Skip to main content

துபாயில் வந்த நெஞ்சு வலி; சென்னையில் எடுத்த இன்சூரன்ஸ் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 23

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 rajkumar-solla-marantha-kathai-23

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நோயை மறைத்து ஏமாற்றிய ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

பணியில் சேர்ந்த பொழுது நான் பாண்டிச்சேரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், ஒரு பெண்மணியுடன் வந்திருந்தார். வந்ததும்  கடினமாக எல்லாரையும் பேசிக் கொண்டிருந்தார். என்னிடமும் அப்படித்தான் பேசினார். சரி என்று கூப்பிட்டு அறைக்குள்ளே அழைத்து பேசியபோது, நான் முதலில் அவரை சந்தேகப்படும்படி ஒரு காரியம் செய்தார். திடீரென்று சட்டை பட்டனை அவிழ்த்து அங்கே சிகிச்சையினால் இருக்கும் வடுவை காண்பித்து, உங்களிடம் பாலிசி வாங்கியதன் விளைவைப் பாருங்கள் என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு, இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு பாலிசி பணத்தை எங்களிடம் வாங்குவது கடினமாக உள்ளதாக புகாரளித்தார்.

எனக்கு பயமாக இருந்தாலும், உண்மையா பொய்யா என்று தெரிவதற்குள் முடிவுக்கு வரக்கூடாது என்று அவருக்கு தண்ணீர் கொடுத்து அமைதிப்படுத்தி அவரை பற்றி விசாரித்தேன். 80களில் நெய்வேலியிலிருந்து துபாய்க்கு ஓட்டுநராக சென்று வேலை பார்த்தேன். பின்பு பிடிக்கவில்லை என்று வந்துவிட்டு, இங்கே எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு வண்டி ஓட்டிக் கொண்டு  இருந்தேன். அப்போது முதல் முறை நெஞ்சு வலி வந்தது. ரயில்வே ஆஸ்பத்திரி சென்று பார்த்தேன் என்று அவர் கூற ஆரம்பித்தார். நாங்கள் அவர் சொல்ல சொல்ல ஸ்டேட்மேன்ட் எழுதி குறித்துக் கொண்டே வந்தோம். பின் அவரிடம் படித்துக் காட்டி உறுதி செய்து கொண்டோம். அவரை நான்கு நாட்கள் கழித்து வரச் சொல்லிவிட்டு, அவர் இப்போது எடுத்த பாலிசி பற்றி பார்த்தோம்.

பார்த்தால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு ஒரு மாதம் முன்னரே பாலிசி வாங்கியுள்ளார். நாங்கள் எல்லாரும் சேர்ந்து ஆலோசித்தோம். அந்த நபருக்கு சிகிச்சை அளித்த டாக்டரை அணுகினோம். அங்கே அவர் எங்களுக்கு தேவையான எல்லா தகவல்களையும் கூப்பிட்டு ஒத்துழைத்து அளித்தார். அதன் பேரில் அந்த நபருக்கு துபாயில் இருக்கும்போதே  ஒருமுறை மாரடைப்பு வந்திருக்கிறது. அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க வேண்டாமென்று மறுத்து இங்கே இந்தியா வந்திருக்கிறார். இங்கே வந்த பிறகு உடனடியாக பாலிசி எடுத்துவிட்டார். ஆபரேஷனுக்கு பணம் கட்டி பார்த்து முடித்தவுடன், பாலிசியும் கிளைம் செய்து இருக்கிறார்.

துபாயில் இருக்கும் எங்களுடைய அலுவலகம் மூலம், இவர் எந்த நிலைமையில் அங்கிருந்து இங்கே வந்தார் என்று இவருடைய பேப்பர்ஸ் அனுப்பி கேட்டிருந்தோம். அவர்கள் அளித்த தகவலின் பேரில், இவர் அங்கிருந்து வேலையை விட்டு சஸ்பெண்ட் ஆகி வரும்போது, அவர் கம்பெனியே இவரின் உடல் பிரச்சனையால் தான் வேலையை விட்டு அனுப்புகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறது. துபாய் மற்றும் இந்திய தூதரகமும் இதையே உறுதி செய்து மருத்துவ அடிப்படையில் தான் இவரை அனுப்பி இருக்கிறது. நாங்கள் அவரை கூப்பிட்டு விஷயத்தை சொல்லிய பின், அவர் இதையும் மீறி கோர்ட்டில் கேஸ் போடுவேன் என்று போட்டு அதிலும் தோற்றுவிட்டார். நாங்களும் கிளைம் பணத்தை கொடுக்கவில்லை. இவர் உண்மையை சொல்லியிருந்தால் கூட ஏதாவது உதவி இருக்கலாம். 

இதுபோன்ற பாலிசி இன்சூரன்ஸில் ப்ரி எக்சிஸ்டிங் டிசீஸ் என்று வரும். இதில் தகவல் ஒழுங்காக இல்லையென்றால், கிளைம் கிடைக்காது. முன்னாடியெல்லாம் ஒரு நபருக்கு மட்டுமே பாலிசி என்று இருந்தது. இப்போது பேமிலி மொத்தத்திற்கும் கொடுப்பது வந்துவிட்டது. இப்போதெல்லாம் மன நலம் பாதிக்கப்பட்டவருக்கும் பாலிசி கொடுக்கிறார்கள். சைக்கியாட்ரிக் சிகிச்சை எடுத்துக் கொள்பவருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

Next Story

ஆறு கோடி இன்சூரன்ஸ்; அதிகாரிகளை ஏமாற்ற நடந்த நாடகம் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 28

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
rajkumar-solla-marantha-kathai-28

நண்பர்கள் மூவர் இணைந்து போலி லைப் இன்சூரன்ஸ் வாங்கி மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார் 

கடந்த வருடம் பேப்பரில் வந்த பிரபலமான வழக்கு இது. அந்த நபர் அமெரிக்காவில் நல்ல பெரிய பதவியில் வேலை செய்து கொண்டிருந்தவர். கொரோனா காலத்தில் வேலை இழந்து ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தும் தோல்வி அடைந்து ஊருக்கு திரும்புகிறார்.

