Next Story
நெஞ்சில் துணிவிருந்தால், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், கோலிசோடா 2 போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர் சத்யமூர்த்தி தற்போது "எச்சரிக்கை' இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து பாராட்டியதுடன் சேர்த்து படத்தையும் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார். டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை பிரபல லஷ்மி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிரத்னம், AR.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய இவர் இப்படம் குறித்து பேசும்போது.... "இது கிரைம் திரில்லர் படம். 'எச்சரிக்கை' இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம்.
சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார். 'கிட்நாப்' பற்றி இதில் சொல்லி இருக்கிறோம். பாண்டிச்சேரி சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. படத்தை பார்த்த கிளாப் போர்டு சத்யமூர்த்தி பாராட்டியதோடு மட்டுமல்லாமல் படத்தின் மொத்த உரிமையையும் வாங்கி ரிலீஸ் செய்கிறார். இம்மாதம் 24ஆம் தேதி படம் வெளியாகிறது" என்றார். மா, லஷ்மி குறும் படங்களின் நேர்த்தியை கேள்விப்பட்ட அறம், குலேபகாவலி படங்களின் தயாரிப்பாளர் ராஜேஷ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் சார்ஜுன் சொன்ன வித்தியாசமான கதையை கேட்டு உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் தற்போது யூ டியூப் புகழ் இளைஞர்களை வைத்து 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்ற படத்தையும் தயாரித்து முடிற்றிருக்கிறது. மேலும் இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்க இருக்கிறது. மேலும் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Next Story
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் விஜய்யின் 62வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். விஜய் - முருகதாஸ் கூட்டணியில் மூன்றவது முறையாக உருவாகும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று சென்னை விமான நிலையத்தில் ஆரம்பமானது. இதில் முதன் முதலாக நடிகை வரலட்சுமியும் இணைந்துள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கெட்டது பண்ணும் அரசியல்வாதிகளை தண்டிக்கும் பணக்காரராக விஜய் நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள். மேலும் நடிகை வரலட்சுமியும் தற்போது அரசியல்வாதியாக நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த படப்பிடிப்பில் பச்சை நிற காட்டன் புடவை அணிந்த பெண் அரசியல் வாதியாக வரலக்ஷ்மி தோன்றினார். மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.