Skip to main content

கருப்பு பணம் வைத்திருந்தால் தண்டனை ஏன்? - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 13

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

rajkumar-solla-marantha-kathai-13

 

பணமோசடி, கருப்பு பணம் வைத்திருத்தல் ஆகியவற்றுக்கான தண்டனைகள் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் விரிவாக விளக்குகிறார்

 

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது தான் பணமோசடி. இதைத் தடுப்பதற்கு தான் தனியாக சட்டம் இருக்கிறது. வரி செலுத்தாத பணம் அத்தனையும் கருப்பு பணம் தான். லஞ்சம் என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கிறது. திருக்குறளில் கூட இதுபற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. கருப்பு பணமாக வந்த பணத்துக்கு நாம் வரி கட்டாமல் கருப்பு பணமாகவே வைத்திருக்கும்போது அதனால் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்பதே சட்டத்தின் நோக்கம். 

 

தவணை சொல்லாமல் இலவசமாக அரசாங்கத்துக்கு வருமானம் கொடுத்து வருபவர்கள் டாஸ்மாக்கில் மது அருந்தும் மதுப்பிரியர்கள் மட்டும்தான். இங்கு பலருக்கு பணமோசடி வழக்கு குறித்தும், வருமான வரி சட்டங்கள் குறித்தும் சரியான புரிதல் இல்லை. வரி கட்டாமலேயே இருந்தாலோ, அல்லது குறைந்த அளவில் வரி செலுத்தினாலோ நீங்கள் பணமோசடி வழக்கில் சிக்குவீர்கள். அப்படி வைத்திருக்கும் பணம் தான் கருப்புப்பணம். இப்போது சட்டத்தின் பார்வையில் நீங்கள் குற்றவாளி தான். விசாரணை தொடங்கும் முன்பே இதுபோன்ற வழக்குகளில் தேவையான ஆதாரங்கள் கிடைத்துவிடும். 

 

குற்றத்தை ஒப்புக்கொண்டால் அது ஒரு வகையாக டீல் செய்யப்படும். இல்லையென்றால் வழக்கு தொடுக்கப்படும். சொத்து, வங்கிக்கணக்கு, கிரெடிட் கார்டு என அனைத்தும் முடக்கப்படும். இதனால் அவர்களுடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் உண்மை. சாதாரண ரவுடிக்கும், மிகப்பெரிய இடத்தில் இருக்கும் மனிதருக்கும் சட்டம் ஒன்றுதான். போக்சோ சட்டத்தில் பல ஆசிரியர்கள் சிக்குவதை நாம் பார்க்கிறோம். குற்றத்தை செய்த பிறகு அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. 

 

தவறு செய்யாமல் இருந்தால் தப்பிக்கலாம். இல்லையென்றால் சட்டம் நிச்சயம் தண்டிக்கும். குற்றம் சாட்டப்பட்டவரிடம் கடைசியாகத்தான் விசாரணை நடைபெறும். விசாரணைக்கு அவர் ஒத்துழைத்துதான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. ஜெயலலிதாவின் வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அவர் மறைந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சசிகலா சிறை சென்றார். செலுத்த வேண்டிய அபராதமும் செலுத்தப்பட்டது.

 

 

Next Story

ஆறு கோடி இன்சூரன்ஸ்; அதிகாரிகளை ஏமாற்ற நடந்த நாடகம் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 28

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
rajkumar-solla-marantha-kathai-28

நண்பர்கள் மூவர் இணைந்து போலி லைப் இன்சூரன்ஸ் வாங்கி மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார் 

கடந்த வருடம் பேப்பரில் வந்த பிரபலமான வழக்கு இது. அந்த நபர் அமெரிக்காவில் நல்ல பெரிய பதவியில் வேலை செய்து கொண்டிருந்தவர். கொரோனா காலத்தில் வேலை இழந்து ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தும் தோல்வி அடைந்து ஊருக்கு திரும்புகிறார்.

வந்தவர் ஆறு  கோடி ரூபாய்க்கு லைஃப் இன்சூரன்ஸ் வாங்குகிறார். மூன்று நண்பர்களுடன்  சேர்ந்து திட்டம் செய்கின்றனர். அதாவது அவரைப் போலவே உள்ள போலி நபர் ஒருவரை கொலை செய்து இறந்ததாக லைஃப் இன்சூரன்ஸ் வாங்க திட்டமிடுகின்றனர். அதற்காகவே போலி நபரை கிராமத்திற்கு அழைத்துச் சென்று பாம்பாட்டியை வைத்து பாம்பை கடிக்க வைத்து அந்த நபரை கொன்று விடுகின்றனர்.  