வந்தவர் ஆறு  கோடி ரூபாய்க்கு லைஃப் இன்சூரன்ஸ் வாங்குகிறார். மூன்று நண்பர்களுடன்  சேர்ந்து திட்டம் செய்கின்றனர். அதாவது அவரைப் போலவே உள்ள போலி நபர் ஒருவரை கொலை செய்து இறந்ததாக லைஃப் இன்சூரன்ஸ் வாங்க திட்டமிடுகின்றனர். அதற்காகவே போலி நபரை கிராமத்திற்கு அழைத்துச் சென்று பாம்பாட்டியை வைத்து பாம்பை கடிக்க வைத்து அந்த நபரை கொன்று விடுகின்றனர்.  

இன்னொரு கூடுதல் போலி நபர் இறந்த உடலை வாங்குகிறார். இறந்த நபரை வைத்து இன்சூரன்ஸ் க்ளைம் வாங்க வருகிறார்கள்.  எங்கள் கம்பெனி இன்வெஸ்டிகேசனை ஆரம்பிக்கிறது. எதற்காக அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார், ஏன் பாலிசி எடுத்த மூன்று மாதத்தில் இறந்தார் என்று விசாரித்தோம். பாலிசி எடுத்த உண்மையான அமெரிக்கா நபர் காணவும் இல்லை. அந்த உடலை வாங்கியவர் தன்னை நாமினியில் போட்டிருக்கிறார். 

ஆனால் எல்லாமே முரண்பாடாக இருந்ததில் எங்களுக்கு சந்தேகம் வந்தது. பின்னர் விசாரித்ததில் இறந்தது நிஜ நபரும் இல்லை, பாடியை வாங்கியவரும் போலி. உண்மையான நபர் ஏற்கெனவே இறந்தும் வேறு இருக்கிறார் என்று தெரியவந்தது. மூன்று போலிகள் சேர்ந்து இந்த போலி இன்சூரன்ஸ் நாடகத்தை நடத்தி இருக்கின்றனர். உண்மையைக் கண்டுபிடித்த போலீஸ், விசாரணைக்கு உட்படுத்தி எல்லாரையும் கைது செய்து ரிமாண்டும் செய்து விட்டனர். இந்த வழக்கு இன்னும் ட்ரயலில் தான் இருக்கிறது. 

Next Story

கொள்ளை அடித்து உதவி; மும்பையை கலக்கிய பெண் தாதா - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 27

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rajkumar-solla-marantha-kathai-27

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கொள்ளை அடித்து உதவும் ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

மும்பையில் (money in Transit) என்று சொல்லப்படும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட வழக்கு இது.  75 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நிறுவனம் சம்பளம் கொடுக்க எடுத்து செல்கிறது. அந்த வண்டியை மறித்து ஒரு மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மும்பை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தும், யார் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரதீப் என்ற நபர் மீது சந்தேகம் எழுந்து விசாரிக்கின்றனர். விசாரணையில், கிரிஷ்மா என்ற பெண்ணின் அறிவுரையின் பேரில் இந்த கொள்ளைகள் நடந்ததாக தெரியவந்தது. கிரிஷ்மா காட்கோபரில் வசித்து வந்தார். அவருக்கு பல வாகனங்கள் மற்றும் பங்களாக்கள் இருந்தன. அந்த பகுதியில் பெரிய ஆளாக மக்கள் பலருக்கு உதவி செய்பவராக இருக்கிறார். இதனால் மும்பை போலீசார் கிரிஷ்மாவாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நம்பவில்லை. ஆனால், விசாரணையில், மர்ம கும்பல் நடத்திய அனைத்து கொள்ளைகளுக்கும் கிரிஷ்மாதான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இவர், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 50 சதவீதத்தை உதவி செய்வதற்கு பயன்படுத்தினார். யாரை வைத்து கொள்ளையடித்தார்களோ அந்த கும்பலை 40 நாட்கள் கிரிஷ்மா வெளியில் விடாமல் தன் உடனேயே வைத்திருப்பார். இப்படி வித்தியாசமான முறையில் வழிப்பறி செய்து வந்திருக்கிறார். இந்த வழக்கு 'மனி இன் டிரான்சிட்' என்ற இன்சூரன்ஸ் பெயரில் மும்பையில் இருந்து எங்களுக்கு வந்தது.

இதே போல மும்பையில் 54 வயதான பேபி என்பவர் போதைப்பொருள் கடத்தலில் சிறந்து விளங்கினார். காவல்துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்டிருந்ததால் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவருக்கு சில சலுகைகள் கிடைத்தது. இவர் குறிப்பாக மெட்ரோபில் என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பிரபலமானவர். நார்கோட்டிக் சட்டம் வந்த பிறகு, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது கடினம் ஆகி இவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, மும்பை, காஜா, தூத்துக்குடி, தேனி, கம்பம், வடசென்னை போன்ற இடங்களில் அதிகமாக போதைப்பொருள் விற்பனை நடக்கின்றன. 

போதைப்பொருள் தொழில் எளிமையாக பணம் வந்து சேரக்கூடியது. எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டியதில்லை என்று தாதாக்கள், ரவுடிகள் இதை செய்கிறார்கள். ஆனால் இதை செய்து மாட்டிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.