Skip to main content

"கடவுள் சிலை கடத்தல் கும்பல்களின் அதிர்ச்சியூட்டும் பின்னணி" - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 08

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

Thilagavathi IPS (Rtd) Thadayam : 08

 

சிவபுரம் நடராஜர் சிலை திருட்டு வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி சுவாரசியமாக நமக்கு விவரிக்கிறார்.

 

நடராஜர் சிலையை லண்டனுக்கு அனுப்பியது ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். அந்த சிலை லண்டனுக்கு செல்வதற்குள் அது பற்றிய தகவல்களை அறிந்து இடையிலேயே மடக்கினர் ஸ்காட்லாந்து போலீசார். சிலையை லாயிட்ஸ் வங்கியில் கொண்டு போய் வைத்தனர். இந்தியாவுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் இந்திய அதிகாரிகள் நியூயார்க் விரைந்தனர். நியூ சைமன் பவுண்டேஷன் மீது வழக்குத் தொடர்ந்தனர். இவ்வளவு பணம் செலவழித்து வாங்கிய சிலையால் இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது என்பதை அறிந்த சைமன் பவுண்டேஷன் நிறுவனத்தினர் எரிச்சலடைந்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.

 

ஒருகட்டத்தில் அவர்களுக்கே சலிப்பு ஏற்பட்டது. இந்திய அதிகாரிகளுக்கும் வழக்கு குறித்த செலவு அதிகரித்து வந்ததால் சலிப்பு ஏற்பட்டது. எனவே இரு தரப்பும் சமாதான உடன்படிக்கைக்குத் தயாராகினர். சிலையைப் பத்து ஆண்டுகளுக்குத் தாங்கள் வைத்துக் கொள்வதாகவும் அதன் பிறகு இந்தியாவிடம் ஒப்படைப்பதாகவும் ஒப்பந்தம் போட்டனர் சைமன் பவுண்டேஷன் நிறுவனத்தினர். அதன்படி 1986 ஆம் ஆண்டு சிலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் பிறகு தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்பான இடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டது.

 

இது சம்பந்தமான வழக்கை ராமகிருஷ்ணன் தொடர்ந்து விசாரித்து வந்தார். இடைப்பட்ட காலத்தில் பலர் இறந்து போனாலும் இறுதியில் நான்கு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றனர். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு அதன் பிறகு எடுத்த பாதுகாப்பு நடைமுறை மிகவும் சரியானது. அதுபோலவே மக்களுக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என்கிற எண்ணமும் பாதுகாப்பு உணர்வும் இருக்க வேண்டும். பல நேரங்களில் கோவில் சிலை காணாமல் போனால் மக்கள் கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர்.

 

சிலைகள் எந்த நாட்டைச் சேர்ந்தவையோ அந்த நாட்டிடமே அவற்றை ஒப்படைத்துவிட வேண்டும் என்று யுனெஸ்கோ ஒரு சட்டம் போட்டிருக்கிறது. அந்த வகையில் சிலைகள் தானாகவும் ஒப்படைக்கப்படுகின்றன. நாம் அங்கு சென்றும் கண்டுபிடிக்கிறோம். சிலை கடத்தல் தடுப்பு குறித்து சிறப்பு சட்டங்களை நாம் உருவாக்க வேண்டும். இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சிலைகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவது காவல்துறையின் கடமை என்று மட்டும் நினைக்காமல் உள்ளூர் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இதைச் செய்தால் நம்முடைய கலைப் பொக்கிஷங்களை நம்மால் பாதுகாக்க முடியும்.

 

 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.