Skip to main content

இப்போது இங்கே கோடைக்காலம்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 24.

Published on 17/09/2019 | Edited on 19/09/2019

நான் இன்னும் கடலோரத்தில் வசித்து வருகிறேன். ஆனால், நான் தனிமையில் இல்லை. எனது ஜன்னலுக்கு அருகே, கடற்கரையில் இளைஞர்களும் இளம்பெண்களும் திடீரென வந்து குவிந்து விடுவார்கள். அவர்களது நீச்சல் உடைகள் பல வண்ணங்களில் ஜொலிக்கும்.
 

கடந்த ஆண்டைப் போலவே நான் தொடர்ந்து கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். என்னால் எப்போதும் செய்ய முடிகிற பணி அது. இந்தப் புத்தாண்டில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் எனது புதிய நூலான பறவைகளின் சங்கீதம் என்ற நூலை முடித்திருக்கிறேன். இந்த நூலின் முதல் பகுதி சிலி தேசத்தின் பறவைகளைப் பற்றிக் கூறுகிறது. அந்த பறவைகளைப் பற்றி எனக்கு மிக அதிகமாகவே பரிச்சயம் உண்டு. எனது தாய்நாடு ஆச்சரியங்கள் நிரம்பியது. பறவைகளின் சாம்ராஜ்யம் மட்டுமல்ல, உலகின் மிக மிகச்சிறிய பாடும் பறவை முதல் மிகப்பெரிய கடல்வாழ் பறவை வரை எண்ணற்ற உயிரினங்களை உள்ளடக்கியது.
 

இந்த நூலை எழுதும்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். நூல் முழுவதும் பறவைகளின் கீச்சொலிகள், அற்புதமாக இறக்கை விரித்து பறக்கும் காட்சிகள், அவை பாடும் பாடல்கள், அவற்றின் வண்ணங்கள் என சந்தோஷித்திருந்தேன். எனது பைனாகுலரை கழுத்தில் மாட்டிக் கொண்டு பல கடற்கரைகளில் அலைந்து திரிந்தேன். பல காடுகளுக்குள் பறவைகளைத் தேடி அலைந்தேன். பருந்துகள், கடல் பறவைகள், மரங்கொத்தி பறவைகள் என ஒவ்வொன்றையும் பார்ப்பதற்காக காத்திருந்தேன்.

https://www.nakkheeran.in/360-news/thodargal/thodargal-paththirikaiyalar-pablo-neruda-part-23


சிலி, கொந்தளிப்பு நிறைந்த கடல்களின் தேசம். கடினமான தரைப்பகுதியும் வனப்பு மிகுந்த வனங்களும், நீர்நிலைகளும், எல்லையற்ற கடல் வழியும் கொண்ட தேசம். ஆழமான பள்ளத்தாக்குகள் மூலம் மலைப்பகுதிகள் கடலில் இருந்து பிரிக்கப்பட்டிருக்கும். பூமியில் இடைவெளி விட்டு ஏற்பட்டுள்ள நிலப்பகுதிகள் போல அவை தோற்றமளிக்கும். இவை, பழங்காலத்து ஆறுகளின் தடங்கள். மிக நீண்ட காலத்திற்கு முன்பே இந்த ஆறுகள் வற்றி விட்டன. பள்ளத்தாக்குகள் இந்த கண்டத்தின் விவசாய வாழ்வையும் வனவிலங்குகளின் வாழ்வையும் முன்பிருந்ததைப் போலவே பாதுகாத்து வைத்திருக்கிறது. சிறுத்தைப்புலிகள், அடர்த்தியான காடுகள், காட்டுப்பூக்கள் இன்னும் பறவைகளும் கூட இங்கே சுதந்திரமாக திரிகின்றன.
 

