Skip to main content

இரண்டு ரஜினி ஹேப்பி...! மூன்றாவது ரஜினி...? 

Published on 11/02/2019 | Edited on 11/02/2019
rajini

 

 

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான காலா படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. இருந்தும் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த அளவு ரஜினியின் மாஸ் விஷயங்கள் இப்படத்தில் குறைவாக இருந்ததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான 2.0 படம் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி சுமார் 700 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றிபெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓர் அளவு பூர்த்தி செய்தது. இதையடுத்து ரஜினி தரப்பும் இதை கவனத்தில் கொண்டு அடுத்ததாக ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமான கதையில் ரஜினி நடிக்க முடிவெடுத்தது. அதன்படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட படத்தில் நடித்தார் ரஜினி. இப்படம் கடந்த பொங்கலன்று வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்று மீண்டும் தான் என்றுமே சூப்பர்ஸ்டார் தான் என்பதை நிரூபித்தார் ரஜினிகாந்த். இதனால் சூப்பர்ஸ்டார் ரஜினி ஹேப்பி.

 

rajini

 

இதேபோல் ரஜினியுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான தருணம் தற்போது நிகழ்ந்துள்ளது. ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2010ஆம் ஆண்டு தொழிலதிபர் அஷ்வினை திருமணம் செய்தார். பிறகு இவர்களுக்கு 2015ஆம் ஆண்டு தேவ் என்ற மகன் பிறந்தான். பின்னர் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனால் ரஜினியும் மிகுந்த கவலையில் இருந்தார். இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிக்கும் தொழிலதிபரும், நடிகருமான விசாகனுக்கும் சமீபத்தில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதையடுத்து இவர்களுடைய திருமண வரவேற்ப ராகவேந்திரா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதனைத்தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் திருமண சடங்குகள் நடந்தன. ராதா கல்யாண வைபோக நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்று “ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி” என்ற பாடலுக்கு நடனம் ஆடி மீண்டும் கவலையை மறந்து உற்சாகமானார். இதையடுத்து சவுந்தர்யா விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நல்லபடியாக நடந்தது. விழாவில் ரஜினி மனநிம்மதியாக மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இதனால் தந்தை ரஜினியும் ஹேப்பி.

 

rajini

 

இதையடுத்து ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என நீண்டநாட்களாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினி கூடிய விரைவில் அரசியலில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படி ரஜினி விரைவில் அரசியல் பிரவேசம் செய்யும் பட்சத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தலைவர் ரஜினி ஹேப்பியா...? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து பாப்போம்....

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி படத்தில் இணையும் ஸ்ருதிஹாசன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
shrtthi hassan to join rajini 171

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ, வருகின்ற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். மேலும் கையில் கடிகாரத்தை விலங்காக கட்டியிருந்தார். இதை வைத்து ஏகப்பட்ட கதைகள் ரசிகர்களால் யூகிக்கப்பட்டது.

இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிரபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவரது இசையில் இனிமேல் ஆல்பம் சமீபத்தில் வெளியானது. இதில் ஸ்ருதிஹாசனும் லோகேஷும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.