது போல படம் முழுவதும் காட்டப்படுவது கண்டனத்திற்குரியது.
 

அரசுப்பள்ளிகள் 56,000 பள்ளிகள் இயங்குகின்றன. மிகப்பெரிய நெட்வொர்க். குறிப்பாக அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அடுத்தவேளை உணவுக்காகப் போராடும் பெற்றோரின் குழந்தைகள். பெற்றோர்களே இல்லாத குழந்தைகள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களின் குழந்தைகள், முறையாக உணவு உடை இருப்பிடம் இல்லாதவர்களின் குழந்தைகள்தான் பெரும்பாலும் அரசுப்பள்ளியில் படிக்கிறார்கள்.
 

இந்த குழந்தைகளைத்தான் அரசுபொதுத் தேர்வில் 490/500 எடுக்க செய்வது அரசு ஆசிரியர்களே. ஆசிரியர்பணி அறப்பணி அதனை அர்ப்பணி என்ற விதத்தில் ஆசிரியர்கள் பணிபுரிந்துவருகிறார்கள். முறையான அங்கீகாரமின்றி இயங்கிய தனியார் பள்ளியில் 94 குழந்தைகள் தீயில் கருகியதே இனி நடக்காமல் தடுத்திட இரக்கமுள்ள எந்த இயக்குநரும் தடுத்திட, படம் எடுத்திட வரவில்லை.
 

இப்போதும் 2000ஆக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறதே மருந்துக்குகூட அதுப்பற்றி படத்தில் வசனமில்லையே. முற்போக்கு சிந்தனைப்படைத்த இயக்குநர் கல்வியினை அரசே ஏற்று நடத்தவேண்டும் என ஏன் வலியுறுத்தவில்லை? அரசுப்பள்ளியின் கல்வித்தரமும் ஆசிரியர்களின் அறப்பணியும் நேரில் சென்று பார்த்தால் தெளிவாகப்புரியும்.
 

அரசுப்பள்ளிகளை இழிவுப்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ள ராட்சசி படத்தினை தடைசெய்திட நடவடிக்கை எடுக்கவேண்டும், என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்” என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தங்களுடைய கண்டனம் தெரிவித்துள்ளது.