பறவைகள் பலவிதமானவை. ஒவ்வொன்றும் ஆச்சரியம் அளிப்பவை. அவற்றை கவனிக்க, நாம் அவற்றின் முற்றங்களுக்கு முன்னால் அமர்ந்து கொள்ள வேண்டும். அவை தங்களது மொழியை பரிமாறத் துவங்கும் வரை காத்திருக்க வேண்டும். அவை பேச ஆரம்பித்தால், அந்த உரையாடல் எப்படிப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பேசிக் கொண்டேயிருக்கும். சில பறவைகளின் குரல் ஒலி, வயலின் இசையைப் போல இருக்கும். சில பறவைகள் கூச்சல் போடுவதைப் போல பாடும். சில பறவைகள் ஒரே குரலில் மீண்டும் மீண்டும் கத்தும். இவற்றையெல்லாம் பார்க்கும் போது, அடர்ந்த வனத்தின் இதயத்திலிருந்து இந்தக் குரல்கள் எழுந்து வருவதைப் போல இருக்கும். இன்னும் சில பறவைகள் இடைவிடாமல் கீச்சிட்டுக் கொண்டே இருக்கும். அவற்றின் கீச்சுக் குரல்கள் நமது இதயத்தை வருடும்...

https://www.nakkheeran.in/360-news/thodargal/thodargal-paththirikaiyalar-pablo-neruda-part-23



தற்போது இங்கே கோடைக்காலம். இப்போது இடைவிடாத, சமரசமில்லாத போராட்டம் தொடங்குவதை நான் காண்கிறேன். செப்டம்பரில் நாங்கள் ஒரு புதிய ஜனாதிபதியைப் பெற்றிருப்போம். யாரைத் தேர்வு செய்வது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஒரு நிலப்பிரபுவா, ஒரு சோசலிஸ்டா அல்லது ஒரு கிறிஸ்தவ ஜனநாயகவாதியா?

 

கடைசியாக குறிப்பிடப்பட்டவர் ஆளும் வர்க்கங்களுடன் மிகுந்த பரிச்சயம் கொண்டவர். கிறிஸ்தவ மதகுரு மற்றும் டாலர்கள் ஆகியவற்றால் நிதியுதவி செய்யப்பட்ட ஒரு `புரட்சியை’ இவர் பரிந்துரை செய்தார். நிலப்பிரபுத்துவ வேட்பாளரும் நிறைய ஆதரவாளர்களை கொண்டவர். ஏராளமான பணமும் உடையவர். வளர்ச்சி பெறாத முதலாளித்துவ நாடுகளில் இதைப் பற்றி பேசுவதே ஒரு மோசமான வாதமாக கருதப்படும். முற்போக்கு சக்திகள் மிகவும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு வேட்பாளரை களத்தில் நிறுத்தியிருக்கின்றன. அவரது பெயர் டாக்டர் சால்வடார் அலெண்டே.
 

ஏற்கெனவே நடந்த தேர்தல்களை ஒப்பிடும் போது, தற்போதைய தேர்தலில் இவர் வெற்றி பெற 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் தேவை. அந்த 30 ஆயிரம் மக்களை நமது பக்கம் வென்றெடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன? அவர்களிடம் நேரடியாக பேசுவோம், எங்களுக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுப்போம். இந்தப் பணிக்காக சிலி தேசத்தின் கலைஞர்களும் கவிஞர்களும் பறவைகளை கவனிப்பதை கொஞ்ச காலம் விட்டு விட்டனர். பள்ளத்தாக்குகளுக்கும் சந்தன மரங்களுக்கும் விடை கொடுத்து விட்டு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வீதிகளுக்கு நடந்தார்கள்.

paththirikaiyalar-pablo-neruda-part-23


நான் எனது நகரத்தில் இருந்து வெகுதூரத்தில் உள்ள பண்டா அரினாஸ் என்னுமிடத்தில் வாக்குகளை சேகரிக்க மக்களிடம் பேசப் போகிறேன். இந்த இடம் மெகல்லன் கடற்கரையில் உள்ள ஜலசந்தியில் அமைந்திருக்கிறது. புவிக்கோளத்தின் தென்துருவத்திற்கு அருகே இந்த இடம் இருக்கிறது. இந்த நகரில் பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. லெனின் கிராடு நகரைப் போல வெள்ளை இரவுகள் கொண்டது.
 

