Skip to main content

குடும்பத்தையே கொலை செய்த இளம்பெண்; கூடத்தாய் வழக்கு - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 04

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Thilagavathi IPS (Rtd) Thadayam : 04

 

கேரளாவையே உலுக்கிய கூடத்தாய் கொலை வழக்கு பற்றிய திடுக்கிடும் தகவல்களை தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

 

ஜாலி கொடுத்த பிரட்டை உண்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பிரட் தொண்டையில் சிக்கியதால் தான் குழந்தை உயிரிழந்ததாக அனைவரும் நம்பினர். சாஜு என்பவரோடு ஜாலிக்குப் பழக்கம் இருந்தது. அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாள். அந்த இரண்டு வயது குழந்தை பிற்காலத்தில் தனக்குப் பிரச்சனையாக வந்துவிடக்கூடாது என்று அதையும் கொன்று விடுகிறாள் ஜாலி. சாஜுவின் மனைவியிடமும் அவள் அன்பாகப் பழகினாள். 

 

ஒருமுறை மாத்திரை போடத் தண்ணீர் வேண்டும் என்று சாஜுவின் மனைவி கேட்டபோது ஜாலி தன்னுடைய பையில் இருந்த வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள். அதைக் குடித்தவுடன் வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்தார் சாஜூவின் மனைவி. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அதன் பிறகு சில மாதங்களில் சாஜுவை ஜாலி திருமணம் செய்துகொண்டாள். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

இந்தக் கொலைகளில் ஜாலி தவிர வேறு யாருக்காவது சம்பந்தம் இருக்குமா என்கிற ரீதியிலும் போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். பல்வேறு முயற்சிகளின் மூலம் சிலரின் உதவியுடன் சைனைட் ஜாலியின் கைக்குக் கிடைத்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர். உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் மூலம் குடும்ப சொத்துக்களைத் தன் பெயருக்கு ஜாலி மாற்றி எழுதிக்கொண்டதும் தெரிந்தது. அனைவருமே குற்றவாளிகளாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். ஜாலி சிறையில் அடைக்கப்பட்டாள். 

 

ஜாலியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தான் செய்த குற்றங்கள் அனைத்தையும் போலீசாரிடம் ஜாலி ஒப்புக்கொண்டாள். கோழிக்கோடு பகுதியிலிருந்து ஜாலிக்காக வாதாட யாரும் முன்வரவில்லை. அந்த சமயத்தில் புனேவிலிருந்து வினு ஆண்டனி என்ற வழக்கறிஞர் வந்தார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர் தான். சமீபத்தில் கேரள நடிகை ஒருவரை நடிகர் ஒருவர் அடியாட்கள் மூலம் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், குற்றம் செய்த நடிகரின் சார்பில் ஆஜராகி அவர் வெளியே வர உதவியவர் தான் இந்த வினு ஆண்டனி. அவர்தான் ஜாலியின் சார்பில் ஆஜரானார்.

 

இந்த வழக்குக்காக கொல்லப்பட்டவர்களின் கல்லறைகள் மீண்டும் திறக்கப்பட்டன. கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியதாக ஜாலி கூறியதும் பொய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய கல்வி குறித்து ஜாலி அதுவரை சொல்லி வந்தவையும் பொய் என்பது தெரிந்தது. இன்னமும் சிறையில் இருக்கும் ஜாலி, இடையில் ஒருமுறை சிறையிலேயே தற்கொலை செய்யவும் முயன்றிருக்கிறாள். இனி ஜாலியுடன் வாழ்வதற்கு தனக்கு பயமாக இருக்கிறது என்று சாஜுவும் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.


 

 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.