400 theater closed andhra pradesh

ஆந்திர மாநிலத்தில் திரையரங்குடிக்கெட்விலையைகணிசமாககுறைத்துஜெகன் மோகன்ரெட்டி தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தது.இதற்குதிரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள்,திரைபிரபலங்கள், தயாரிப்பாளர்கள்எனபலரும் ஒன்றாக இணைந்து ஆந்திர முதல்வர்ஜெகன் மோகன்ரெட்டியை நேரில் சந்தித்துடிக்கெட்விலையை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதன் பிறகுடிக்கெட்விலை உயர்த்தப்பட்டது.

Advertisment

இதையடுத்துகடந்த சில மாதங்களாக ஆந்திராவில் திரையரங்குகளில் வந்துபடம் பார்ப்பவர்களின்எண்ணிக்கைகுறைந்துள்ளதாகதிரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும் ஒரு கட்சிக்கு 20 முதல் 40 பேர்கள் மட்டுமே வருகின்றனர். அதில் வரும் வருமானம் திரையரங்குபராமரிப்புக்குகூட போதவில்லை என்று கூறுகின்றனர்.

Advertisment

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் 400 திரையரங்குகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகளுக்கு போதிய பார்வையாளர்கள் வராததால் அதனை முடி வைத்துள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தசரா அல்லது சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகவுள்ளது, அதனால் அன்றுவரை நஷ்டத்தில் இயங்கும்திரையரங்குகளை மூடிவைக்கஅதன் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.