எனது மனைவி மடில்டா, தனது கிடார் எடுத்து கொள்வாள். எனது பாடல்களை பாடுவாள். காதல், மகிழ்ச்சி, சோகம், நம்பிக்கை தருகிற பாடல்கள் அவை.
 

அங்கிருந்து நான் எனது சோவியத் வாசகர்களுக்கு கடிதம் எழுதினேன். அங்கே பார்க்கிற, கேட்கிற அனைத்தைப் பற்றியும் அவர்களுக்குச் சொல்வேன்.
 

நான் எப்போதுமே ஆச்சரியப்படுவதுண்டு, சோவியத் மக்கள் நான் எழுதுவதை உண்மையிலேயே ரசிக்கிறார்களா? எங்களது தொலைதூர சின்னஞ்சிறிய உலகத்தைப் பற்றி அறிந்து கொள்ள அவர்கள் விரும்புகிறார்களா? இந்த மழைத்துளியிலிருந்து அவர்கள் புதிதாக எதையேனும் கண்டு வியக்கிறார்களா? அல்லது எனது தேசத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் நான் எழுதியவை. அவர்களுக்கு தொடர்பில்லாத ஒரு உலகத்தைப் பற்றியதாக இருந்ததா?
 

pablo-neruda-part-23



இருக்கட்டும்! நமது புவிக்கோளம் மழைத்துளிகளால் ஆனது, சின்னஞ்சிறிய மற்றும் மிகப்பெரிய உலகங்கள் கொண்டது. பெரும் நீர்ப்பரப்பாலும், கடும் வெயிலால் உருவான கானல் நீர்களாலும் நிரம்பிய மிக நீண்ட தூரங்களை கொண்டது.
 

விடை பெறுகிறேன்! மெகலன் கடற்கரை ஜலசந்தியில் அமைந்துள்ள பன்டா அரினாஸில் பல்லாயிரக்கணக்கான மக்கள் எனக்காக காத்திருக்கிறார்கள்.
 

-இழ்வெஸ்தியா, ஜனவரி 29, 1964.


முந்தைய பகுதி:
ஒரு நண்பனின் வாழ்த்துக்கள்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 23.

Next Story

தேவதாசிகளின் உண்மை வரலாறு!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

தேவதாசி என்ற வார்த்தை அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தேவதாசி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? அந்த வரலாற்றின் கரு எங்கு உற்பத்தியாகியது? இப்போது அந்த வார்த்தைக்கு கற்பிக்கப்படுகிற  அர்த்தம் நிஜம்தானா? என்பது பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம். அதன் விளைவே இந்த வரலாற்று சுருக்கம்.
 

தேவதாசி என்பது வடமொழிச் சொல் என்கிறார்கள். கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் இந்த தேவதாசி முறை புழக்கத்தில் இருந்தது என்று சிலர் கூறினாலும், சிந்து சமவெளி நாகரிக காலத்திலும், அதற்கு முந்தைய வேத காலத்திலும் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்தது என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

devadasi true history temples mandapam


ஆலயங்களில் இசை, நடனம் உள்ளிட்ட கலைகளின் வழியாக சேவையாற்றியவர்களே தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டனர். சமூகத்தில் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த பெண்கள் ஒரு பகுதி ஆண்களால் பாலியல் பொருளாக ஆக்கப்பட்டனர் என்கிறது வரலாறு. தேவதாசி என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே உயர்ந்தபட்ச கொதிநிலைக்கு சிலர் ஆளாவது ஏன் என்பதற்கு முடிந்த அளவுக்கு விளக்கம் சொல்வதே நமது நோக்கம்.
 

