Skip to main content

"இப்படி ஒரு அரக்கன் எந்த நூற்றாண்டிலும் பிறந்ததில்லை" - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 09

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

 Thilagavathi IPS (Rtd) Thadayam : 08

 

கடந்த நூற்றாண்டின் மிகக் கொடூரமான ஒரு அரக்கன் என்று குற்றங்கள் பல புரிந்தவர் குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நமக்கு விரிவாக விளக்குகிறார்.

 

பார்ப்பதற்கு கல்லூரி பேராசிரியர் போல் இருக்கும் அந்த மனிதன், கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொடூரமான மனிதனாக வாழ்ந்தான். அவன் மீது பெண்கள் பலர் கடைசி வரை காதல் கொண்டனர். சிறைச்சாலைக்கு சென்றும் அவனைப் பார்த்து வந்தனர். அவன் எத்தனை கொலைகள் செய்திருப்பான் என்கிற கணக்கு அவனுக்கே தெரியாது. ஆனாலும் யார் கையிலும் சிக்காமல் தப்பிக்கும் கலையை அவன் அறிந்ததால், அவனுக்கு 'பாம்பு' என்கிற பெயரும் உண்டு. அவனுடைய பெயர் சோப்ராஜ். 70களில் நாடு முழுவதும் பலராலும் உச்சரிக்கப்பட்ட பெயர்.

 

நேபாளத்திலிருந்து அவன் தன்னுடைய 78வது வயதில் விடுவிக்கப்பட்ட போது, 40 வயதிற்கும் குறைவான ஒரு நேபாளப் பெண் அவனைத் திருமணம் செய்துகொண்டார். சோப்ராஜின் தந்தை அவனை சிறுவயதில் ஏற்றுக்கொள்ளவில்லை. தாயிடமும் தனக்கு சரியான அன்பு கிடைக்கவில்லை என்று அவன் நினைத்தான். சிறுவயதிலேயே சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபடுகிறான். அப்போதே பிரான்சில் ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான். சிறைச்சாலை அதிகாரிகளிடம் தனக்கு வேண்டியவற்றை சாதித்துக்கொள்ளும் குணம் அவனுக்கு இருந்தது. 

 

உளவியல், தத்துவம் சார்ந்த நூல்களை சிறையில் அதிகம் படித்தான். கள்ளக்கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரிடமும் அவனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. ஹிப்பி கலாச்சாரம் என்பது அப்போது அதிகமாக இருந்தது. அவர்கள் பெரும்பாலும் ஆன்மீகத் தேடலுக்காக இந்தியாவை நோக்கி வருவார்கள். தவறான பழக்கங்களும் அவர்களுக்கு இருக்கும். தொடர்ந்து திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்த அவனை பம்பாய் போலீசார் பிடித்தனர். அவன் அவர்களிடமிருந்து தப்பித்து ஒரு காரில் பாகிஸ்தானுக்கு சென்றான். அங்கு காபூல் போலீஸாரால் கைது செய்யப்பட்டாலும் உடல்நிலை சரியில்லை என்று நடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

 

அங்கிருந்தும் தப்பித்து ஈரான் சென்றான். பின்பு மீண்டும் இந்தியாவுக்கு வந்து பிரமாண்டமான டெல்லி அசோகா ஹோட்டலில் தங்கினான். அங்குள்ள வைர நகைக்கடையை கொள்ளையடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான். அங்கு நைட் கிளப்பில் டான்ஸராக வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் நட்பு கொண்டு அதை சாதிக்க நினைத்தான். பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி அதைச் செய்தும் முடித்தான். வெளிநாடு தப்பித்துச் செல்ல முயன்றவனைக் கைது செய்ய போலீஸ் விரைந்தபோது விமான நிலையத்திலும் தப்பித்தான். இதுபோன்ற கொள்ளை சம்பவங்களும் தப்பிக்கும் முயற்சிகளும் தொடர்ந்தன.

 

- தொடரும்...

 


 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.