Skip to main content

மார்பகங்களை மறைக்காத மினோவன் மேலாடை! உடையின் கதை #8

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

மத்திய தரைக்கடலில் உள்ள தீவுகளில் ஐந்தாவது பெரிய தீவு கிரெட்டே. கிரீஸ் நாட்டிற்கு உட்பட்ட இந்த தீவில்தான் ஐரோப்பாவின் முதல் நாகரிகம் தோன்றியது.


 

 

இதை ஏஜியன் கலாச்சாரம் என்றுகூட சொல்வார்கள். கீரீஸ் தீபகற்பத்தின் கீழ் உள்ள இந்த கடல் மத்திய தரைக்கடலின் ஒரு பகுதிதான். இந்தக் கடலில் உள்ள தீவுகளிலும், கடலை ஒட்டிய நாடுகளிலும் உருவான நாகரிகங்களில் முதன்மையானது மினோவன் நாகரிகம். மைசீனிய நாகரிகம் என்றும் சொல்வார்கள்.

 

 

கிரெட்டே தீவில் கி.மு.6000ம் ஆண்டுகளிலேயே மக்கள் வசித்தனர். இந்தத் தீவுதான் ஐரோப்பிய கலாச்சாரத்தின் தொட்டில் எனப்படுகிறது. இந்தத் தீவில் குடியேறியவர்கள் அனடோலியா, வடக்கு ஆப்பிரிக்கா, சிரியா, பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என கருதப்படுகிறது.


 

udaiyin kathai


 

கி.மு.2500 வாக்கில் கிரெட்டே நாகரிகம் உருவாகத் தொடங்கியது. மத்தியத் தரைகடல் நாடுகளைச் சேர்ந்த மக்கள் மத்தியக்கிழக்கு நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். கிரெட்டே மக்கள் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களாலும் ஈர்க்கப்பட்டனர். அவர்கள், தங்களுக்கென்று தனித்துவம் மிக்க ஒரு சமுதாயத்தையும், உடை வடிவமைப்பையும் உருவாக்கினர்.

 

கி.மு.1750 முதல் 1400 வரையிலான ஆண்டுகள் இந்த நாகரிகத்தின் முக்கியமான ஆண்டுகள். இந்த காலகட்டத்தில் மிகப் பிரமாண்டமான அரண்மனைகளை இவர்கள் கட்டினார்கள். நோஸோஸ் என்ற அரண்மனை வளாகம் கலைநயமிக்கது. இந்த அரண்மனையில் இடம்பெற்றுள்ள சுவர் ஓவியங்கள், வண்ணம் தீட்டப்பட்ட பாத்திரங்கள், பளிங்கில் செய்யப்பட்ட சிலைகள், டெர்ரகோட்டா, வண்ணம் தீட்டப்பட்ட செராமிக்ஸ் என பிரமிக்க வைக்கிறது இவர்களது நாகரிகம். தெரா தீவில் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட மினோவன் நகரில் முழுமையான சுவரோவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தீவு கி.மு.1500களில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பில் பெருமளவு அழிந்துபோனது. அந்தத் தீவில் இப்போதும் அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

 

udaiyin kathai


 

கிரெட்டே மக்கள் பயன்படுத்திய உடைகள் தெளிவான வண்ணங்களுடன், நேர்த்தியாக, நுணுக்கங்களுடன் இருந்தன. பாரம்பரிய கீரிஸ் வழக்கத்தைப் போல இல்லாமல், பெண்கள் உடை கொண்டாடும் வகையில் இருந்தன. பெண்கள் ஆண்களுடன் அன்றாட சமூக நிகழ்வுகளில் சரிசமமாக நட்த்தப்பட்டனர். குடும்பப் பின்னணி பார்த்து தரம் இறக்கப்படவில்லை. ஆண்களின் உடை வடிவங்கள் சிலதான். கம்பளி, தோல், லினென் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட இடுப்பாடைதான் ஆண்களுக்கு உரியதாக இருந்தது. அந்த இடுப்பு உடை, ஒரு பெல்ட்டால் கட்டப்பட்டு அலங்காரமான குட்டைப் பாவாடைபோல அணிந்தார்கள்.

