Skip to main content

சோழவரத்தில் காணாமல் போன கார்; பெங்களூரில் விபத்தானது எப்படி? - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 25 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024

 

rajkumar-solla-marantha-kathai-25 

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இன்சூரன்ஸ்க்காக நடந்த கார் விபத்து சம்பவத்தை பற்றி விவரிக்கிறார்.

90களில் நடந்த வழக்கு இது. இரண்டு பெண்மணிகள் ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் ஆடம்பரமான நகைகளை அணிந்திருந்தனர். வந்ததும்  அவர்கள் தாய், மகள் என்று அறிமுகம் செய்து கொண்டு தங்களுடைய ஸ்டாண்டர்ட் 2000 காரில் டிரைவர் எங்களை கூப்பிட பெங்களூர் வந்திருந்ததாக கூறினர். சோழவரத்தில் ஏரி அருகே நிறுத்திவிட்டு காலைக்கடனை முடித்து திரும்பி வந்து பார்க்கையில் காரை காணவில்லை என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன ரூட் கொஞ்சம் சந்தேகமாகத்தான் தோன்றியது. ஏன் பெங்களூருக்கு அந்த வழியில் சென்றீர்கள் என்று கேட்கும் போதே நாங்கள் யார் தெரியுமா சார் என்ற தொனியில் ஆரம்பித்து அன்றிருந்த ஒரு பெரிய தலைவர் பெயரைச் சொன்னார்கள். எப்படி கேள்வி கேட்கலாம் என்பது போல மிரட்டலாகத் தான் பேசினார்கள். அவர்களிடம் இன்சூரன்ஸ் கிளைம் பேப்பரை கொடுத்து என்ன நடந்தது என்று எழுதிக் கொடுங்கள் என்றோம்.  

நான்கு நாட்கள் கழித்து தொடர்பு கொள்கிறோம் என்று அனுப்பி வைத்தோம். நாங்கள் அடுத்த மீட்டிங் போட்டு இன்வெஸ்டிகேசனை ஆரம்பித்தோம். நடந்த இடத்திற்குச் சென்று விசாரித்ததில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போலத்தான் சொன்னார்கள். கார் ஓட்டுநரும் இல்லை. அந்தக் கார் லக்ஸரி வகை என்பதால் எல்லா இடத்திலும் சர்வீஸ் செய்யமாட்டார்கள். எனவே அந்த காருக்கான குறிப்பிட்ட சர்வீஸ் சென்டரில் போய் கேட்ட போதும், அப்படி ஒரு கார்  வரவே இல்லை என்றுதான் தகவல் கிடைத்தது. சந்தேகம் வந்து அந்த பெண்மணிகள் இருக்கும் அட்ரஸில் ஆள் வைத்து விசாரித்தோம் . விசாரித்ததில் நான்கு நாட்கள் முன்னாடி ஸ்டாண்டர்ட் 2000  கார் ஒன்று நொறுங்கி லாரியில் வந்தது. அந்த வீட்டு அட்ரஸை நான் தான் காண்பித்தேன். ஒரு மணி நேரம் கழித்து அந்த லாரி அப்படியே போய்விட்டது, என்று ஒருவர் சொன்னார். நொறுங்கி வந்த கார் எங்கு சென்றிருக்கும் என்று விசாரித்து பழைய கார்கள் போடுமிடமான புதுப்பேட்டையில் விசாரித்தோம். அந்த இடத்தில் வேலை செய்யும் ஒருவர் ‘எங்களுக்கு ஆஃபர் வந்தது. ஆனால் சொன்ன ரேட் ரொம்ப அதிகமா இருந்தது’ என்று கார் கம்பெனியிலேயே போட்டுவிட்டோம் என்றார். சொன்னது போல கம்பெனியில் போய் பார்த்தபோது அந்த கார் இருந்தது. 