இன்னொரு கூடுதல் போலி நபர் இறந்த உடலை வாங்குகிறார். இறந்த நபரை வைத்து இன்சூரன்ஸ் க்ளைம் வாங்க வருகிறார்கள்.  எங்கள் கம்பெனி இன்வெஸ்டிகேசனை ஆரம்பிக்கிறது. எதற்காக அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார், ஏன் பாலிசி எடுத்த மூன்று மாதத்தில் இறந்தார் என்று விசாரித்தோம். பாலிசி எடுத்த உண்மையான அமெரிக்கா நபர் காணவும் இல்லை. அந்த உடலை வாங்கியவர் தன்னை நாமினியில் போட்டிருக்கிறார். 

ஆனால் எல்லாமே முரண்பாடாக இருந்ததில் எங்களுக்கு சந்தேகம் வந்தது. பின்னர் விசாரித்ததில் இறந்தது நிஜ நபரும் இல்லை, பாடியை வாங்கியவரும் போலி. உண்மையான நபர் ஏற்கெனவே இறந்தும் வேறு இருக்கிறார் என்று தெரியவந்தது. மூன்று போலிகள் சேர்ந்து இந்த போலி இன்சூரன்ஸ் நாடகத்தை நடத்தி இருக்கின்றனர். உண்மையைக் கண்டுபிடித்த போலீஸ், விசாரணைக்கு உட்படுத்தி எல்லாரையும் கைது செய்து ரிமாண்டும் செய்து விட்டனர். இந்த வழக்கு இன்னும் ட்ரயலில் தான் இருக்கிறது. 

Next Story

கொள்ளை அடித்து உதவி; மும்பையை கலக்கிய பெண் தாதா - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 27

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rajkumar-solla-marantha-kathai-27

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கொள்ளை அடித்து உதவும் ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

மும்பையில் (money in Transit) என்று சொல்லப்படும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட வழக்கு இது.  75 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நிறுவனம் சம்பளம் கொடுக்க எடுத்து செல்கிறது. அந்த வண்டியை மறித்து ஒரு மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மும்பை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தும், யார் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரதீப் என்ற நபர் மீது சந்தேகம் எழுந்து விசாரிக்கின்றனர். விசாரணையில், கிரிஷ்மா என்ற பெண்ணின் அறிவுரையின் பேரில் இந்த கொள்ளைகள் நடந்ததாக தெரியவந்தது. கிரிஷ்மா காட்கோபரில் வசித்து வந்தார். அவருக்கு பல வாகனங்கள் மற்றும் பங்களாக்கள் இருந்தன. அந்த பகுதியில் பெரிய ஆளாக மக்கள் பலருக்கு உதவி செய்பவராக இருக்கிறார். இதனால் மும்பை போலீசார் கிரிஷ்மாவாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நம்பவில்லை. ஆனால், விசாரணையில், மர்ம கும்பல் நடத்திய அனைத்து கொள்ளைகளுக்கும் கிரிஷ்மாதான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இவர், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 50 சதவீதத்தை உதவி செய்வதற்கு பயன்படுத்தினார். யாரை வைத்து கொள்ளையடித்தார்களோ அந்த கும்பலை 40 நாட்கள் கிரிஷ்மா வெளியில் விடாமல் தன் உடனேயே வைத்திருப்பார். இப்படி வித்தியாசமான முறையில் வழிப்பறி செய்து வந்திருக்கிறார். இந்த வழக்கு 'மனி இன் டிரான்சிட்' என்ற இன்சூரன்ஸ் பெயரில் மும்பையில் இருந்து எங்களுக்கு வந்தது.

இதே போல மும்பையில் 54 வயதான பேபி என்பவர் போதைப்பொருள் கடத்தலில் சிறந்து விளங்கினார். காவல்துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்டிருந்ததால் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவருக்கு சில சலுகைகள் கிடைத்தது. இவர் குறிப்பாக மெட்ரோபில் என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பிரபலமானவர். நார்கோட்டிக் சட்டம் வந்த பிறகு, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது கடினம் ஆகி இவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, மும்பை, காஜா, தூத்துக்குடி, தேனி, கம்பம், வடசென்னை போன்ற இடங்களில் அதிகமாக போதைப்பொருள் விற்பனை நடக்கின்றன. 

போதைப்பொருள் தொழில் எளிமையாக பணம் வந்து சேரக்கூடியது. எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டியதில்லை என்று தாதாக்கள், ரவுடிகள் இதை செய்கிறார்கள். ஆனால் இதை செய்து மாட்டிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.