Skip to main content

வெளிநாட்டு ஹவுஸ் ஓனர்; பறிபோன வீடு - டிடெக்டிவ் யாஸ்மின் புலனாய்வு: 13

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

lady-detective-yasmin-case-explanation-13

 

வீட்டு உரிமையில் ஏற்பட்ட பிரச்சனை பற்றியும் அதைப் புலனாய்வு செய்தது பற்றியும் குறித்து துப்பறிவாளர் யாஸ்மின் விவரிக்கிறார்

 

இந்த வழக்கு பற்றி நான் விவரிப்பது பலருக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும். வெளிநாட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் தமிழ்நாட்டில் உள்ள தங்களுடைய வீட்டை ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். மாதம் தோறும் வீட்டு வாடகையை அக்கவுண்டில் செலுத்தி விட வேண்டும். ஆனாலும், சரியான நேரத்தில் அவர்கள் வாடகை செலுத்தவில்லை. "ஆறு மாதமாக வீட்டில் குடியிருந்தவர்கள் வெளிநாட்டு ஹவுஸ் ஓனருக்கு எந்த வகையிலும் தொடர்பிற்கு அவர்கள் சுத்தமாக வரவில்லை. திடீரென வெளிநாட்டு ஹவுஸ் ஓனருக்கு கோர்ட்டிலிருந்து ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்திருக்கிறார்கள். 

 

அதாவது “இது எங்களுடைய சொத்து, எங்களை ஏமாற்றி இந்த சொத்தை வாங்கிவிட்டீர்கள்” என்று ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்" என்றும் அது குறித்து விசாரித்து சொல்ல வேண்டும் என்றும் வெளிநாட்டு ஹவுஸ் ஓனர் தரப்பிலிருந்து எங்களிடம் கூறினர். இந்த வழக்கை நாங்கள் எடுத்துக்கொண்டோம். 

 

குறிப்பிட்ட அந்த வாடகை இருக்கும் குடும்பத்தை நாங்கள் பின்தொடர்ந்தோம். உண்மையில் இப்போது அந்த வீட்டில் குடியிருக்கும் பெண்ணின் கணவரிடம் இருந்துதான் வெளிநாட்டு ஹவுஸ் ஓனர்கள் வீட்டை வாங்கியுள்ளனர். அந்த கணவரோ லிவிங் டுகெதர் உறவில் அந்த பெண்ணுடன் இருந்துள்ளார். அதன் பிறகு அந்த நபர் இறந்துவிட்டார். அதனால் வாடகை கொடுக்காமல் அந்த பெண் இருந்து விடலாம் என்று நினைத்திருக்கிறார்.

 

ஆனால் "என் கணவரை ஏமாற்றி இந்த சொத்தை வாங்கிவிட்டனர்" என்று அவருடைய உண்மையான குடும்பத்தினர் நோட்டீஸ் அனுப்பினர். இது வெளிநாட்டு ஹவுஸ் ஓனருக்கு திடுக்கிட வைத்த தகவலாக இருந்தது. வெளிநாட்டில் இருந்து சொத்து வாங்குபவர்கள் ஆவணங்கள் அனைத்தையும் முழுமையாக பரிசோதித்து ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா? இந்த சொத்திற்கு வேறு வாரிசுதாரர் இருக்கிறார்களா என்பதையெல்லாம் பரிசோதித்து வாங்க வேண்டும். 

 

ஏலத்தில் இருக்கும் சொத்தை போகியத்துக்கு வாங்கி ஏமாந்தவர்களும் நிறைய இருக்கின்றனர். அதன் பிறகு வீடும் இல்லாமல், பணமும் இல்லாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் நம் அனைவருக்கும் தேவை.

 

 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.