 

 

கி.மு.1750 ஆம் ஆண்டுகளில் பெண்கள் நீளமான மணி வடிவ பாவாடையை அணிந்தனர். மார்புப் பகுதியில் தொளதொள ஜாக்கெட்டை அணிந்தனர். அந்த ஜாக்கெட் மார்கங்களை மறைக்காதபடி வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த காலங்களில் ஜாக்கெட்டின் இருபக்கத்தையும் இணைக்கும் வகையில் நூலிழைப் பின்னல்கள் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய உடைகள் பெண் சாமியார்கள், கடவுளர்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன.

 

கிரெட்டே மக்கள் பளிச்சென்ற வண்ணங்களை விரும்பினார்கள். அவர்களுடைய உடைகள் பின்னல் வேலைகளையும், அலங்கார வேலைகளையும் கொண்டிருந்தன. ஆணும் பெண்ணும் நீளமான கூந்தலை வளர்த்தனர். கூந்தலையும் நகைகள், முத்துக்கள், ரிப்பன்களைக் கொண்டு அலங்கரித்தனர். கிரெட்டே மக்கள் அடிக்கடி குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். குளித்தபிறகு எண்ணெய் கொண்டு உடலைப் பூசுவார்கள். ஆண்கள் பளிச்சென்று ஷேவ் செய்துகொண்டார்கள். வெளியில் போகும்போது ஆண்களும் பெண்களும் செருப்பு அல்லது ஷூ அணிந்தனர். குளிர்காலத்தில் முழங்கால் வரையான நீளமான ஷூக்களை அணிந்தார்கள். தோள்பட்டையில் குட்டையான கம்பளி ஆடையை போர்த்தி ஊசிகளால் இறுக்கமாக இணைத்திருந்தனர்.

 

udaiyin kathai


 

கி.மு.1400 வாக்கில் மினோவன் நாகரிகம் சிதையத் தொடங்கியதுமு, பெலப்போன்னீஸில் புதிய நாகரிகம் உருவாகியது. கடல்பகுதி நாடுகளின் பழக்கப்படியே இந்த நாகரிகம் அமைந்திருந்தது. அந்த நாகரிகத்திலும் உடைகள் மினோவன் நாகரிகத்தில் பயன்படு்ததியதைப் போலவே இருந்தன. ஆனால், அதைக்காட்டிலும் ஆடம்பரமானதாக அமைந்திருந்தன.

 

கிரெட்டே நாகரிகத்தின் தொடர்ச்சியாக புராதன கிரேக்க நாகரிகத்தையும் பார்த்துவிடலாம். இந்த நாகரிகத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். கி.மு.500 ஆம் ஆண்டு வரையிலான காலத்தை தொன்மையான காலம் என்கிறார்கள். கிரீஸ் தீவு, அனடோலியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றிலும், கிரேக்கத் தீபகற்பத்திலும் பல்வேறு நாகரிகங்கள் உருவாகி இருந்தன. இந்த நாகரிகங்களின் கலைகளும், உடைகளும்  ஒன்றின் மீது மறொன்று செல்வாக்கு செலுத்தும் வகையில் இருந்தன.

 

 

கிரீஸின் டோரி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த டோரியர்கள் கி.மு.1200 வாக்கில் மினோவன் முடியாட்சி நடந்த கிரெட்டே தீவையும், பெலப்போனிஸையும் படையெடுத்து வெற்றிகொண்டனர். இவர்கள் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மினோவர்களைக் காட்டிலும் குறைவான முன்னேற்றம் கண்ட சமூகத்தினர். உடை பற்றிய அவர்களுடைய நவீன அறிவு நேர்த்தியற்றதாக இருந்தது. ஆனால், அவர்களுடைய உடை எளிமையாக இருந்தது.  உள்ளூர் செம்மறி ஆடுகளில் இருந்து பெறப்பட்ட கம்பளியால் செய்யப்பட்ட ஆடையை அணிந்தார்கள். கம்பளி ஆடையை சதுரமாக வெட்டி, தோள்பட்டையிலும், உடலைச் சுற்றிலும் ஊசிகளால் குத்தி அணிந்தனர். அனடோலியாவில் குளிர்காலத்துக்கு ஏற்றபடி அணியும் உடைகளைப் பார்த்து, தலையில் கூம்புவடிவ தொப்பிகளையும், காலுறைகளையும் அணிந்தனர்.  

