தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். கடைசியாக அயலான் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழைத் தாண்டி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவர், இந்தி தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜாக்கி பாக்னானி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கும் அவர்களது வீட்டில் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் காலையில் சீக்கிய முறைப்படியும் மாலையில் இந்து முறைப்படியும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்வில் இருவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்ஷய் குமார், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட சில பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
‘அன்பே... பேரன்பே...’ - காதலரைக் கரம் பிடித்த ரகுல் ப்ரீத் சிங்
சார்ந்த செய்திகள்
Next Story
காதல் திருமணம்; காவல் நிலையத்தின் முன்பு நடந்த மோதலால் பரபரப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, திம்மம்பேட்டை அடுத்த புல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் முருகன். இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சில மாதங்களிலேயே, இவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் முருகனுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த 21 வயதான அபிநயா ஶ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த, பெண் வீட்டார், அந்த பெண்ணிடம் காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த 24 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி பழனி சென்று அங்குள்ள முருகர் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் பொள்ளாச்சி பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த 26 ஆம் தேதி பெண்ணின் பெற்றோர்கள் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தனர்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில், இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், காதலர்களின் செல்போனை எண்ணை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து, காதலர்களின் செல்போன் சிக்னலை வைத்து பொள்ளாச்சியில் தங்கியிருந்தவர்களை போலீசார் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, இரு தரப்பினரை சேர்ந்தவர்கள் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து, காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் இருவரும் ஒன்றாக செல்வதாக விருப்பம் தெரிவித்ததால், போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Next Story
ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். கடைசியாக அயலான் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழைத் தாண்டி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவர், இந்தி தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜாக்கி பாக்னானி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இருவரின் காதலுக்கும் அவர்களது வீட்டில் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் காலையில் சீக்கிய முறைப்படியும் மாலையில் இந்து முறைப்படியும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்வில் இருவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்ஷய் குமார், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட சில பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங், பிரதமர் மோடி தங்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் வாழ்த்து கடிதத்தில், “நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் வாழ்நாள் முழுவதும் வாழத் தொடங்கும் ஜாக்கியும் ரகுலுக்கும் எனது மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள். இனி வரும் வருடங்கள் தம்பதியர் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகும். தம்பதியரின் மனம் மற்றும் செயல்கள் ஒன்றாக இருக்கட்டும். எப்பொழுதும் அருகருகே இருந்துகொண்டு, தங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் நனவாக்கும் முயற்சியில் ஒருவரையொருவர் கைகோர்த்து, சிந்தனையோடும் அன்போடும் பொறுப்புகளை ஏற்று, வாழ்க்கைப் பயணத்தில் சரியான தம்பதிகளாக இருக்கட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Thankyou so much Honorable Prime Minister @narendramodi ji. Your blessings mean a lot to us 🙏🏻🙏🏻 @jackkybhagnani pic.twitter.com/Ymq7jENvUi— Rakul Singh (@Rakulpreet) February 22, 2024