Skip to main content

“நான்கு திருமணம் அல்ல நாற்பது திருமணங்கள் கூட நான் செய்வேன்..” - நடிகை வனிதா விஜயகுமார் 

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகை வனிதா விஜயகுமாரும், நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் மணமகன், மணமகள் வேடத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. இது சமூகவலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

 

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை வனிதா விஜயகுமார், “மணமகன், மணமகள் வேடத்தில் ‘பிக்கப்’ என்ற திரைப்படத்திற்காக எடுத்த ஃபோட்டோ ஷூட். அந்தப் புகைப்படத்தை வெளியிட்டேன். அதனைக்கொண்டு, இது எனது அடுத்த திருமணமா என்று சமுகவலைதளத்தில் அனைவரும் கேள்வி எழுப்பினர்.

 

பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. தற்கொலை, பாலியல் வன்புணர்வு போன்றவை தற்போது அதிகமாக நடைபெற்றுவருகிறது. நடிகை நயன்தாராவை ‘பெண் சூப்பர் ஸ்டார்’ என்று அழைப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். அதற்கான உழைப்பையும், கஷ்டத்தையும் தாண்டிதான் அவர் வந்துள்ளார்.

 

பெண்களுக்கான சுதந்திரம் நிச்சயம் வேண்டும். அதற்குப் பக்கபலமாக ஊடகங்கள் இருக்க வேண்டும். என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான்கு திருமணம் அல்ல நாற்பது திருமணம் கூட செய்வேன். அது எனது சொந்த விருப்பம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிமன்றத்தில் ஆஜரான பவர் ஸ்டார் சீனிவாசன்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Power star Srinivasan appeared in the court regards check fraud case

ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரின் தொழிலை மேம்படுத்துவதற்காக ரூ.15 கோடி கடன் வாங்கித் தருவதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார். அதற்கு ஆவண செலவுக்காக ரூ.14 லட்சம் தர வேண்டும் எனக் கூறி, கடந்த 2019ஆம் ஆண்டு முனியசாமியிடம் பெற்றுள்ளார். பின்பு போலியான ஒரு காசோலையையும் கொடுத்துள்ளார். கடனும் வாங்கி கொடுக்காமல் பெற்று கொண்ட ரூ.14 லட்சத்தையும் திருப்பி கொடுக்காததால் முனியசாமி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து பணத்தை வாங்கிவிட்டு போலி செக் கொடுத்துள்ளதாக சீனிவாசன் மீது முனியசாமி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார் பவர் ஸ்டார். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செக் மோசடி வழக்கில் ஆஜராகாமல் இருந்ததற்காக, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி நிலவேஸ்வரன் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் தனக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரி ஆஜராகியுள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன்.   

Next Story

பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Warrant for Power Star Srinivasan in check fraud case

ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரின் தொழிலை மேம்படுத்துவதற்காக ரூ.15 கோடி கடன் வாங்கித் தருவதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார். அதற்கு ஆவண செலவுக்காக ரூ.14 லட்சம் தர வேண்டும் எனக் கூறி, கடந்த 2019ஆம் ஆண்டு முனியசாமியிடம் பெற்றுள்ளார். பின்பு போலியான ஒரு காசோலையையும் கொடுத்துள்ளார். கடனும் வாங்கி கொடுக்காமல் பெற்று கொண்ட ரூ.14 லட்சத்தையும் திருப்பி கொடுக்காததால் முனியசாமி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து பணத்தை வாங்கிவிட்டு போலி செக் கொடுத்துள்ளதாக சீனிவாசன் மீது முனியசாமி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார் பவர் ஸ்டார். இந்த நிலையில், செக் மோசடி வழக்கில் ஆஜராகாமல் இருந்ததற்காக, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி நிலவேஸ்வரன் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.