 

டோரியர்களைத் தொடர்ந்து, கிரேக்கத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த லோனியர்கள் லோனியா மொழியை பேசினார்கள். அனடோலியாவில்  டோரியர்கள் குடியேறியதைத் தொடர்ந்து, லோனியர்கள் மேற்கு அனடோலியாவுக்கு குடியேறினார்கள். அவர்கள் அட்டிகா உள்ளிட்ட மத்திய கிரேக்க பகுதிகளில் இருந்த வெளியேறியது அகாயியன் முடியாட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

 

லோனியர்களின் நெசவு தொழில் உயர்தரமானதாக இருந்தது. கம்பளி மற்றும் லினெனில் இருந்து லேசான உடைகளை நெய்தனர். கி.மு.8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் மத்தியப் பிரதேச நாடுகள் இடையே விரிவான வர்த்தகத்தை ஏற்படுத்தினார்கள். மேற்கே கவ்ல் பிரதேசத்திலிருந்து கிழக்கே லிபியா வரை அவர்களுடைய வர்த்தகம் பரவியிருந்தது.

 

udaiyin kathai


 

கி.மு.5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் எளிமையான, உயர்தர நுணுக்கங்களோடு அருமையான தரத்தில் உடைகள் தயாரிக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் கிரேக்க இலக்கியம், கட்டடக்கலை, சிற்பவேலைகள் சிறந்திருந்தன. உடைகள் விஷயத்திலும் தரம் மிகுந்திருந்தது. விதவிதமான வடிவமைப்புகள் சுவரோவியங்களில் கிடைக்கின்றன.

 

பாரம்பரிய கிரேக்க உடைகள் போர்த்தும் வகையிலும், கொஞ்சமாய் தைக்கும் வகையிலும் இருந்தன. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான உடைகளே இருந்தன. ஆனால், உடலைச் சுற்றி போர்த்தி அணியும் விதம் மாறியிருக்கும். அழகிய ரிப்பன்கள், ஊசிகள் கொண்டு அந்த உடையை இணைத்தனர்.

 

அந்த உடைகள் மொத்தமாக இயற்கையானவை. இந்த உடையை அணிபவர்கள் அதை நுணுக்கத்தோடு கையாண்டனர்…

 

 

முந்தைய பகுதி:

மெஸபடோமியருக்கு கம்பளிதான் எல்லாம்!!! உடையின் கதை #7

Next Story

மார்பகங்களை மறைக்காத மினோவன் மேலாடை! உடையின் கதை #8

Published on 04/08/2018 | Edited on 04/08/2018

மத்திய தரைக்கடலில் உள்ள தீவுகளில் ஐந்தாவது பெரிய தீவு கிரெட்டே. கிரீஸ் நாட்டிற்கு உட்பட்ட இந்த தீவில்தான் ஐரோப்பாவின் முதல் நாகரிகம் தோன்றியது.


 

udaiyin kathai


 

இதை ஏஜியன் கலாச்சாரம் என்றுகூட சொல்வார்கள். கீரீஸ் தீபகற்பத்தின் கீழ் உள்ள இந்த கடல் மத்திய தரைக்கடலின் ஒரு பகுதிதான். இந்தக் கடலில் உள்ள தீவுகளிலும், கடலை ஒட்டிய நாடுகளிலும் உருவான நாகரிகங்களில் முதன்மையானது மினோவன் நாகரிகம். மைசீனிய நாகரிகம் என்றும் சொல்வார்கள்.

 

 

 

கிரெட்டே தீவில் கி.மு.6000ம் ஆண்டுகளிலேயே மக்கள் வசித்தனர். இந்தத் தீவுதான் ஐரோப்பிய கலாச்சாரத்தின் தொட்டில் எனப்படுகிறது. இந்தத் தீவில் குடியேறியவர்கள் அனடோலியா, வடக்கு ஆப்பிரிக்கா, சிரியா, பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என கருதப்படுகிறது.


 

udaiyin kathai


 

கி.மு.2500 வாக்கில் கிரெட்டே நாகரிகம் உருவாகத் தொடங்கியது. மத்தியத் தரைகடல் நாடுகளைச் சேர்ந்த மக்கள் மத்தியக்கிழக்கு நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். கிரெட்டே மக்கள் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களாலும் ஈர்க்கப்பட்டனர். அவர்கள், தங்களுக்கென்று தனித்துவம் மிக்க ஒரு சமுதாயத்தையும், உடை வடிவமைப்பையும் உருவாக்கினர்.

