Skip to main content

ஒரே வீட்டில் 6 பேரைக் கொன்ற பெண் சீரியல் கில்லர் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 03

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

 Thilagavathi IPS (Rtd) Thadayam : 03

 

சீரியல் கில்லர் என்கிற பதத்தை நாம் ஆண்களோடு தான் இதுவரை தொடர்புபடுத்தியிருப்போம். ஆனால் கேரளாவில் ஒரு பெண் சீரியல் கில்லராக இருந்து பல கொலைகளைச் செய்துள்ளார். அந்த வழக்கு குறித்து நம்மிடம் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்.

 

ஜாலி ஜோசப் என்கிற கேரளப் பெண் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே கொலை செய்தது பற்றிய கதை இது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பிறந்தவர். சின்ன வயதில் சிறுசிறு தவறுகள் செய்து ஒழுக்கவாதியான தன் தந்தையிடம் பலமுறை அடி வாங்கியிருக்கிறார். பள்ளியில் திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். அனைவரிடமும் இயல்பாகப் பழகுபவர் போல் தெரிந்தாலும் மனதுக்குள் கொடூரமான எண்ணங்களையும் திட்டங்களையும் வைத்திருப்பவர்களை சோசியோபாத்  என்பார்கள். அப்படிப்பட்ட ஒருவராக இந்தப் பெண் இருந்திருக்கிறார். கோழிக்கோடு பகுதிக்கு ஒரு திருமணத்திற்காகச் சென்றிருந்தபோது ராய் தாமஸ் என்கிற நபரோடு காதல் ஏற்பட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. கூடத்தாய் என்கிற பகுதிக்கு திருமணத்திற்குப் பிறகு வாழ வந்தாள் அந்தப் பெண். முதலில் இப்படி ஒரு மருமகள் நமக்கு வாய்த்தாளே என்று பெருமைப்படும் வகையில் இவளுடைய நடவடிக்கைகள் இருந்தன. குடும்பத்தின் நிர்வாகம் அனைத்தும் மாமியாரின் வசம் இருந்தது. மாமியார் இல்லாமல் போனால் அனைத்தும் நம் வசம் வந்துவிடும் என்று இவள் எண்ணினாள். 

 

மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாமியாருக்கு ஜாலி மட்டன் சூப் கொடுத்தாள். அதைக் குடித்தவுடன் மயங்கி விழுந்த மாமியார் மருத்துவமனைக்கு செல்வதற்குள் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக இருக்கும் என்று அனைவரும் நினைத்தனர். அதன்பிறகு மாமனாரோடு நெருக்கமானாள் ஜாலி. நெல் வயலை விற்று 15 லட்ச ரூபாயை ஜாலியிடம் கொடுத்தார் மாமனார். இதன்பிறகு வீட்டை உரிமை கொண்டாடக்கூடாது என்றும் கூறினார். இன்சூரன்ஸ் பாலிசியிலும் ஜாலியை நாமினியாகச் சேர்த்தார். இதனால் தாமசுக்குத் தன் தந்தை மேல் கோபம் ஏற்பட்டது. ஆறு வருடம் கழித்து ஒருநாள் இரவு கப்பைக் கிழங்கு செய்து மாமனாருக்கு சாப்பிடக் கொடுத்தாள் ஜாலி. அதை உண்ட பிறகு அவர் மயங்கி விழுந்தார். பக்கத்து வீட்டுக்குத் தகவல் தெரிவித்தாள் ஜாலி. அவர்கள் வந்து பார்ப்பதற்குள் மாமனாரின் உயிர் பிரிந்தது. வயதானதால் மரணம் ஏற்பட்டது என்று அனைவரும் நம்பினர். சில வருடங்கள் கழித்து ராய் தாமஸ் புட்டும் கடலைக் கறியும் சாப்பிட்ட பிறகு வாந்தி எடுத்தார். 

 

இவர்களுடைய வீட்டுக்கு அருகில் மாமியாரின் தம்பி வசித்து வந்தார். அவருக்கு சந்தேகம் வந்தது. தாமஸ் என்ன சாப்பிட்டார் என்று கேட்கும்போது ஒன்றுமே சாப்பிடவில்லை என்று கூறினாள் ஜாலி. அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அமெரிக்காவில் இருந்த தன்னுடைய சகோதரரை அழைத்து இங்கு வரச் சொன்னார். போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். போஸ்ட்மார்ட்டம் செய்தபோது தான் தெரிந்தது சைனைட் சாப்பிட்டு தான் அவர் இறந்தார் என்று. அப்போதும் தானாக சைனைட் சாப்பிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று தான் ஜாலி வாதிட்டாள். ராய் இறந்த சில வருடங்களுக்குப் பிறகு மாமியாரின் தம்பியும் இறந்து போனார். ஜாலி போட்டுக் கொடுத்த காபியைக் குடித்து அவர் இறந்தார்.

 

இந்த மரணத்திற்குப் பிறகு அருகில் வசித்து வந்த மாமியாருடைய கொழுந்தனார் மகன் குடும்பத்தில் ஞானஸ்தானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஜாலி செல்கிறாள். அங்கு ஞானஸ்தானம் வழங்கும் பையனின் ஒன்றரை வயது சகோதரி இறந்து போகிறாள். அந்தக் குழந்தைக்கு ஜாலி தான் பிரட் சாப்பிடக் கொடுத்திருக்கிறாள் என்பது அதன்பின் தெரிந்தது.


 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.