நடிகர் அசோக் செல்வனும் நடிகை கீர்த்தி பாண்டியனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இன்று (13.09.2023) இருவரும் அவர்களது குடும்பத்தினர்சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருநெல்வேலியில் நடந்த இந்த திருமணத்தில் அவர்களது குடும்ப உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. புது தம்பதியினருக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.