மிகப் பழமையான காலத்திலேயே தேவதாசி முறை இருந்திருக்கிறது. இந்தியாவின் தொன்மை நாகரிகம் என்று கருதப்படும் சிந்து சமவெளி நாகரித்திலேயே நடனக்கலை முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. நாட்டியப் பெண்மணியை சித்தரிக்கும் மிகச்சிறிய வெண்கலச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆரியர்களின் ரிக் வேதத்திலும் கூட நடனமாதுகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உஷா என்ற ஆடல் அரசியை ரிக் வேதம் வர்ணிக்கிறது. அதன்பிறகு வந்த புராணங்களிலும் இந்த நடனமாது கதாபாத்திரம் வருகிறது.
 

தேவதாசி என்ற வார்த்தை பலவிதமாக பயன்படுகிறது. ஆந்திராவில் மாதங்கி என்றும் விலாசினி என்றும், கொங்கனியில் நாயகி என்று், மராட்டியத்தில் பாசவி என்றும், கர்நாடாகவில் சூலி, சானி எனவும், ஒடிஸாவில் மக எனவும், உத்தரப்பிரதேசத்தில் பாலினி எனவும் தேவதாசிகளை அழைக்கிறார்கள்.

devadasi true history temples mandapam

சங்க இலக்கியங்கள் கலையறிந்த பெண்களை பதியிலாள், மாணிக்கம், தளிச்சேரி, பெண்டுகள் என்று அடையாளப்படுத்துகின்றன. இந்த வார்த்தைகளின் அர்த்தம் எல்லா வகையிலும் அந்தப் பெண்களை பெருமைப்படுத்துவதாகவே இருப்பதாக அறிஞர்கள் கூறியுள்ளனர். சைவ மற்றும் வைணவ மதங்களில் உள்ள ஆகமங்கள் இத்தகைய பெண்களை ருத்ர கன்னிகைகள் என்றே குறிப்பிடுகின்றன. இவர்கள் உடலாலும், மனதாலும் தூய்மையானவர்கள், சொல் மற்றும் செயலில் அறிவு மற்றும் பொறுமை உடையவர்கள். தோற்றத்தில் இளமையும் மென்மையும் உடையவர்கள் என்று தெரிவிக்கிறது.
 

சைவ சமயக் குறவர்களில் முதன்மையான திருநாவுக்கரசரும் தேவதாசிகளை போற்றிப் பாடுகிறார். சுந்தரமூர்த்தி நாயனாரின் காதல் மனைவி பறவை நாச்சியார் ஒரு தேவதாசி என்கிறார்கள். இவர்கள் இருவரின் காதலுக்கு சிவபெருமான் தூது சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. தேவதாசிகளின் உயர்வான நிலைக்கு இதுவே சான்று என்கிறார்கள்.
 

தேவதாசிகளில் இரண்டுவகை இருக்கிறார்கள். முதல்வகை பதியிலார் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் யாரையும் கணவனாக ஏற்காமல், இறைவனை மட்டுமே மனதில் நினைத்து வாழ்க்கையை நடத்துவார்கள். இவர்களுக்கு நித்ய சுமங்கலிகள் என்ற பெயரும் உண்டு. இரண்டாவது வகையினர் ருத்ர கன்னிகைகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இறைவனின் சன்னிதானத்தில் நாட்டியம் ஆடினாலும், தனது மனங்கவர்ந்த கணவன் ஒருவனோடு இல்லறம் நடத்தினார்கள். கணவனோடு வாழ்ந்தாலும், கணவன் இல்லாமல் வாழ்ந்தாலும் இவர்கள் மிகவும் ஒழுக்கமான வாழ்க்கையை நடத்தினார்கள். ஆனால், பிற்காலச் சமூகமே இவர்களை வேறு பாதைக்கு மாற்றியது என்கிறார்கள்.
 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களையே இப்போது தேவதாசி பரம்பரையினர் என்று இப்போது கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையில்லை. பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பெண்களும் தேவதாசிகளாக இருந்திருக்கிறார்கள் என்று ஆதாரங்களுடன் சொல்கிறார்கள். ஆதி சமூகத்தில் குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறக்கும் குழந்தையை கோவிலுக்கு அர்ப்பணித்துவிடும் பழக்கம் இருந்திருக்கிறது. இந்தப் பழக்கம் அந்தணர், மறவர், வேளாளர் என்று சாதி வித்தியாசம் இல்லாமல் எல்லா மக்களிடத்தும் இருந்ததாக கூறுகிறார்கள். தேவதாசி பரம்பரையினர் எண்ணிக்கை அதிகரித்ததால் தங்களை ஒரு சமுதாயமாக அறிவித்துக் கொண்டதாக கருதலாம்.
 