 

கி.மு.1750 முதல் 1400 வரையிலான ஆண்டுகள் இந்த நாகரிகத்தின் முக்கியமான ஆண்டுகள். இந்த காலகட்டத்தில் மிகப் பிரமாண்டமான அரண்மனைகளை இவர்கள் கட்டினார்கள். நோஸோஸ் என்ற அரண்மனை வளாகம் கலைநயமிக்கது. இந்த அரண்மனையில் இடம்பெற்றுள்ள சுவர் ஓவியங்கள், வண்ணம் தீட்டப்பட்ட பாத்திரங்கள், பளிங்கில் செய்யப்பட்ட சிலைகள், டெர்ரகோட்டா, வண்ணம் தீட்டப்பட்ட செராமிக்ஸ் என பிரமிக்க வைக்கிறது இவர்களது நாகரிகம். தெரா தீவில் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட மினோவன் நகரில் முழுமையான சுவரோவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தீவு கி.மு.1500களில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பில் பெருமளவு அழிந்துபோனது. அந்தத் தீவில் இப்போதும் அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

 

udaiyin kathai


 

கிரெட்டே மக்கள் பயன்படுத்திய உடைகள் தெளிவான வண்ணங்களுடன், நேர்த்தியாக, நுணுக்கங்களுடன் இருந்தன. பாரம்பரிய கீரிஸ் வழக்கத்தைப் போல இல்லாமல், பெண்கள் உடை கொண்டாடும் வகையில் இருந்தன. பெண்கள் ஆண்களுடன் அன்றாட சமூக நிகழ்வுகளில் சரிசமமாக நட்த்தப்பட்டனர். குடும்பப் பின்னணி பார்த்து தரம் இறக்கப்படவில்லை. ஆண்களின் உடை வடிவங்கள் சிலதான். கம்பளி, தோல், லினென் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட இடுப்பாடைதான் ஆண்களுக்கு உரியதாக இருந்தது. அந்த இடுப்பு உடை, ஒரு பெல்ட்டால் கட்டப்பட்டு அலங்காரமான குட்டைப் பாவாடைபோல அணிந்தார்கள்.

 

 

 

கி.மு.1750 ஆம் ஆண்டுகளில் பெண்கள் நீளமான மணி வடிவ பாவாடையை அணிந்தனர். மார்புப் பகுதியில் தொளதொள ஜாக்கெட்டை அணிந்தனர். அந்த ஜாக்கெட் மார்கங்களை மறைக்காதபடி வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த காலங்களில் ஜாக்கெட்டின் இருபக்கத்தையும் இணைக்கும் வகையில் நூலிழைப் பின்னல்கள் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய உடைகள் பெண் சாமியார்கள், கடவுளர்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன.

 

கிரெட்டே மக்கள் பளிச்சென்ற வண்ணங்களை விரும்பினார்கள். அவர்களுடைய உடைகள் பின்னல் வேலைகளையும், அலங்கார வேலைகளையும் கொண்டிருந்தன. ஆணும் பெண்ணும் நீளமான கூந்தலை வளர்த்தனர். கூந்தலையும் நகைகள், முத்துக்கள், ரிப்பன்களைக் கொண்டு அலங்கரித்தனர். கிரெட்டே மக்கள் அடிக்கடி குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். குளித்தபிறகு எண்ணெய் கொண்டு உடலைப் பூசுவார்கள். ஆண்கள் பளிச்சென்று ஷேவ் செய்துகொண்டார்கள். வெளியில் போகும்போது ஆண்களும் பெண்களும் செருப்பு அல்லது ஷூ அணிந்தனர். குளிர்காலத்தில் முழங்கால் வரையான நீளமான ஷூக்களை அணிந்தார்கள். தோள்பட்டையில் குட்டையான கம்பளி ஆடையை போர்த்தி ஊசிகளால் இறுக்கமாக இணைத்திருந்தனர்.

 

udaiyin kathai


 

கி.மு.1400 வாக்கில் மினோவன் நாகரிகம் சிதையத் தொடங்கியதுமு, பெலப்போன்னீஸில் புதிய நாகரிகம் உருவாகியது. கடல்பகுதி நாடுகளின் பழக்கப்படியே இந்த நாகரிகம் அமைந்திருந்தது. அந்த நாகரிகத்திலும் உடைகள் மினோவன் நாகரிகத்தில் பயன்படு்ததியதைப் போலவே இருந்தன. ஆனால், அதைக்காட்டிலும் ஆடம்பரமானதாக அமைந்திருந்தன.

