Skip to main content

விமானத்தில் நடக்கும் வித்தியாசமான திருட்டு - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 01

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Rajkumar -  Solla Marantha Kathai :01

 

விமானங்களில் நடக்கும் திருட்டு குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட நாட்களாக பணிபுரிந்த தன்னுடைய அனுபவங்களை “சொல்ல மறந்த கதை” என்னும் தொடர் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ராஜ்குமார்.

 

இன்சூரன்ஸ் எடுப்பதற்கு முன் அந்த கம்பெனியின் பின்புலம் குறித்து மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். தனியார் கம்பெனியாக இருந்தாலும், அரசு கம்பெனியாக இருந்தாலும் பல ஆண்டுகாலமாக வெற்றிகரமாக இயங்கி வரும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இருக்கின்றன. இதை வியாபாரமாக மட்டுமே நினைப்பவர்களால் வெற்றி பெற முடிவதில்லை. ஏமாந்த பிறகு அனைவரும் செல்வது அரசிடம் தான். பணத்தை திரும்பக் கொடுக்கும் சக்தி அரசிடம் தான் இருக்கிறது. எனவே அரசாங்கத்தால் நடத்தப்படும் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்வது நல்லது.

 

என்னுடைய இளமைக் காலத்தில் ஒரு வைர வியாபாரி எங்களிடம் இன்சூரன்ஸ் எடுத்தார். ரொம்ப நல்ல மனிதர் அவர். பாலிசி போடும்போது அவரிடம் நான் நிறைய கேள்வி கேட்பேன். வெளிநாடுகளுக்கு அவர் ஏன் வைரங்களை அனுப்புகிறார் என்று கேட்பேன். தன்னுடைய தாத்தா காலத்துத் தொழில் அது என்பார். ஒருமுறை விமானத்தில் அனுப்பி வைத்த வைரங்களைக் காணவில்லை என்று அவர் கூறினார். அந்த பாலிசிக்கு நான் தான் கையெழுத்துப் போட்டேன் என்பதால் எனக்கும் பதற்றமானது. நாங்கள் அனுப்பிய பெட்டி அப்படியே இருந்தது, ஆனால் அதற்குள் இருந்த பொருளைக் காணவில்லை. வேறு பொருட்கள் உள்ளே வைக்கப்பட்டிருந்தன. 

 

இதற்கான புலனாய்வில் நாங்கள் இறங்கினோம். சாதாரண பொருட்களையும் அனுப்பிப் பார்த்தோம். அவை சரியாகச் சென்று சேர்ந்தன. விமான நிலைய அதிகாரிகளை நாங்கள் தொடர்புகொண்டு இதில் எங்களுக்கு உதவுமாறு கேட்டோம். இந்த சம்பவங்கள் நடைபெறும் நேரங்களில் ஒரு குறிப்பிட்ட தொழிலாளி அங்கு வருவது எங்களுக்குத் தெரிந்தது. ஒவ்வொரு முறையும் பொருளை மாற்றுபவர் அவர் தான் என்பது தெரிந்தது. அவரைப் பிடித்து அவரிடம் இருந்த அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. என்னுடைய இளமைக் கால காப்பீடு அனுபவத்தில் மறக்க முடியாத சம்பவம் இது. 

 

அந்த வைர வியாபாரியின் மூலம் அதன் பிறகு பலர் நம்முடைய கஸ்டமர்களாக மாறினர். கடைகளுக்கு மட்டுமல்லாமல் தனிப்பட்ட நபர்களுக்கும் நாம் இன்சூரன்ஸ் வழங்குகிறோம். இன்சூரன்ஸ் கம்பெனிகளை ஏமாற்றுவது சாதாரண விஷயமல்ல. ஒரு இழப்பை ஈடுசெய்வதற்கு முன்பு, ஒருவர் உண்மையிலேயே இழப்பை சந்தித்திருக்கிறாரா என்பதை நாங்கள் தீவிரமாக ஆய்வு செய்வோம். இன்று எல்ஐசியின் பணம் நாட்டுக்கான வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

ஆறு கோடி இன்சூரன்ஸ்; அதிகாரிகளை ஏமாற்ற நடந்த நாடகம் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 28

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
rajkumar-solla-marantha-kathai-28

நண்பர்கள் மூவர் இணைந்து போலி லைப் இன்சூரன்ஸ் வாங்கி மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார் 

கடந்த வருடம் பேப்பரில் வந்த பிரபலமான வழக்கு இது. அந்த நபர் அமெரிக்காவில் நல்ல பெரிய பதவியில் வேலை செய்து கொண்டிருந்தவர். கொரோனா காலத்தில் வேலை இழந்து ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தும் தோல்வி அடைந்து ஊருக்கு திரும்புகிறார்.