ஆலயங்களில் தேவதாசிகளின் கடமை புனிதமானதாக கருதப்பட்டது. காலை, மாலை, உச்சிக்கால பூஜைகளில் இறைவன் முன் நாட்டியாஞ்சலி செய்வது இவர்களுடைய பணி. அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு மூர்த்தியை பள்ளியறைக்கு எடுத்துச் செல்லும்போதும், லாலி ஊஞ்சல், திருத்தாழ் அடைப்பு பாடல்களை பாட வேண்டும். ஒரு ஆலயத்தில் பல தேவதாசிகள் இருந்தால் முறை வைத்து பணி செய்தார்கள். ஆடல், பாடல் தெரியாத தேவதாசிகள் மாலை தொடுத்தல், பூஜை பாத்திரங்கள் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை செய்தார்கள்.
 

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்புவரை பட்டர்களைப் போலவே தேவதாசிகளும் கருவறைவரை சென்று வந்தனர். இதற்கான ஆதாரங்கள், திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும், திருவாரூர் தியாகராஜர் ஆலயத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. புத்த, சமண துறவிகளின் பள்ளிகளிலும் தேவதாசிகள் பணிபுரிந்துள்ளனர். புத்தரேகூட தனது இறுதிக் காலத்தில் அமிராபாலி என்ற தேவதாசியிடம் மாந்தோப்பு ஒன்றை தானமாகப் பெற்று சங்கம் நிறுவ பயன்படுத்தியதாக யுவான் சுவாங் குறிப்புகளில் உள்ளது.

devadasi true history temples mandapam


 

வரலாற்றில் பல தேவதாசிகளின் பொதுத் தொண்டுகள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்துவிட்டால் அவளது உடலை ஆலய மூல மூர்த்திக்கு போர்த்தப்படும் புனித ஆடையை போர்த்தியே எடுத்துச் செல்வார்கள். அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தப்படும். மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் முன், ஆலயத்தின் ராஜகோபுரத்தின் முன் சிறிது நேரம் ஊர்வலம் நிறுத்தப்படும். தேவதாசிகள் ஒழுக்கமற்றவர்களாக இருந்திருந்தால் இத்தகைய மரியாதைக்கு அன்றைய சமூகம் ஒப்புக்கொண்டிருக்குமா? ஊர்வலம் சென்று திரும்பும் உற்சவ மூர்த்திக்கு கண் திருஷ்டி கழிக்கும் உரிமை தேவதாசிக்கு வழங்கப்பட்டது. சிலப்பதிகாரத்தில் மாதவியின் நேர்மைத்திறம், அவளுடைய மகள் மணிமேகலையின் துறவறம் போன்றவை சிறப்பு மிகுந்தவை.
 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தேவதாசி முறை பின்னர் ஏன் அவமானச் சின்னமானது? தேவதாசி பரம்பரையில் ஒழுக்கக்கேடு திடீரென வந்துவிடவில்லை. ஆதியில் மூத்த மகளை தேவதாசியாக நேர்ந்து விடும் பழக்கம் இருந்தது. ஆனால், பிற்காலத்தில் சற்று வசதி வந்தபிறகு, மூத்த மகளை தேவதாசியாக்க விரும்பாத சிலர் வேறு ஒரு பெண்ணை விலைக்கு வாங்கி தேவதாசியாக நேர்ந்து விடும் பழக்கம் தொடங்கியது. இப்படிப்பட்ட குறுக்குப் புத்திகளுக்கு வளைந்து கொடுக்கிற வகையில் அன்றைக்கும் சட்டமும் சமூக வழக்கமும் மாறிப்போனது. வசதியற்ற பெண்ணை விலைக்கு வாங்கலாம் என்ற நிலை உருவானபிறகு, இறைவன் முன் மட்டுமே நடனமாட வேண்டிய தேவதாசி அரசன் முன்னும் ஆடலாம் என்ற நிலையும் எளிதாக அறிமுகமாகிவிட்டது.
 

