அனுபமா பரமேஸ்வரன் படங்கள்
சார்ந்த செய்திகள்
Next Story
சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்யும் அதர்வா!!!
100 படத்தை தொடர்ந்து அதர்வா இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். தமிழில் அனுபமா நடிக்கும் இரண்டாவது படம் இது ஆகும்.
குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகுகிறது. இன்னும் இந்த படத்திற்கு பெயரிடப்படவில்லை. அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள்.
இந்த படம் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய நின்னுக்கோரி படத்தின் ரீமேக். தெலுங்கில் நானியும், நிவேதா தாமஸும் நடித்திருப்பார்கள்.
அதர்வா நடித்திவரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறார்கள்.
Next Story
பும்ராவும் நானும் காதலிக்கிறோமா? பதிலளித்த நடிகை அனுபமா!
பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனுக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் ஏராளம். மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர்.
இந்நிலையில் நடிகை அனுபமாவும், இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் காதலிக்கின்றனர் என்று சமூக வலைதளத்தில் பரவலாக தகவல் 2019 உலகக்கோப்பை தொடர் தொடங்கும் முன்பில் இருந்தே பரவி வருகிறது. அதற்கு காரணம் என்ன என்றால் பும்ரா பின் தொடரும் ஒரு சிலரில் அனுப்பமா மட்டுமே நடிகை வேறு எந்த நடிகையும் அவர் பின் தொடரவில்லை. அதேபோல அனுபமா, பும்ரா பதிவிடும் அனைத்து பதிவுகளையும் லைக் செய்து, சில்வற்றை ரீட்வீட்டும் செய்கிறார். இதுபோன்ற விஷயங்களை வைத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக காதலித்து வருகின்றனர் என்று தகவல் பரவி வந்தது.
ஞாயிற்றுக்கிழமை அனுபமா ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். திங்கட்கிழமை பும்ரா ட்விட்டரில் பதிவு ஒன்றை போட, இவ்விரண்டை வைத்தும் சமூக வலைதளத்தில் இருவரும் காதலிப்பது போன்ற மீம்ஸ்கள் போட தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் நடிகை அனுபமா இதுகுறித்து ஒரு பேட்டியில், நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை. இருவரும் நல்ல நண்பர்களே. காதல் என்று வரும் செய்திகள் அனைத்தும் புரளிகள் மட்டுமே என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இது போன்ற கிசுகிசுக்கள் சகஜம் தான் என்றும் அனுபமா குறிப்பிட்டுள்ளார்.