Skip to main content

சிறைக்கு சென்று சந்தித்த 4 நடிகைகள் - சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் புது தகவல்

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

4 actress meet suresh chandrasekhar in jail

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக, சிறையில் இருக்கும் தொழிலதிபரை, சிறையிலிருந்து விடுவிக்க உதவுவதாகக் கூறி தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மிரட்டி மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால், உதவியாளர் பிங்கி இரானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

இதனிடையே சுகேஷ் சந்திரசேகர், மிரட்டி பறித்த பணத்தில் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்குக் கோடிக்கணக்கில் பரிசுப்பொருள்களை வாங்கிக்கொடுத்துள்ளார். அவர் செய்த குற்றங்கள் தொடர்பாக அமலாக்க பிரிவு அதிகாரிகளும், டெல்லி குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்திருந்தனர். ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் ஜாக்குலின் பெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்த்துள்ளனர். டெல்லி போலீசார் இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 

முதலில் நடிகை நோராவை அழைத்து 7 மணி நேரம் விசாரணை நடத்தி தொடர்ந்து ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் ஜாக்குலினுக்கு சுகேஷ் அறிமுகம் செய்துவைத்த பிங்கி இரானியிடமும் விசாரணை நடத்தினர். முதலில் இரண்டு பேரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் வாங்கி, பின்பு இரண்டு பேரையும் ஒன்றாகவைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஏற்கெனவே கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சற்று மாறுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சுகேஷ் சந்திரசேகர் குற்றப் பின்னணி உடையவர் என்றும், அவர் திருமணமானவர் என்று தெரிந்தும் அவருடன் தொடர்பு வைத்துக்கொண்டதோடு, அவருடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாக்குலின் பெர்னாண்டஸை குற்றம்சாட்டியுள்ளனர். 

 

இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, டெல்லி போலீசாரின் விசாரணைக்கு உதவியாக இருந்துள்ளது. அந்த அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் நிகிதா தம்போலி, சாகத் கன்னா, சோபியா சிங் மற்றும் அருஷா பாட்டீல் ஆகிய மேலும் 4 நடிகைகள் இடம்பெற்று இருக்கிறார்கள். இந்த நான்கு நடிகைகளும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைக்குச் சென்று சுகேஷ் சந்திரசேகரைச் சந்தித்து பணம் மற்றும் பரிசுப்பொருள்களைப் பெற்று வந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பிங்கி இரானி செய்துள்ளார்.

 

இந்த நான்கு நடிகைகளிடமும் பிங்கி இரானி, சுகேஷ் சந்திரசேகரை ஒவ்வொரு விதமாக கூறியிருக்கிறார். நிகிதா தம்போலியிடம் 'தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர், அவரது பெயர் சேகர்' என்றும், சோபியா சிங்கிடம் சினிமா தயாரிப்பாளர் சேகர் ரெட்டி என்றும், அருஷாவிடம் வேறு பெயரையும் தெரிவித்துள்ளார். மேலும் பிங்கி இரானி, இது போன்று நடிகைகளை சுகேஷுக்கு அறிமுகம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

நடிகை நிகிதா முதலில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுகேஷைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதற்காக பிங்கி இரானிக்கு சுகேஷ் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அதில் ரூ.1.5 லட்சத்தை நிகிதாவுக்கு பிங்கி இரானி கொடுத்துள்ளார். இரண்டாவது சந்திப்புக்குப் பிறகு 2 லட்சம் மதிப்புள்ள பரிசுப்பொருள்களை கூரியர் மூலம் நிகிதாவுக்கு சுகேஷ் அனுப்பியுள்ளார். மேலும் நடிகை சோபியா சிங்கும் இரண்டு முறை சிறைக்குச் சென்று சுகேஷ் சந்திரசேகரை சந்தித்துள்ளார். அவர்கள் சிறைக்குச் சென்று வந்தவுடன் அவர்களின் வங்கிக் கணக்கில் பெருந்தொகை டெபாசிட் செய்துள்ளதாக அமலாக்கப் பிரிவின் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.