 

கிரெட்டே நாகரிகத்தின் தொடர்ச்சியாக புராதன கிரேக்க நாகரிகத்தையும் பார்த்துவிடலாம். இந்த நாகரிகத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். கி.மு.500 ஆம் ஆண்டு வரையிலான காலத்தை தொன்மையான காலம் என்கிறார்கள். கிரீஸ் தீவு, அனடோலியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றிலும், கிரேக்கத் தீபகற்பத்திலும் பல்வேறு நாகரிகங்கள் உருவாகி இருந்தன. இந்த நாகரிகங்களின் கலைகளும், உடைகளும்  ஒன்றின் மீது மறொன்று செல்வாக்கு செலுத்தும் வகையில் இருந்தன.

 

 

 

கிரீஸின் டோரி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த டோரியர்கள் கி.மு.1200 வாக்கில் மினோவன் முடியாட்சி நடந்த கிரெட்டே தீவையும், பெலப்போனிஸையும் படையெடுத்து வெற்றிகொண்டனர். இவர்கள் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மினோவர்களைக் காட்டிலும் குறைவான முன்னேற்றம் கண்ட சமூகத்தினர். உடை பற்றிய அவர்களுடைய நவீன அறிவு நேர்த்தியற்றதாக இருந்தது. ஆனால், அவர்களுடைய உடை எளிமையாக இருந்தது.  உள்ளூர் செம்மறி ஆடுகளில் இருந்து பெறப்பட்ட கம்பளியால் செய்யப்பட்ட ஆடையை அணிந்தார்கள். கம்பளி ஆடையை சதுரமாக வெட்டி, தோள்பட்டையிலும், உடலைச் சுற்றிலும் ஊசிகளால் குத்தி அணிந்தனர். அனடோலியாவில் குளிர்காலத்துக்கு ஏற்றபடி அணியும் உடைகளைப் பார்த்து, தலையில் கூம்புவடிவ தொப்பிகளையும், காலுறைகளையும் அணிந்தனர்.  

 

டோரியர்களைத் தொடர்ந்து, கிரேக்கத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த லோனியர்கள் லோனியா மொழியை பேசினார்கள். அனடோலியாவில்  டோரியர்கள் குடியேறியதைத் தொடர்ந்து, லோனியர்கள் மேற்கு அனடோலியாவுக்கு குடியேறினார்கள். அவர்கள் அட்டிகா உள்ளிட்ட மத்திய கிரேக்க பகுதிகளில் இருந்த வெளியேறியது அகாயியன் முடியாட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

 

லோனியர்களின் நெசவு தொழில் உயர்தரமானதாக இருந்தது. கம்பளி மற்றும் லினெனில் இருந்து லேசான உடைகளை நெய்தனர். கி.மு.8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் மத்தியப் பிரதேச நாடுகள் இடையே விரிவான வர்த்தகத்தை ஏற்படுத்தினார்கள். மேற்கே கவ்ல் பிரதேசத்திலிருந்து கிழக்கே லிபியா வரை அவர்களுடைய வர்த்தகம் பரவியிருந்தது.

 

udaiyin kathai


 

கி.மு.5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் எளிமையான, உயர்தர நுணுக்கங்களோடு அருமையான தரத்தில் உடைகள் தயாரிக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் கிரேக்க இலக்கியம், கட்டடக்கலை, சிற்பவேலைகள் சிறந்திருந்தன. உடைகள் விஷயத்திலும் தரம் மிகுந்திருந்தது. விதவிதமான வடிவமைப்புகள் சுவரோவியங்களில் கிடைக்கின்றன.

 

பாரம்பரிய கிரேக்க உடைகள் போர்த்தும் வகையிலும், கொஞ்சமாய் தைக்கும் வகையிலும் இருந்தன. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான உடைகளே இருந்தன. ஆனால், உடலைச் சுற்றி போர்த்தி அணியும் விதம் மாறியிருக்கும். அழகிய ரிப்பன்கள், ஊசிகள் கொண்டு அந்த உடையை இணைத்தனர்.