ராஜாதிராஜ சோழன் காலத்தில் 1174ல் பணக்கார வணிகர் நான்கு ஏழைப் பெண்களை 700 தங்கக் காசுகளுக்கு வாங்கி திருவாளங்காடு கோவிலுக்கு அர்ப்பணம் செய்ததாக கல்வெட்டு இருக்கிறது. நாளடைவில், அரசர்களும், அவர்களுக்கு கீழான சிற்றரசர்களும், ஜமீன்தார்களும், பண்ணையார்களும் பல தேவதாசிகளை தங்களுடைய ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டனர். அதுவே அவர்களுடைய பணச் செருக்கின் அடையாளமாக கருதப்படும் நிலையும் உருவானது.

பக்தியையும், பரதத்தையும், இசையயும் வளர்த்த தேவதாசிகளை தஞ்சை போன்ற நில உடமையாளர் ஆதிக்கம் நிறை பகுதிகளில் பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அவமானச் சின்னமாக கருதப்பட்டனர். பணக்கார வீடுகளில் விருந்தினர்களை சந்தோஷப்படுத்தவே பல ஏழைப் பெண்கள் பாலியல் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டனர்.

மனிதர்களின் வக்கிரபுத்தியால், தெய்வீகமாக கருதப்பட்ட தேவதாசிகளின் நிலைமை அவமானகரமான நிலைக்கு தள்ளப்பட்டது. வயதான தேவதாசிகள் பிச்சையெடுத்துப் பிழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

devadasi true history temples mandapam


இப்படிப்பட்ட அவமானகரமான சூழலில் சிக்கிய பெண்களை மீட்கத்தான் மூவலூர் ராமமிர்தம் அம்மையாரும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் சட்டபூர்வமாக முயற்சி செய்தனர். தேவதாசி முறையை பூண்டோடு ஒழித்துக்கட்ட சட்டமியற்ற வேண்டும் என்று அவர்கள் போராடினார்கள். அப்போது, சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த சத்தியமூர்த்தி தேவதாசி முறையை ஒழித்தால் தெய்வக் குற்றமாகிவிடும் என்றார். அவர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் பாக்கியத்தை இழந்துவிடுவார்கள் என்றார். தெய்வப்பணியில் ஈடுபடுபவர்களே தேவதாசிகள் என்றார்.
 

ஆனால், அவருக்கு பதில் கொடுத்த முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள், இதுவரை ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் இறைப்பணி ஆற்றினார்கள். இனி, உங்கள் குலத்தை சேர்ந்த பெண்கள் இறைப்பணியாற்ற தேவதாசிகள் ஆகலாமே என்று கேட்டார். இவ்வாறுதான் மனிதர்களின் காம இச்சையால் கொச்சைப்படுத்தப்பட்ட தேவதாசிகளின் எதிர்காலம் மரியாதைமிக்கதாக மாற்றப்பட்டது என்பது வரலாறு.


