Skip to main content

'30 வருட திரைப் பயணம்' - தமிழ் ரசிகர்களை மகிழ்வித்த ஷாருக்கான்

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

'30 Years of cinema journey'- Shah Rukh Khan released his 'pathan' movie poster

 

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடித்த பல படங்கள் தமிழில் டப் செய்து திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. ஷாருக்கான், தற்போது அட்லீ இயக்கும் 'ஜவான்' மற்றும் பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 'டன்கி' படத்திலும் நடிக்கிறார். இதனிடையே 'யாஷ் ராஜ் பிலிம்ஸ்' தயாரிப்பில் 'பதான்' படத்தில் நடிக்கிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

 

இந்நிலையில் ஷாருக்கான், திரையுலகிற்கு வந்து 30-ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'பதான்' படக்குழு படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அட்லீ - ஷாருக்கான் இணையும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

nfdnd

 

'ராஜா ராணி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். ‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளதாவும் கூறப்பட்டது. இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத போதிலும், அட்லீ மற்றும் ஷாருக்கான் இடையேயான சந்திப்பு சில முறை நடந்தது. 

 

sdfshd

 

இதையடுத்து அட்லீ - ஷாருக்கான் இணையும் படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கிவிட படக்குழு ஆயத்தமாகிவருவதாக கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேவில் தொடங்கியுள்ளது. இதில் ஷாருக்கான், நயன்தாரா கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

 

Next Story

அட்லீ - ஷாருக்கான் படத்தில் நயன்தாரா..!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

gdgsgsv

 

ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய அட்லீ, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘பிகில்’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கப்போகும் அடுத்த படம் எது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்கவுள்ளதாக நீண்டநாட்களாகவே கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது அந்தப் படம் உறுதியாகிவிட்டதாகவும் அந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை இயக்குநர் அட்லீ தொடங்கிவிட்டதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

இந்த நிலையில், அட்லீ - ஷாருக்கான் இணையும் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு இப்படத்தில் நடிக்க மிகப்பெரிய சம்பளம் பேசபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் உருவான ‘ராஜா ராணி’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.