 

அந்த உடைகள் மொத்தமாக இயற்கையானவை. இந்த உடையை அணிபவர்கள் அதை நுணுக்கத்தோடு கையாண்டனர்…

 

 

முந்தைய பகுதி:

மெஸபடோமியருக்கு கம்பளிதான் எல்லாம்!!! உடையின் கதை #7
 

Next Story

மெஸபடோமியருக்கு கம்பளிதான் எல்லாம்!!! உடையின் கதை #7

Published on 25/07/2018 | Edited on 26/07/2018

நைல் நதி சமவெளியில் எகிப்து நாகரிகம் மலர்ந்து வந்த வேளையிலேயே மெசபடோமியாவில் யூப்ரடிஸ், டைகிரிஸ் நதிக்கரையோரம் புதிய நாகரிகம் ஒன்று பிறந்தது. மெசபடோமியா என்பது இன்றைய இராக்கைக் குறிக்கும். இங்கு உருவான நாகரிகம் பல்வேறு குழுக்களால் ஆட்சி செய்யப்பட்டது.


 

udaiyin kathai


 

கி.மு. 3000களில் தொடங்கி கி.மு. 2000ம் வரை சுமேரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். கி.மு. 2350 முதல் கி.மு.2218 வரை அக்காடியர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. கி.மு.1894 முதல் கி.மு.1595 வரை பாபிலோனியர்கள் ஆட்சிசெய்யத் தொடங்கினர். கி.மு. 1380 முதல் கி.மு.612 வரை அசிரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது. கி.மு. 550 முதல் கி.மு. 330 வரை மகா சைரஸ் என்பவரின் தலைமையில் பெர்சியர்கள் மெசபடோமியாவை கைப்பற்றி ஆட்சி செய்தனர்.

மெசபடோமியாவில் மனங்கவர்ந்த உடை நாகரிகம் உருவாகி இருந்தது. இங்கு உருவாகியிருந்த உடை நாகரிகத்தின் மிச்சங்கள் சிலைகளிலும், மண் பாண்டங்களிலும், கல்வெட்டுக்களிலும், அரச குடும்பத்தினர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளிலும் காணப்படுகின்றன. இந்தப் பிரதேசத்தில் ஜவுளித் தொழில் வளர்ச்சியடைந்திருந்ததை இந்த ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.

 

udaiyin kathai


 

தொடக்க கால நாகரிகங்கள் விலங்குகளின் தோலை பயன்படுத்தி தங்களை பாதுகாக்கக் கற்றிருந்தனர். விரைவிலேயே கம்பளியையும், வெள்ளாடுகளின் ரோமத்திலிருந்தும் உடை நெய்வது எப்படி என்பதை கற்றுக்கொண்டனர். எகிப்தியர்கள் மெல்லிய லினன் உடைகளை விரும்பி அணிந்த வேளையில், மெசபடோமியாவை மையமாகக் கொண்ட  சுமேரியர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களும் கம்பளியால் செய்யப்பட்ட கனமான உடைகளை விரும்பினர்.

ஏனென்றால் மெசபடோமியாவில் செம்மறி ஆடுகளை வளர்த்து அவற்றின் ரோமங்களை சேகரித்து சொந்த உபயோகத்துக்கும் ஏற்றுமதிக்கும் பயன்படுத்தினர். மெசபடோமியர்களின் பாரம்பரிய உடை கம்பளியால் செய்யப்பட்ட பாவாடை ஆகும். காலப்போக்கில் ஆங்கில எழுத்து  ‘ட்டி’ வடிவத்தில் அவர்களுடைய உடை அமைந்தது. மார்புப் பகுதிக்கு சால்வைகளை போர்த்திக் கொண்டனர். உடைகளிலும் சால்வைகளிலும் பின்னல் வேலைப்பாடுகள் இடம் பெற்றன.  

சாயத்தை பயன்படுத்தியது குறித்து எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால், தொல்லியல் அறிஞர்கள் சிலர், மெசபடோமியர்கள் வண்ணங்களை உபயோகித்து துணிகளை பயன்படுத்தியதற்கு ஆதாரங்கள் இருப்பதாக கூறுகின்றனர். பல்வேறு வகை வண்ணங்களில் உடைகள் தயாரிக்கப்பட்டதாகவும், எந்த நிகழ்ச்சிக்கு எந்த வண்ணத்தில் உடையணிய வேண்டும் என்பதை மெசபடோமிய மதத்தலைவர்கள் முடிவு செய்தனர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆண்கள் தாடி வைத்து தலைப்பாகை வடிவத்தில் தொப்பி அணிந்தனர்.