வந்தவர் ஆறு  கோடி ரூபாய்க்கு லைஃப் இன்சூரன்ஸ் வாங்குகிறார். மூன்று நண்பர்களுடன்  சேர்ந்து திட்டம் செய்கின்றனர். அதாவது அவரைப் போலவே உள்ள போலி நபர் ஒருவரை கொலை செய்து இறந்ததாக லைஃப் இன்சூரன்ஸ் வாங்க திட்டமிடுகின்றனர். அதற்காகவே போலி நபரை கிராமத்திற்கு அழைத்துச் சென்று பாம்பாட்டியை வைத்து பாம்பை கடிக்க வைத்து அந்த நபரை கொன்று விடுகின்றனர்.  

இன்னொரு கூடுதல் போலி நபர் இறந்த உடலை வாங்குகிறார். இறந்த நபரை வைத்து இன்சூரன்ஸ் க்ளைம் வாங்க வருகிறார்கள்.  எங்கள் கம்பெனி இன்வெஸ்டிகேசனை ஆரம்பிக்கிறது. எதற்காக அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார், ஏன் பாலிசி எடுத்த மூன்று மாதத்தில் இறந்தார் என்று விசாரித்தோம். பாலிசி எடுத்த உண்மையான அமெரிக்கா நபர் காணவும் இல்லை. அந்த உடலை வாங்கியவர் தன்னை நாமினியில் போட்டிருக்கிறார். 

ஆனால் எல்லாமே முரண்பாடாக இருந்ததில் எங்களுக்கு சந்தேகம் வந்தது. பின்னர் விசாரித்ததில் இறந்தது நிஜ நபரும் இல்லை, பாடியை வாங்கியவரும் போலி. உண்மையான நபர் ஏற்கெனவே இறந்தும் வேறு இருக்கிறார் என்று தெரியவந்தது. மூன்று போலிகள் சேர்ந்து இந்த போலி இன்சூரன்ஸ் நாடகத்தை நடத்தி இருக்கின்றனர். உண்மையைக் கண்டுபிடித்த போலீஸ், விசாரணைக்கு உட்படுத்தி எல்லாரையும் கைது செய்து ரிமாண்டும் செய்து விட்டனர். இந்த வழக்கு இன்னும் ட்ரயலில் தான் இருக்கிறது. 

Next Story

கொள்ளை அடித்து உதவி; மும்பையை கலக்கிய பெண் தாதா - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 27

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rajkumar-solla-marantha-kathai-27

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கொள்ளை அடித்து உதவும் ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

மும்பையில் (money in Transit) என்று சொல்லப்படும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட வழக்கு இது.  75 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நிறுவனம் சம்பளம் கொடுக்க எடுத்து செல்கிறது. அந்த வண்டியை மறித்து ஒரு மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மும்பை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தும், யார் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரதீப் என்ற நபர் மீது சந்தேகம் எழுந்து விசாரிக்கின்றனர். விசாரணையில், கிரிஷ்மா என்ற பெண்ணின் அறிவுரையின் பேரில் இந்த கொள்ளைகள் நடந்ததாக தெரியவந்தது. கிரிஷ்மா காட்கோபரில் வசித்து வந்தார். அவருக்கு பல வாகனங்கள் மற்றும் பங்களாக்கள் இருந்தன. அந்த பகுதியில் பெரிய ஆளாக மக்கள் பலருக்கு உதவி செய்பவராக இருக்கிறார். இதனால் மும்பை போலீசார் கிரிஷ்மாவாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நம்பவில்லை. ஆனால், விசாரணையில், மர்ம கும்பல் நடத்திய அனைத்து கொள்ளைகளுக்கும் கிரிஷ்மாதான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இவர், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 50 சதவீதத்தை உதவி செய்வதற்கு பயன்படுத்தினார். யாரை வைத்து கொள்ளையடித்தார்களோ அந்த கும்பலை 40 நாட்கள் கிரிஷ்மா வெளியில் விடாமல் தன் உடனேயே வைத்திருப்பார். இப்படி வித்தியாசமான முறையில் வழிப்பறி செய்து வந்திருக்கிறார். இந்த வழக்கு 'மனி இன் டிரான்சிட்' என்ற இன்சூரன்ஸ் பெயரில் மும்பையில் இருந்து எங்களுக்கு வந்தது.

இதே போல மும்பையில் 54 வயதான பேபி என்பவர் போதைப்பொருள் கடத்தலில் சிறந்து விளங்கினார். காவல்துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்டிருந்ததால் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவருக்கு சில சலுகைகள் கிடைத்தது. இவர் குறிப்பாக மெட்ரோபில் என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பிரபலமானவர். நார்கோட்டிக் சட்டம் வந்த பிறகு, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது கடினம் ஆகி இவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, மும்பை, காஜா, தூத்துக்குடி, தேனி, கம்பம், வடசென்னை போன்ற இடங்களில் அதிகமாக போதைப்பொருள் விற்பனை நடக்கின்றன. 

போதைப்பொருள் தொழில் எளிமையாக பணம் வந்து சேரக்கூடியது. எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டியதில்லை என்று தாதாக்கள், ரவுடிகள் இதை செய்கிறார்கள். ஆனால் இதை செய்து மாட்டிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.