அதன் பின் தான் உண்மை தெரிந்தது. அங்கே விசாரித்ததில், அந்த கார் பெங்களூரில் விபத்தானது என்று சொன்னார்கள். ஆனால் இந்த பெண்மணிகள் சோழவரத்தில் காணாமல் போனதாகத்தான்  புகார் அளித்திருந்தார்கள். அடுத்து எங்கள் குழு பெங்களூர் சென்றது. அங்கிருந்த காவல்துறை கமிஷனரிடம் விஷயத்தை சொன்னோம். ஒரு தமிழ்நாடு கார் ஆக்சிடென்ட் ஆனதாகவும் அதில் இரண்டு பெண்மணிகள் மது போதையில் கார் ஓட்டி வந்ததாகவும்  குறிப்பிட்டார். மேலும், விசாரித்ததில், நாங்கள் சென்னையில் போய் வழக்கை பார்த்துக் கொள்கிறோம் என்று விமானத்தில் கிளம்பி விட்டனர் என்றார். அடுத்து அவர்கள் சென்னைக்கு ரிட்டன் வந்த விமான பயணச்சீட்டை நாங்கள் வாங்கிக் கொண்டு பெங்களூர் சிபிஐக்கு தகவலை கொடுத்துவிட்டு அந்த பெண்களை மறுநாள் வரவழைத்து, பெருங்களத்தூரில் இருக்கும் கார் கம்பெனியின் ஃபேக்டரியில் தான் அவர்களின் கார் இருந்தது. அதையும் காண்பித்து விட்டு இன்சூரன்ஸ் வழங்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தி, எல்லா ஆவணங்களையும் சிபிஐ கைக்கு மாற்றிவிட்டோம். அதன் பிறகு வழக்காகி அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட்டது. இன்சூரன்ஸ் ஏமாற்றி பெறுவதற்காக இதுபோன்ற பல விசயங்களை செய்வார்கள்.

Next Story

ஆறு கோடி இன்சூரன்ஸ்; அதிகாரிகளை ஏமாற்ற நடந்த நாடகம் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 28

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
rajkumar-solla-marantha-kathai-28

நண்பர்கள் மூவர் இணைந்து போலி லைப் இன்சூரன்ஸ் வாங்கி மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார் 

கடந்த வருடம் பேப்பரில் வந்த பிரபலமான வழக்கு இது. அந்த நபர் அமெரிக்காவில் நல்ல பெரிய பதவியில் வேலை செய்து கொண்டிருந்தவர். கொரோனா காலத்தில் வேலை இழந்து ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தும் தோல்வி அடைந்து ஊருக்கு திரும்புகிறார்.

வந்தவர் ஆறு  கோடி ரூபாய்க்கு லைஃப் இன்சூரன்ஸ் வாங்குகிறார். மூன்று நண்பர்களுடன்  சேர்ந்து திட்டம் செய்கின்றனர். அதாவது அவரைப் போலவே உள்ள போலி நபர் ஒருவரை கொலை செய்து இறந்ததாக லைஃப் இன்சூரன்ஸ் வாங்க திட்டமிடுகின்றனர். அதற்காகவே போலி நபரை கிராமத்திற்கு அழைத்துச் சென்று பாம்பாட்டியை வைத்து பாம்பை கடிக்க வைத்து அந்த நபரை கொன்று விடுகின்றனர்.  

இன்னொரு கூடுதல் போலி நபர் இறந்த உடலை வாங்குகிறார். இறந்த நபரை வைத்து இன்சூரன்ஸ் க்ளைம் வாங்க வருகிறார்கள்.  எங்கள் கம்பெனி இன்வெஸ்டிகேசனை ஆரம்பிக்கிறது. எதற்காக அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார், ஏன் பாலிசி எடுத்த மூன்று மாதத்தில் இறந்தார் என்று விசாரித்தோம். பாலிசி எடுத்த உண்மையான அமெரிக்கா நபர் காணவும் இல்லை. அந்த உடலை வாங்கியவர் தன்னை நாமினியில் போட்டிருக்கிறார். 