 

Next Story

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 19

Published on 31/12/2019 | Edited on 06/01/2020

குஜராத் குடிநீர் வாரிய ஊழல்!- WATER BOARD SCAM (GUJARAT)

athanur chozhan bjp party states government a to z part 19

குஜராத் மாநில குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் கண்டபடி செய்ததில் 340 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இந்த வாரியம் எப்படி செலவு செய்ய வேண்டும் என்று இந்திய சார்ட்டட் அக்கவுண்டன்ட் நிறுவனம் பல வழிமுறைகளை வகுத்துள்ளது. அதை பின்பற்றாமல் விதிகளை மீறி செலவு செய்து கணக்கு எழுதப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த ஊழல் குறித்து முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா கடுமையாக விமர்சனம் செய்தார். 2017-2018 நிதியாண்டில் மட்டும் இந்த ஊழல் என்றால், இதற்கு முன் எவ்வளவு நடந்ததோ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.


மத்தியப் பிரதேச நீர்வளத்துறையில் ஊழல்!- WATER RESOURCES DEPT.SCAM (MADHYA PRADESH)

athanur chozhan bjp party states government a to z part 19


மத்தியப்பிரதேச மாநில பாஜக முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் நிர்வாகத்தில் அரசின் பல்வேறு திட்டங்களில் ஏராளமான நிதி மோசடிகள் நடைபெற்றிருப்பதை மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி கண்டுபிடித்து வெளியிட்டார். இந்த முறைகேடுகளால் அரசுக்கு 8 ஆயிரத்து 17 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரி தெரிவித்தார். நீர்வளத்துறையில் பணிபுரியும் அதிகாரிகள், பொதுப்பணித்துறை விதிகளை மீறியிருப்பது தெரியவந்தது. திட்டத்தை தொடங்குவதற்கு முன் எந்திவிதமான மதிப்பீடும் அளவீடும் செய்யாததே மக்கள் பணம் விரையமானதற்கு காரணம் என்று கூறப்பட்டது.


நிலக்கடலைக்கு பதிலாக கற்களும் மணலும் நிரப்பி ஏமாற்றிய குஜராத் அரசு!- WEIGHT MANIPULATION SCAM

athanur chozhan bjp party states government a to z part 19


குஜராத் மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து ஏராளமான நிலக்கடலையை அரசு கொள்முதல் செய்தது. இந்த நிலக்கடலை மொத்தத்தையும் இடைத்தரகர்களின் உதவியோடு அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து எண்ணெய் உற்பத்தி ஆலைகளுக்கு விற்றுவிட்டனர். இந்தத் திருட்டை மறைப்பதற்காக 31 ஆயிரத்து 500 சாக்குகளில் கூழாங்கற்களையும், மணலையும் கலந்து நிரப்பினார்கள். இந்த திருட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், இந்த ஊழலில் தொடர்புடைய பாஜக தலைவர்களை அரசு காப்பாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
 

எக்ஸ்ரே டெக்னிஷியன் பணிநியமனத்தில் ஊழல்!- X- RAY TECHNICIAN RECRUITMENT SCAM

athanur chozhan bjp party states government a to z part 19


எக்ஸ்ரே தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிந்த நிலையில், தேர்வு எழுதியவர்களுக்கு போன் மூலம் அழைப்பு வந்தது. பணம் கொடுத்தால் வேலை உறுதி என்று சொல்லப்பட்டது. வேலைக்கு 2 முதல் 4 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார்கள். நுழைவுத் தேர்வில் தேறி, நேர்முகத் தேர்வுக்கு தேர்வானவர்களுக்கே இந்த போன்கள் வந்தன. பணம் கொடுத்த பலருடைய பெயர் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. இதையடுத்தே இந்த ஊழல் வெளியே வந்தது.


