‘திசை எங்கிலும் எல்லைகள் மீறடா…’ - அடுத்த ரேஸுக்கு தயாரான அஜித்

திரைத்துறையைத் தாண்டிகார்ரேஸில்ஆர்வமுள்ள அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்கார்ரேஸுக்குதிரும்பியுள்ளார். மேலும்அஜித்குமார்ரேஸிங்என்ற புதியகார்ரேஸ்அணியை உருவாக்கியுள்ளார். இந்த அணி துபாயில் நடந்து முடிந்த24ஹெச்சீரிஸ்போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தது. இதனை அஜித்உற்சாகமாககொண்டாடினார். இது தொடர்பானவீடியோக்கள்சமூகவலைதளங்களில்வெளியாகிவைரலானது. அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு அஜித் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். மேலும் ரசிகர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் கவனம் செலுத்த அறிவுறுத்தி பேட்டி கொடுத்திருந்தார். இந்த நிலையில் அடுத்தபோட்டிற்குஅஜித் மற்றும் அவரது அணி தயாராகியுள்ளது. தெற்குஐரோப்பியதொடர் 2025கார்ரேஸ்போர்ச்சுக்கலில்நாளை(18.01.2025) மற்றும் நாளை மறுநாள்(19.01.2025) ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அஜித் உள்ளிட்ட அவரது அணியினர்போர்ச்சுக்கல்சென்றுள்ளனர்.

ACTOR AJITHKUMAR car race
இதையும் படியுங்கள்
Subscribe