ஆனால் எல்லாமே முரண்பாடாக இருந்ததில் எங்களுக்கு சந்தேகம் வந்தது. பின்னர் விசாரித்ததில் இறந்தது நிஜ நபரும் இல்லை, பாடியை வாங்கியவரும் போலி. உண்மையான நபர் ஏற்கெனவே இறந்தும் வேறு இருக்கிறார் என்று தெரியவந்தது. மூன்று போலிகள் சேர்ந்து இந்த போலி இன்சூரன்ஸ் நாடகத்தை நடத்தி இருக்கின்றனர். உண்மையைக் கண்டுபிடித்த போலீஸ், விசாரணைக்கு உட்படுத்தி எல்லாரையும் கைது செய்து ரிமாண்டும் செய்து விட்டனர். இந்த வழக்கு இன்னும் ட்ரயலில் தான் இருக்கிறது. 

Next Story

கொள்ளை அடித்து உதவி; மும்பையை கலக்கிய பெண் தாதா - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 27

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rajkumar-solla-marantha-kathai-27

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கொள்ளை அடித்து உதவும் ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

மும்பையில் (money in Transit) என்று சொல்லப்படும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட வழக்கு இது.  75 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நிறுவனம் சம்பளம் கொடுக்க எடுத்து செல்கிறது. அந்த வண்டியை மறித்து ஒரு மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மும்பை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தும், யார் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரதீப் என்ற நபர் மீது சந்தேகம் எழுந்து விசாரிக்கின்றனர். விசாரணையில், கிரிஷ்மா என்ற பெண்ணின் அறிவுரையின் பேரில் இந்த கொள்ளைகள் நடந்ததாக தெரியவந்தது. கிரிஷ்மா காட்கோபரில் வசித்து வந்தார். அவருக்கு பல வாகனங்கள் மற்றும் பங்களாக்கள் இருந்தன. அந்த பகுதியில் பெரிய ஆளாக மக்கள் பலருக்கு உதவி செய்பவராக இருக்கிறார். இதனால் மும்பை போலீசார் கிரிஷ்மாவாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நம்பவில்லை. ஆனால், விசாரணையில், மர்ம கும்பல் நடத்திய அனைத்து கொள்ளைகளுக்கும் கிரிஷ்மாதான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இவர், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 50 சதவீதத்தை உதவி செய்வதற்கு பயன்படுத்தினார். யாரை வைத்து கொள்ளையடித்தார்களோ அந்த கும்பலை 40 நாட்கள் கிரிஷ்மா வெளியில் விடாமல் தன் உடனேயே வைத்திருப்பார். இப்படி வித்தியாசமான முறையில் வழிப்பறி செய்து வந்திருக்கிறார். இந்த வழக்கு 'மனி இன் டிரான்சிட்' என்ற இன்சூரன்ஸ் பெயரில் மும்பையில் இருந்து எங்களுக்கு வந்தது.

இதே போல மும்பையில் 54 வயதான பேபி என்பவர் போதைப்பொருள் கடத்தலில் சிறந்து விளங்கினார். காவல்துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்டிருந்ததால் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவருக்கு சில சலுகைகள் கிடைத்தது. இவர் குறிப்பாக மெட்ரோபில் என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பிரபலமானவர். நார்கோட்டிக் சட்டம் வந்த பிறகு, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது கடினம் ஆகி இவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, மும்பை, காஜா, தூத்துக்குடி, தேனி, கம்பம், வடசென்னை போன்ற இடங்களில் அதிகமாக போதைப்பொருள் விற்பனை நடக்கின்றன. 

போதைப்பொருள் தொழில் எளிமையாக பணம் வந்து சேரக்கூடியது. எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டியதில்லை என்று தாதாக்கள், ரவுடிகள் இதை செய்கிறார்கள். ஆனால் இதை செய்து மாட்டிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.