எடியூரப்பாவிடம் லஞ்சம் பெற்ற பாஜக தலைவர்கள்!- YEDDY DIARIES (KARNATAKA)

athanur chozhan bjp party states government a to z part 19


பாஜகவின் மத்திய தலைவர்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் எடியூரப்பா லஞ்சம் கொடுத்திருக்கிறார். இதுபற்றிய தகவல்களை அவர் ஒரு டைரியில் குறித்து வைத்திருந்தார். அந்த டைரி வருமானவரித் துறை அதிகாரிகளிடம் சிக்கியது. அந்த டைரியை தி கேரவான் பத்திரிகை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவின் மத்திய கமிட்டிக்கு ஆயிரம் கோடி ரூபாயும், அருண் ஜெட்லிக்கு 150 கோடி ரூபாயும், நிதின் கட்கரிக்கு 150 கோடி ரூபாயும், ராஜ்நாத் சிங்கிற்கு 150 கோடியும், எல்.கே.அத்வானிக்கு 100 கோடியும், முரளி மனோகர் ஜோஷிக்கு 50 கோடியும், கட்கரி மகன் திருமணத்துக்கு 10 கோடியும், சில நீதிபதிகளுக்கு 250 கோடியும், வழக்கறிஞர்களுக்கு 50 கோடியும் கொடுத்த விவரங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

2009- ஆம் ஆண்டு கர்நாடகா சட்டமன்றம் வெளியிட்ட டைரியில், இந்த விவரங்களை எடியூரப்பா தனது சொந்த கையெழுத்தில் கன்னடத்தில் எழுதி வைத்திருந்தார். இந்த டைரியை வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் விரும்பினார்கள். ஆனால், தனது பெயர் இடம்பெற்றிருந்ததால் அருண்ஜெட்லி நடவடிக்கைக்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.
 

எடியூரப்பா நில ஊழல்!- YEDDYURAPPA LAND SCAM (KARNATAKA)

athanur chozhan bjp party states government a to z part 19


கர்நாடகா முதல்வராக இருந்தபோது அரசு நிலத்தை தனது குடும்பத்தினருக்கும், தன்னை பின்பற்றுகிறவர்களுக்கும் முறைகேடாக கொடுத்தார். இதுதொடர்பாக போதுமான ஆதாரம் இருப்பதாக லோக்அயுக்தா அறிக்கை கொடுத்தது. அதன் அடிப்படையில் எடியூரப்பா மீது வழக்கு தொடரலாம் என்று அறிவுறுத்தியது. தொழிற்பேட்டையில் இரண்டு ஏக்கர் நிலத்தை பெங்களூரில் உள்ள தனது குடும்ப நிறுவனங்களுக்கும், தனது மகளுக்குச் சொந்தமான பிபிஓ நிறுவனத்துக்கு 2 ஏக்கர் நிலமும், பெங்களூருவில் தனது மகனுக்கு ஒரு குடியிருப்பு மனையும், தன்னை பின்பற்றும் ஆதரவாளர்களுக்கு சுரங்கத்திற்காக 134 ஏக்கர் நிலமும், மைசூருவில் உள்ள தனது உறவினர்களுக்காக குடியிருப்பு மனைகளும் தாராளமாக வாரிக் கொடுத்திருக்கிறார் எடியூரப்பா.


ஸ்மிருதி இராணியின் கணவரின் நில ஊழல்!- ZUBIN IRANI LAND SCAM (MP)

athanur chozhan bjp party states government a to z part 19


மத்தியப்பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் ஒரு பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு பகுதியை அங்குள்ள கம்பெனி ஒன்று அபகரித்தது. இந்த சட்டவிரோதமான நில அபகரிப்பை பள்ளியின் தலைமை ஆசிரியர் வெளியுலகிற்கு கொண்டுவந்தார். அதன்பிறகுதான் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் நிலத்தை அபகரித்த கம்பெனியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கணவர் பங்குதாரர் என்ற விஷயம். தனது மனைவியின் அமைச்சர் பதவி கொடுத்த தைரியம் அவருடைய கணவருக்கு இந்தளவு துணிச்சலைக் கொடுத்திருக்கிறது.