Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி -4

Published on 16/07/2019 | Edited on 18/07/2019

பருப்பு வாங்கியதில் ஊழல் (குஜராத்-மகாராஸ்டிரா)! DAL SCAM (GUJARAT AND MAHARASTHRA)

 

 

thodargal bjp scam part 4

 

 

 

2015 முதல் 2016 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் குஜராத்திலும் மகாராஸ்டிராவிலும் பாஜக அமைச்சர்களின் உதவியோடு பருப்பு வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அரசாங்க உதவியோடு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இந்த பற்றாக்குறை என அம்பலப்படுத்தப்பட்டது. மத்தியில் மோடி அரசும், இரண்டு மாநில பாஜக அரசுகளும் செய்த சதி காரணமாக இந்த மாநிலங்களில் மக்கள் பருப்புக்காக வழக்கத்தை விட 150 முதல் 200 சதவீதம் வரை அதிகமாக பணம் கொடுக்க வேண்டியதாயிற்று. பருப்பு விலை கிலோவுக்கு 130 முதல் 200 ரூபாய் ஆகியது. இந்த பற்றாக்குறையால் பாஜக அமைச்சர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் பெற்றனர்.

 

 


ராணுவக் கண்காட்சி ஊழல் (கோவா)- DEFENCE EXPO SCAM (GOA).

 

 

thodargal bjp scam part 4

 

 

கோவாவில் ராணுவ கண்காட்சி நடத்துவதற்காக பெதுல் என்ற இடத்தில் 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசுக்கு கோவா அரசு வழங்கியது. இதுதொடர்பாக ராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா அரசுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி ராணுவ கண்காட்சிக்கு இடம் ஒதுக்கும் படி கேட்டிருந்தார். கடற்கரையை ஒட்டி 150 ஏக்கர் நிலத்தை ஒதுக்கும் படியும், அப்போது தான் 10 ஆயிரம் அடி நீள விமான ஓடுதளம் அமைக்க முடியும் என்றும், கோவாவில் இது போன்ற கண்காட்சிகளை நடத்த வசதியாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். இதில் ஊழல் என்னவென்றால், மத்திய அரசுக்கு கோவாவில் நிலம் ஒதுக்க மாட்டோம் என்று அரசு தீர்மானம் போட்டதே பாரிக்கர் முதல்வராக இருந்த போது தான்.

 

 


மருத்துவக்கல்லூரி தேர்வில் ஊழல்! (DMAT SCAM).

 

 

thodargal bjp scam part 4

 

 

மத்தியப்பிரதேச மாநில பாஜக ஆட்சியில் ஊழல்கள் அடுத்தடுத்து தலைவிரித்தாடின. மருத்துவ கல்லூரி அனுமதித் தேர்வில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது அம்பலமானது. 2009 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் தனியார் கல்லூரி மேனேஜ்மெண்ட் கோட்டாவில் ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது. இந்த ஊழல் வியாபம் ஊழலைக் காட்டிலும் மிகப்பெரியது என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

 


பண மதிப்பிழப்பு ஊழல்! (DEMONETISATION).

 

 

thodargal bjp scam part 4

 

 

பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே பாஜக தலைவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கொட்டப்பட்டது என்று மீடியாக்களில் தகவல்கள் வந்தன. அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் 10 பண பரிவர்த்தனைகளை ஆதாரமாக கொண்டு இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் கட்சிக்கு ஏராளமாக நிலம் வாங்கப்படுகிறது. நாங்கள் கையெழுத்து மட்டுமே போடுகிறோம். மற்ற படி பணம் முழுவதும் கட்சியிலிருந்தே வருகிறது என்று பாஜக எம்எல்ஏவான சஞ்சீவ் சவ்ரஸியா கூறினார். இந்த நிலம் அனைத்தும் கட்சி அலுவலகங்கள் கட்டவும், வேறு காரணங்களுக்காகவும் வாங்கப்படுவதாக அவர் கூறினார். 

 

 

 

 

 

முந்தைய பகுதி:

ஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி3
 

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வங்கி மோசடி புகார்; அஜித் பவார் மனைவி மீதான வழக்கு மூடிவைப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Closing the case against Ajitpawar's wife on Complaint of bank fraud

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதன்படி, மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே முதற்கட்டமாக மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி அன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாய் நடைபெற்ற வந்த நிலையில், இன்று (24-04-24) மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 

மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஸ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் எனவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதே வேளையில், நடைபெறவிருக்கிற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா, பாராமதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். இதற்கிடையே, ரூ.25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை குற்றப்பிரிவு காவல்துறை நடத்தி வந்தது. இந்நிலையில், வங்கி மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சுனேத்ரா பவார் மீது எந்தவித ஆதாரம் இல்லை என்றும், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை எனவும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்பித்து வழக்கை மூடியுள்ளது.