 

udaiyin kathai


 

மெல்லிய லினென் துணிகளை நெய்வதில் நவீனகால திறமைக்கு நிகராக இவர்கள் திறமை பெற்றவர்களாக இருந்தனர். இத்தகைய ஆடம்பரமான துணிகளை செல்வந்தர்களும், மதத் தலைவர்களும், கடவுளின் சிலைகளும் மட்டுமே அணியமுடிந்தது. மென்மையான பருத்தித் துணிகள் கி.மு.700களில் அசிரியர்கள் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. பட்டுத்துணிகள் மிகவும் தாமதமாகத்தான் அறிமுகமாகின. பெண்கள் முகத்தை மறைக்கும் வகையில் உடையணிந்தனர். இந்தப்பழக்கம் மத்தியக் கிழக்கு நாடுகளில் இன்றுவரை தொடர்கிறது.

 

 


திருமணம் ஆன பெண்கள் மட்டுமே இத்தகைய உடையை அணிய அனுமதிக்கப்பட்டது. அடிமைகளும் பாலியல் தொழிலாளர்களும் இந்த உடையை அணியத் தடைவிதிக்கப்பட்டது. கி.பி. 20ஆம் நூற்றாண்டு வரை எகிப்திலும் அரேபியாவிலும் மெல்லிய துணியால் முகத்தை மூடியிருப்பது உயர்ந்த சமூக அந்தஸ்த்துக்கும் பெண்கள் நாகரிகத்துக்கும் அடையாளமாக கருதப்பட்டது. ஆனால் இப்போது, பர்தா எனப்படும் உடைகளின் முக்கியத்துவம் அரபு நாடுகளில் குறைந்து வருகிறது.

பெர்சியர்கள் தற்போதைய ஈரானில் மையம் கொண்டு தங்கள் பேரரசை நிறுவினர். கி.மு. 6ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்தப்பேரரசு மத்திய கிழக்கு மற்றும் எகிப்து வரை பரவி இருந்தது. பெர்சியர்கள்தான் இரட்டை உடை வடிவமைப்பை அறிமுகப்படுத்தினார்கள்.

 

 


இடுப்புக்கு கீழே ட்ரவுசர்களாகவும் மார்புப்பகுதிக்கு கோட் வடிவிலும் இந்த உடை இருந்தது. இவை தொடக்கத்தில் விலங்குகளின் தோலைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன.

இந்த உடை அணிவதற்கு இலகுவாகவும் குளிருக்கு இதமாகவும் இருந்தது. எனவே மத்திய ஆசியா மற்றும் வடக்கு ஐரோப்பாவில் இது பிரபலம் அடைந்தது. குதிரையேற்றத்திற்கு இந்த ட்ரவுசர்கள் வசதியாக இருந்தன. அந்த தகுதியிலேயே சீனா, இந்தியா ஆகியவற்றுக்கும் இந்த உடை வடிவமைப்பு பரவியது.
 

இதில் குறிப்பிடத்தகுந்த சுவாரசியமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. அதாவது, வரலாற்றுக் காலத்தில் ட்ரவுசர்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தமாக ஒருபோதும் இருந்ததில்லை. சீனாவில் ஆண்களும் பெண்களும் குறிப்பாக நிலத்தில் வேலைபார்ப்பவர்கள் ட்ரவுசர்களையே அணிந்தனர்.

 

 


இன்றைய துருக்கியை மையமாக் கொண்டு நிறுவப்பட்ட ஒட்டாமன் பேரரசில் பெண்கள் ட்ரவுசர்களை அணிந்தனர். ஐரோப்பிய கலாச்சாரத்தில்தான் ட்ரவுசர்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் என்கிற போக்கு இருந்தது.

மெஸபடோமியன் உடை நாகரிகத்தில் முடிச்சுகள் வைத்தும், சுருள்கள் வைத்தும் தைத்து அணிவது தொடர்ச்சியாக நீடித்தது.


முந்தைய பகுதி:

எகிப்திய அடிமைகளுக்கு உடையில்லை! உடையின் கதை #6